Tuesday, December 31, 2019

Notebook - 2019

Well as you might have guessed, this is going to be that one random post in English which i suddenly conjure. Also the other guess, as the title denotes, and is so habitual of me, to reflect at the end of year, this post is going to be a self assessment. Primary purpose is to see what all i have in memory.

Well to start with, this year is an year of addition.We had Sabarmathi, she was born on june 24. Relatively easy delivery for Manasa. 2019 is special, its Ba Bapu 150. Naturally we named her Sabarmathi, she is also called as Pragnya and Raksha. She is indeed sweet and her smiles are the greatest experiences of this year. Sudhir is going to school, we had tough times initially sending him to school. There are so many problems and pressures in our schooling system. I dont know how we are going to bring him up. He is learning things. It is interesting to watch him grow. Once I showed him Hibiscus and rose in our home garden. He showed the Hibiscus and said it is capital rose and the rose is small rose. Children compete with poets. Rather poets are the ones who try to retain the inner child. 

My periamma, padmavathy, we lost her in april. She was at our home since 2001. Such a wonderful and strong woman. She had renal failure and was under dialysis for the past two years. Saw her crumble slowly. It is a big loss to us. We feel it everyday. I do believe sabarmathi is her blessing. I know your wishes are there for us always. My other periamma, eldest sister of my mother who was at tiruvannamalai also passed away this year. I used to go to thiruvannamalai now and then. To see annamalaiyar and go around the hills were some noble motives for the visit but more than that i like her sakkarai pongal preparation. She is a timid personality. Rarely comes out of home. Last year when i went she suddenly packed and came along with me to karaikudi. Three sisters had a time together. They knew that it is not going to be possible in future.

The year ends with construction going on speedily at our first floor. We are constructing and shifting our home hopefully by mid of 2020. The big news is that we are planning to convert our ground floor residence in to an ayurvedic hospital with inpatient facility. But this is no easy going. We had to spend so much money for getting approvals. Became frustrated in loan attempts and decided to shelve the idea. I am not sure whether this is a wise decision to close our deposits and savings and go about the construction. Hopefully we should be able to complete the task. So with the construction of house, my gruhastha duty comes to an end i believe. Of course there are day to day duties. Next two or three years are going to be crucial in terms of finance. Manasa is the big pillar for me to lean on. I hope she takes up the medical work in 2020 giving more space to my creative work. I had an eye treatment for Kerato conus, c3r. Was in rest for a brief period. But that helped. Mother used to read loud stories to me even then, reminding of childhood days. 


The year in several ways a continuation of the previous one, filled with travels. This year had two foreign trips. A trip to singapore and malaysia in may was great. Roamed around the streets of singapore with saran and latha. Naveen drove us to various places in KL. Well spent days indeed. The second trip to Singapore came around in october. This was a wholesome trip. Walked around singapore, went to museums, gardens by the bay. Latha and Saran accompanied here as well. A night trip with C.Mohan, Latha and Kavitha by the side of Singapore river with wonderful lights is a memory i can hardly forget. Then there was a trip to Mumbai, in the month of march for the Gateway litfest at NCPA. it was also a memorable experience. Perumal Murugan came there. Met some other contemporary writers from various states. My room mate was a Telugu writer Sheriff, i was able to converse in telugu. We went to hasarath ali mosque, jehangir gallery and museum. We stayed so near to the gateway hence we went there in the nights and early morning. Had a train trip, listened to all sessions, participated in a session with jerry pinto. Overall it was a memorable experience i would say. Thats the end of aeroplane boasts.

