Wednesday, November 20, 2019

நீலகண்டம்- சரவணன் மாணிக்கவாசகம்

சரவணன் மாணிக்கவாசகம் என்பவர் நீலகண்டம் நாவல் குறித்து எழுதிய ஃபேஸ்புக் குறிப்பை நண்பர்கள் அனுப்பியிருந்தார்கள். அவருக்கு என்னுடைய நன்றிகள். 

நீலகண்டம்- சுனில் கிருஷ்ணன்:

ஆசிரியர் குறிப்பு:

சிறுகதைகள், நாவல்கள், விமர்சனக் கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் என பல தளங்களில் இலக்கிய உலகில் இயங்குபவர்.  தொழில்முறை ஆயூர்வேத மருத்துவர். அம்புப்படுக்கை எனும் சிறுகதைத் தொகுப்புக்காக சாஹித்ய அகாதமியின் யுவ புரஸ்கார் விருது பெற்றவர். 

நீலகண்டம்:

செந்திலும் ரம்யாவும் காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொள்கின்றனர். எல்லோருக்கும் எளிதாக கிடைக்கின்ற குழந்தைப்பேறு இவர்களுக்கு சிரமமான ஒன்றாகிறது. பல ஆண்டு முயற்சிக்குப்பின் ரம்யா கர்ப்பமாகி ஏழாவது மாதத்தில் வலிப்பு வந்து கரு சிதைகிறது. பெண்குழந்தையை தத்து எடுக்கிறார்கள். அது ஆட்டிஸம் குழந்தை. எந்த சிகிச்சைக்கும் சரிவராமல் அப்படியே இருக்கிறாள். விதி சிரிப்பது போல் ரம்யா குறையேதும் இல்லாத ஆண்குழந்தையைப் பெற்றெடுக்கிறாள்.

என் சிந்தனைகள் :

நீலகண்டம் விசமோ, அமிர்தமோ எதுவாயிருப்பினும் தொண்டையிலேயே தங்கியது போல் இந்நூலும் படித்தவர்கள் மனதில் வெகுகாலம் தங்கப்போகிறது. தனித்துவமான மொழிநடை, வித்தியாசமான யுக்திகள், ஆழமான உளவியல் யாவும் கலந்து இந்நாவலை முக்கியமான நாவலாக்குகிறது. படிப்பவர் மனதில் நிச்சயம் பல கேள்விகளை விதைக்கும் நூல் இது. ஆட்டிஸ குழந்தையின் கதையில், குழந்தைகளுடனான உறவு என்ற விசயம் தீவிரமாக அலசப்படுகிறது. அமைதியான நதியில் போகும் ஓடம் போன்ற மணவாழ்க்கை, காலம் தாண்டி கரை சேரும். புயலடித்த பின் தான் தெரியும் ஓடம் எவ்வளவு பாதுகாப்பற்றதென்று. சம்பந்தமில்லாதது போல் சொல்லப்படும் கிளைக்கதைகளுக்கு மையக்கதையுடன் தொடர்பிருக்கிறது. சாகரின் பிறப்பும் அப்படித்தான். அடிக்கடி சரித்திரம் தலைமுறை தாண்டி திரும்புகிறது. ஆட்டிஸக்குழந்தை மனம் அற்புதமாகப் படம் பிடிக்கப்பட்டுள்ளது. சோப்புக்குமுழி போல் சிக்கலில் வெடிக்கும் உறவுகள். சிறப்பின்
 பாலால், தாயும் மனம் திரியும். சுனில் கிருஷ்ணனுக்கு ஐம்பது வயதுக்கு மேல் என்று யாரும் சொல்லியிருப்பினும் நம்பியிருப்பேன். தமிழ் நவீன இலக்கியம் இவர் போன்றவர்களால் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்து கொண்டு தான் இருக்கும். 

பிரதிக்கு :

யாவரும் பப்ளிசர்ஸ் 90424 61472
முதல்பதிப்பு அக்டோபர் 2019
விலை ரூ 270.
Saravanan manicavasagam

No comments:

Post a Comment