I remember travelling to cuddalore for Natrinai meet organised by Seenu,  Erode meet on short stories was a great experience as well. Went to vivadha pattarai. It was an inspiration to start the 1000 hours reading challenge. I felt immensely happy that this helped a good number of readers to discipline their reading. There were several such efforts by various groups. I went to salem. Met Kumarananthan, satish and siva prasath there. Had a talk on Gandhi. 'Sitril' is another venture i am happy to be part of. We had two events on behalf of sitril. One was at coimbatore organised for M.Goapalakrishnan. I spoke on his short story collection 'piridhoru nadhikkarai'. The other was organised at madurai for Yuvan. I spoke on his short story collections. I went to dindugul to give a talk on gandhi's works. Met prof. A.Marx there. It was a good talk. Made some speeches in All India Radio trichy as well. Happened to attend a discussion on applications of Gandhian principles in day today issues with college students at trichy. Gandhi 150 made me travel to several places. Had one appearance in vijay tv for the year where i sat along Vishal Raja in a discussion on fashion today. Went to nagerkoil twice this year. Once as a guest in UCEN college and second time to interview mahadevan sir. Went to chennai for Akara mudhalvan's book review. Gave a talk at madurai on suresh pradheep's 'Enjum Sorkal'. It was a warm event. Spoke on Perundevi's poems in her book release at chennai. Went to coimbatore to attend Bharatiar university's Yuva Puraskar writers national conference. Talked on the first anniversary of Karaikudi vasagasalai. The last of these travels ended with vishnupuram meet, which was splendid. Apart from these there were several family events which made me travel. Seems like this year is an year of stage talks. This is indeed a case to worry. I want to be a writer who could speak not the speaker who could write., I want to restrict my stage taks for the upcoming year *by the way already scheduled a talk on ayurveda on jan 5 and on bala's book on jan 10).

This year wrote just two short stories and one flash fiction. Both the stories were well received. 2019 January was spent writing 'Neelakantam'. Finally after all the odds I completed the first draft by the end of january. I had to revise two or three times. Happy that the novel is well received. The Gandhi book I translated last year finally came out. A translation of homage to Mahathma published by publication division of India. The other compilation on tamilnadu and Gandhi is yet to see the light. This year happened to read plenty of books in drafts. Naveen's 'Pecchi', Suresh Pradheep's 'Nigazhaa kaalam',  R.Giridharan's 'Kaalathin mudivul olikkum isai', Sureshkumara indhrajith's 'Kadalum vannathupoochigalum', Karthik Balasubramanian's 'Natchathiravaasigal', Suchitra's 'Oli', Nagaprakash's 'Eri', Kaalathugal's novella 'Year zero', Sridhar's 'Katthikaran' and 'Ammavin badhilgal'. It was a pleasure reading these texts. I felt happy to be trusted. Hopefully all these books will be talked about in 2020. 

This year is also a special year for our Marapachi ilakkiya vattam. We had Artist Ramesh Subramanian, Writers Suresh Kumara indrajith, Suresh pradheep, devi bharathy, and poets perundevi, bogan shankar, samraj columnist Aneesh krishnan nayar and samas came to our meetings. It is indeed an year of activity. We organised a Gandhi 150 on the occasion of Karaikudi book fair.    

On the status of country, it is indeed a difficult time in which we live. Every person, every thought is being pushed, polarized. Hope sanity prevails, andlet us have our strength to resist injustice of any form. 

Now coming to 'what can be expected' part..

have stopped playing shuttle, went for cycling and walks, but even that is not happening now. want to resume walking, thats the only time i listen to music. have to get up early for that, have to sleep early. all these things depends on sudhir and sabarmathi's routine now. anyway will try to discipline this.

januray kalachuvadu might have my contribution. wrote an article on gandhi and ayurveda. helped them compile a gandhi special. also sent a translation of tridip suhrudh.

want to bring out a flash fiction / short story collection- pazhuvettaiyar stories.. some 5 to 6 stories had to be added.

The first thing i want to complete is to complete the translation of critical annotated edition of my exp with truth. The pace at which i am moving is very slow. I am desperate to complete the daunting task. 

The next thing is to transcribe and edit the interview i did with dr mahadevan sir and bring it as a book. I think the first half of the 2020 will be spent for these two works. Hope i shall be more disciplined. And i have made up my mind to never take up a non fiction translation here after. Translation should be of secondary priority. 

By the end of the year want to bring out a collection of short stories. I have 4 already in stake. have to write atleast 6 more. 

Then comes the novel project. I have made up my mind to work for a bigger novel. There are atleast 5 themes running in my mind. All these require meticulous reading and working. 

A novel on Gandhi
Novel on 50 years of chettinadu
novel on thiruvadanai jail break during quit india movement
novel on ayurveda history
speculative fiction on gandhian ideals
burma chettinad connection 

 I have made up my mind to write a novel on gandhi. I think it is the need of the time. It will be a different attempt. Hopefully I will begin working this one post june. 

So this is it for now..
Wishing all of you a creative, productive, peaceful, healthy and happy new year. 



Sunday, December 29, 2019

அமுதம் எழும் தருணம்- நீலகண்டம் குறித்து சுரேஷ் பிரதீப்

(தமிழினி இணைய இதழில் சுரேஷ் பிரதீப் எழுதியுள்ள விமர்சன கட்டுரை)

தமிழில் குழந்தைப் பேறின்மை சிக்கலை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட புனைவுகள் பல உள்ளன. குள்ளச்சித்தன் சரித்திரம் மற்றும் மாதொருபாகன் சமீபத்திய உதாரணங்கள். இரண்டும் வெவ்வேறு தளங்களில் இயங்கக் கூடிய நாவல்கள். குள்ளச்சித்தன் நேர்கோடற்ற தன்மை கொண்ட நாவல். மாதொருபாகன் ஒரு யதார்த்தவாத நாவல். ஆனால் இரண்டு நாவலும் ‘பரிகாரம்’ என்ற ஒரு புள்ளியில் இணைகின்றன. குழந்தைப் பேறின்மைக்கு மருத்துவரீதியாகப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனாலும் நம்முடைய மனம் இந்த புறவயக் காரணங்களால் திருப்தியுறுவதில்லை. குழந்தைப் பேறினை ஒரு மங்கலமாக ஒரு வரமாக பார்க்க நம்முடைய மரபு நம்மைப் பழக்கி இருக்கிறது. இன்னும் பல தலைமுறைகள் நீளப்போகும் பிறவிக்கண்ணியில் தன்னை நீடித்துக் கொள்வதற்கான ஒரே வழியாக குழந்தைப் பேறு தான் சொல்லப்பட்டுள்ளது. இது சமூகத்தின் பொது நம்பிக்கையாக இருப்பதால் குழந்தை சார்ந்த பல்வேறு வகையான உணர்ச்சிரீதியான கதைகளை உருவாக்கி அதன்வழியாக நாம் ஒன்றிணைந்து வாழ்கிறோம்.

வாழ்வுமுறை, பொருளாதாரம், கருத்தியல் என சமூகத்தைப் பிரிக்கும் பல கூறுகள் உள்ளன. ஆனால் இந்தக் ‘குழந்தை’ கருத்தியல் நம்மை ஒருங்கிணைக்கிறது. ‘வரவிருக்கும் சந்ததிகளுக்காக’ என்று தொடங்கும் வரிகளில் நம்மால் பெரிய முரண்களைக் காண முடிவதில்லை. மக்கட்செல்வம் என்பது வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுப்பதில் முக்கியமான பங்கு வகிக்கிறது என்று நாம் எண்ணுவதாலேயே அந்தச் செல்வம் அருளப்படாத “புறத்தாரை” நாம் வெறுக்கிறோம். அவர்களை அந்நியப்படுத்திவிட அல்லது குழந்தைபேறின் வழியாக சமூகத்துடன் ஐக்கியப்படுத்தி விட தொடர்ச்சியாக முயல்கிறோம். குழந்தையின்மை மிகப்பெரிய சமூக அழுத்தமாக தம்பதியர் மீது இறங்குவது இந்தப் புள்ளியில் தான். அந்த அழுத்தம் இறங்கிய பிறகு அந்தத் தம்பதியர் சமூக சந்தையின் இறுதிநிலைப் பயனாளர் (end user) கிடையாது. ஒரு மெல்லிய திரையாக அவர்களை எந்தத் தொந்தரவும் செய்யாமல் ஒதுங்கியோ பதுங்கியோ இருந்த மரபு இனியும் தன்னுடைய மறைவை நீடித்துக் கொள்வதில்லை. அது கருணை நிறைந்ததாகவோ கோர முகம் கொண்டதாகவோ வேடம் அணிந்து கொண்டு முன்னே வந்து நின்றுவிடுகிறது.

அன்றாடத்தை நகர்த்த உதவிய தர்க்கங்கள் மரபின் பிரம்மாண்டத்தின் முன்பு தோற்கத் தொடங்குகின்றன. நிச்சயமின்மையை எல்லா திசையில் இருந்தும் எதிர்கொள்ளும் சூழல் உருவாகிறது. குழந்தைப் பேறில்லாதவர்கள் மரபிடம் அடைக்கலம் கொள்ளத் தொடங்குவது இந்தப் புள்ளியில் தான். குழந்தைப் பேறில்லாதவர்கள் தொடர்ச்சியாக மரபுடன் பேரத்தில் ஈடுபடுகின்றனர். தங்களுடையது அல்லாமல் தங்களுடைய முன்னோர்கள் செய்த வரலாற்று பாவங்களுக்காகவெல்லாம் தெய்வங்களிடம் மன்னிப்பு கேட்டு ‘பரிகாரம்’ செய்கின்றனர். இவர்கள் நம்மிடம் சொல்லும் கதை குள்ளச்சித்தன் சரித்திரம் போல மாயத்தன்மை வாய்ந்ததாக இருந்தாலும் மாதொருபாகன் போல யதார்த்தத்தன்மை கொண்டதாக இருந்தாலும் நம்மால் இவர்களுடைய நம்பிக்கையையும் அவர்கள் சொல்லும் கதைக்கு பின்னிருக்கும் அதர்க்கத்தையும் நன்றாகவே விளங்கிக் கொள்ள முடிகிறது. இத்தகைய அதர்க்க வெளிக்கு நம்மை இழுத்துச் செல்லும் கிளர்ச்சிக்காகவே நாம் இந்தக் கதைகளை கேட்கிறோம் என்றும் தோன்றுகிறது.



சுனில் கிருஷ்ணன் தன்னுடைய நீலகண்டம் நாவலின் வழியாக இத்தகையதொரு அதர்க்க கதையைத் தான் நம்மிடம் சொல்கிறார். ஆனால் இந்த நாவலில் குழந்தைப் பேறின்மை ஒரு பகுதி சிக்கலாகவும் குழந்தையைக் கைவிடுதல் மிகுதிப் பகுதியின் சிக்கலாகவும் உள்ளது. இந்த முரண்தான் நாவலில் பலரைக் கதை சொல்ல வைக்கிறது. குழந்தையற்ற தம்பதியரான செந்திலும் ரம்யாவும் முதலில் சொல்லும் யதார்த்த கதைகளும் வேதாளம் விக்ரமனிடத்தில் சொல்லும் மரபுக் கதைகளும் வர்ஷிணியின் வழியாக உணரத்தக்க உலகத்தை முன்வைத்து ஆசிரியரால் சொல்லப்படும் கதைகளும் அங்கத நாடகமும்  குலமரபுக் கதைகளும் சேர்ந்து நாவலுடலைக் கட்டமைக்கின்றன. இப்படி பலர் பேசுவதே இந்த நாவலின் முதன்மையான பலம். விக்ரமனின் தோளில் ஏறி அமர்ந்த வேதாளம் இக்கதையை சொல்லத் தொடங்குகிறது. ஆனால் அடுத்த அத்தியாயத்தில் வழக்கமாக வேதாளம் சொல்லும் ஒரு தன்மையிலான கதை நமக்கு வாசிக்கக் கிடைப்பதில்லை.

ஆட்டிசம் பாதித்த தன் குழந்தையை முதன்முறையாக மருத்துவரிடம் அழைத்து வந்திருக்கும் இரவில் கால்பந்தாட்டம் பார்க்க இயலுமா என்பது குறித்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் சுயம் குறித்த பிரக்ஞையால் வதைபடும் ஒரு ‘நவீனத்துவ’ தந்தையைக் காண்கிறோம். இந்தச் சித்தரிப்பில் இருந்து நாவல் முன்னே செல்வதில்லை. பின்னே செல்கிறது. நகரத்தார் சமூக செந்திலும் பிராமண சமூக ரம்யாவும் காதலிப்பது ரம்யாவின் பெற்றோர், குறிப்பாக தாய் வரலக்ஷ்மியின், எதிர்ப்பை மீறி மணம்புரிந்து கொள்வது அவர்களுக்கு குழந்தையில்லாதிருப்பது, வர்ஷிணியைத் தத்தெடுப்பது என்று முன்னும் பின்னுமான பல நிகழ்வுகள் வாசக ஊகத்துக்கு விடப்பட்டு வாசக ஊகத்தை மறுக்கும்படியான நிகழ்வுகளால் நாவலில் சொல்லப்படுகின்றன.

செந்தில் வர்ஷிணியை மருத்துவரிடம் அழைத்துச் செல்லும் புள்ளியில் இருந்து முன்னும் பின்னுமாக நகர்ந்து நாவலின் யதார்த்த வெளி விரிந்து பரவுகிறது. வேதாளம் விக்ரமனிடம் அறக் குழப்பத்தை உண்டாக்கும் கதைகளைச் சொல்லி முடிவினைக் கேட்பது நாவலின் ஒரு பகுதியாக வருகிறது. வர்ஷிணியின் அக உலகத்தை சொல்லும்படியானதாக அவள் விளையாடும் அலைபேசி விளையாட்டுகள் அவள் பார்க்க நேரும் இடங்கள் என்று ஒரு பகுதி குழந்தைக் கதைகளுக்கான புனைவுத்தன்மையுடன் நகர்கிறது. வர்ஷிணியின் பகுதியைத் தவிர்த்து மற்ற அனைத்திலுமே பெற்றோருக்கும் குழந்தைகளுக்குமான உறவு குறித்து பல்வேறு கேள்விகளை நாவல் எழுப்பிக் கொள்கிறது. வர்ஷிணியின் வழியாக சொல்லப்படும் கதையில் கூட ஆமை முட்டைகளை உண்ணும் பேக்மேன் வழியாக ஏதோவொரு வகையில் குழந்தைப்பேறு கோடிட்டுக் காட்டப்படுகிறது.

திரிபடைதல் என்ற சொல்லின் வழியாக நாவலை விளங்கிக் கொள்ள முடியும் என நினைக்கிறேன். நாவலில் வரும் ஒரு சித்தரிப்பு. ரம்யா காதல் மணம் புரிந்து கொண்டதால் அவள் அம்மா வரலக்ஷ்மி வெகு நாட்களாக ரம்யாவின் மீது வெறுப்புடன் இருக்கிறார். அந்தப் பிணக்கு மெல்லச் சரியாகி ரம்யாவின் குடும்பம் அவளைப் பார்க்க செந்திலுடன் அவள் வசிக்கும் வீட்டுக்கு வருகிறது. ரம்யாவுக்கு பிறந்த மகனான சாகரை அவள் குடும்பம் இயல்பாக ஏற்றுக் கொண்டாலும் அவளது தத்துப்பிள்ளையான ஆட்டிசம் பாதித்த வர்ஷிணியை அக்குடும்பத்தால் ஏற்க முடியவில்லை. வர்ஷிணி அவள் தாத்தாவின் (வரலக்ஷ்மியின் கணவர்) அருகே வந்து நிற்கிறாள். அவள் தலையை வருடிக் கொடுக்க அவர் கையை உயர்த்தும் நேரத்தில் அங்கு கடுமையான மலநாற்றம் பரவுகிறது. அச்சூழலின் நிறம் நேரெதிராகத் திரும்புகிறது. இந்த திரிபுநிலை நாவல் முழுவதும் விரவியிருப்பதைக் காண முடிகிறது. யதார்த்த சித்தரிப்புகளில், புராணக் கதை மறு ஆக்கத்தில், அங்கத நாடகத்தில் என எங்கும் இந்த திரிபு மீண்டும் மீண்டும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

சுரக்கும் விடத்தை உமிழ்ந்து அழிப்பதற்கும் அதை உட்செரித்து தான் அழிவதற்கும் இடையிலான விளையாட்டாக மாறிப்போனது இப்புடவி; தன் கண்டத்தில் விடத்தை நிறுத்தத் தெரிந்தவர்களால் நிகழ்கிறது இவ்வுலகு.

ரம்யாவும் செந்திலும் வர்ஷிணியுடன் தங்களை பொருத்திக்கொள்ள இயலாமல் அல்லாடுவது தான் நாவலின் மைய இழை. நாவலில் இடம்பெறும் பிற அனைத்துக் கதைகளும் வெவ்வேறு வகைகளில் அந்த மைய இழையின் வெவ்வேறு பரிணாமங்களை எடுத்துக் காட்டுவதாக மைய இழையை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளன. ஒரே நிறமுடையதாகத் தென்படும் மணலின் மேற்பரப்பு தோண்டத் தோண்ட வெவ்வேறு வண்ண அடுக்குகளை காண்பிப்பது போல நாவல் இந்த மையச் சிக்கலின் ஆழம் நோக்கிப் பயணிக்கிறது. செந்திலுடைய குடும்பத்தில் பல வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு துர்நிகழ்வு வர்ஷிணியின் தாயான வரலக்ஷ்மியின் உண்மையான அடையாளம் எனப் பல புள்ளிகள் மைய இழையின் சிக்கலை மேலும் மேலும் கூர்மையாக்குகின்றன.

இப்படி இடைவெட்டும் பல கதைகள் நாவலுக்குள் நுழைந்தாலும் அனைத்திலுமே இந்த திரிபடைதல் – விடத்தை உமிழ்வது அல்லது உட்செரிப்பது – மாற்றமில்லாமல் நிகழ்கிறது. முதலில் வரலக்ஷ்மியை ஏற்கும் அலமேலு பின்னர் அவளை கண்காணிப்பவராக உள்ளுக்குள் வெறுப்பவராக மாறிப் போகிறார். அலுமேலுவின் வரலக்ஷ்மியின் மீதான வெறுப்பு ரம்யாவை வேறு வகையில் திருப்பித் தாக்குகிறது. வர்ஷிணியை காணும்போது இவள் தான் தங்களுடைய குழந்தை என ஏற்கும் செந்திலும் வர்ஷிணியும் அவளைத் தங்களுடன் இருத்திக் கொள்ள தொடர்ந்து போராடுகின்றனர். செந்திலின் ரம்யாவின் உறவும் அன்பில் தொடங்கி நாவலின் இறுதியில் திரிபுநிலை நோக்கியே நகர்கிறது.

யதார்த்த தளத்தில் நிகழ்ந்த செந்தில் ரம்யா சார்ந்த அத்தியாயங்களுக்குள் ஒரு கட்டத்தில் வேதாளம் சொல்லும் கதைகளின் பாத்திரங்கள் நுழைவது இந்த மனத்திரிபுகளை எடுத்துக் காட்டுவதாக அமைகின்றன. ரம்யாவிடம் அத்தகைய கற்பனை பாத்திரம் ஒன்று அவளுக்குப் பிறந்த மகனான சாகரை முன்னிட்டு கேள்வி எழுப்புகிறது. செந்திலிடம் தந்தை என்ற அடையாளத்தை பழிவாங்குதல் சார்ந்த கேள்வியை சீராளன் முன்வைக்கிறான். நாவலின் உச்சப்புள்ளியில் வர்ஷிணி காணாமல் போகிறாள். வர்ஷிணி தொலையும் இந்த அத்தியாயம் மிகுந்த நுட்பத்துடன் கட்டமைப்பட்டுள்ளது. செந்திலை ஒரு சுற்றுலாவுக்கு வற்புறுத்திக் கூப்பிடும் நந்தகோபாலின் குணநலன்கள் முன்பே நாவலில் சொல்லப்பட்டு விடுகின்றன. ரம்யாவுடன் இருக்கும் சமயத்தில் வர்ஷிணி தொலைந்து போகிறாள். அந்த அத்தியாயத்தின் முடிவில் செந்தில் “தெய்வம் சார்” என்று சொல்லி நந்தகோபாலின் காலைக் கட்டிக்கொள்கிறான். அதற்கு முதல் வரியிலேயே அவரை அடித்துத் துவைக்கும் வெறி அவனுக்குள் ஊறுவது சொல்லப்படுகிறது. செந்தில் நந்தகோபாலின் காலில் விழுந்தது ஏன் என்பது சங்கடம் தரும் கேள்வி. அதற்கான பதில் நாவலின் இரண்டாம் அத்தியாயத்தில் இருந்தே பூடகமாகத் தொடரவே செய்கிறது.

செந்திலும் ரம்யாவும் தங்கள் தொண்டையில் தங்கிய விஷத்தை உமிழ்ந்து விட்டதாக ஒரு வாசிப்பினை நான் கொடுக்கிறேன். ஆனால் அந்த விஷம் பாற்கடலை கடைவதால் உருவாகக் கூடியது. அமுதம் எழவிருப்பதன் முன்னறிவிப்பு.



சுனில் கிருஷ்ணன் இந்த நாவலில் மரபு சார்ந்த பல கதைகளையும் படிமங்களையும் பயன்படுத்தி இருக்கிறார். அவருடைய பேசும் பூனை கதையில் வருவது போல அலைபேசி விளையாட்டுகள் பலவற்றையும் கதைசொல்லலுக்காக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் இவை எதுவும் சிக்கலுக்கான பதிலாகவோ தீர்வாகவோ அல்லாமல் சிக்கலின் பரிணாமத்தை விளங்கிக் கொள்வதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன. வழக்கமாக மரபின் பதில்களை தீர்வாக முன்வைக்கும் தன்மையில் இருந்து விலகிச் சென்று மரபையே ஒருவிதத்தில் ‘நவீனத்துவ’ப்படுத்தியிருக்கிறார் என்று சொல்லலாம். நம்முடைய மரபுக் கதைகள் காஃப்கா போன்ற நவீனத்துவர்களின் வாழ்க்கை நோக்கின் வழியாக மறு ஆக்கம் செய்யப்பட்டவை போல இந்த நாவலில் இடம்பெறும் மரபுக்கதைகள் தோற்றம் தருகின்றன. காஃப்காவின் புனைவுலகில் தொடங்கி அசோகமித்திரன் வழியாக தமிழில் நிலைபெற்றுவிட்ட தீவிர பிரக்ஞை நிலையினால் ஏற்படும் துயரை பிரதிபலிப்பதாகவே இந்த நாவல் உள்ளது. மரபினை உட்செரித்த அல்லது மரபுடன் உரையாடும் முயலும் தன்மையிலான ஒரு நவீனத்துப் பிரதியாகவே இந்த நாவலை வாசிக்க முடிகிறது.

நேர்கோடின்மை, பலகுரல் தன்மை என பல பின்நவீனத்துவ உத்திகள் பயின்று வந்த போதிலும் நாவலின் மையமான வாழ்க்கை நோக்கு நவீனத்துவம் சார்ந்ததாகவே உள்ளது. இந்த இரட்டை நிலையே நாவலின் பலகீனமாகவும் உள்ளது. மெடியா,சுடலைமாடன், விக்ரமன், வேதாளம் ஏன் சிவன் கூட இந்த நாவலில் நவீனத்துவ தன்மை உடையவர்களாகவே வருகின்றனர். நாவலின் இறுதி அத்தியாயம் நாவலின் மீதான பகடியாக அமைந்து லட்சியங்களில் சுபகற்பனைகளில் நம்பிக்கை இழந்த அந்த விலகல் தன்மையை உறுதி செய்து கொள்கிறது.  ஒரு அத்தியாயத்தில் இருந்து முற்றாக துண்டித்துக் கொண்டு தனித்து தொடர்புறுத்தும் ரசவாதத்தை ஒவ்வொரு அத்தியாமும் செய்திருந்தாலும் அனைத்து கதைகளுக்கும் பின்னிருக்கும் இந்த நவீனத்துவ பிரக்ஞை ஒரு சிறு உறுத்தலே. அதே நேரம் இத்தகைய பிசிறுகளும் உறுத்தல்களும் புனைவுப்போக்கில் ஒரு தனிப்பாதையை திறக்கும் சாத்தியங்கள் கொண்டவை என்பதையும் மறுக்க இயலாது.

தசையழிவு நோயால் பாதிக்கப்பட்ட வான்மதி என்ற நம்பிக்கையை இழக்காத ஒரு லட்சியவாதியிடமிருந்து செந்தில் விலகி விலகி ஓடுகிறான். அவர்களுடனான அண்மை தன்னுள் காப்பாற்றி வந்த ஏதோவொன்றை உடைத்து விடும் என்று அஞ்சுகிறான். முழுமையாக எந்த தியாகத்தையும் செய்ய இயலாத ஆனால் அப்படி எத்தியாகமும் செய்து துயரை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் உளவுறுதி இல்லாததாலேயே துன்புறும் ஒரு தலைமுறை பிரதிநிதிகளின் கதையாக நீலகண்டம் நிலைபெறுகிறது. உட்செரிப்பதை விட உமிழ்வதே தீர்வென்று நம்பும் மனிதர்களின் கதையாகவும்.

நீலகண்டம்- எஸ். அஷோக்

good reads தளத்தில் எஸ். அசோக் நீலகண்டம்  குறித்து எழுதியுள்ள வாசிப்பனுபவம் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது. அஷோக்குக்கு நன்றி. 



** spoiler alert ** Suneel Krishnan’s Neelakandam is a take on the problem of childlessness and rising children with autism. Senthil and Ramya from different social backgrounds end up marrying after being in love contrary to their parents wishes. Ramya especially has to face of the wrath of her mother who completely shuns any contact with her daughter post marriage.
Ramya and Senthil adopt a daughter who is affected by autism which they come to know after she grows up. The novels chapters are non linear, the chapters oscillate between mythological stories, stories from their past and the current struggles of the family.

Ramya and Senthil are at present completely alienated, a growing tension exists between them owing to the condition of her daughter Varu. They also have a biological son which complicates further their relationship to Varu. They are constantly reminding each other of their failings to Varu and the pressures of society complicates things further.

The relationship portion, their alienation comes out well, the mythological stories, the vedhalam portion creates a parallel between the stories its narrating and what the couple are going through.

In a dramatic in the penultimate chapter we see Varu is lost in a trip and it seems the parents seem to have intentionally done, at-least both of them seem to think . In a sense they are stuck in this duality where in they are not sure either to swallow the poison and destroy oneself or to spit it out. The poison is ever stuck in the throat like that of the Neelakandam.

The ending seems to indicate the novel itself is written by Varalakshmi, dedicating it to Senthil and Ramya. The novel ends in a point of vagueness as the author is unable to understand the purpose of life of someone like Varalakshmi and seems to end it with the genius way.
The novel is postmodern in its form and the multiple voices, nonlinear storytelling makes it compelling. Although it uses mythology and folklore the novel is modernist in its documenting the lives of Senthil and Ramya and even in its concerns.


Tuesday, December 24, 2019

காந்தியின் பாதை

டி.பி(D.B)  என்றழைக்கப்படும் டி. பாலசுந்தரம் அவர்கள் கோவையின் இலக்கிய மற்றும் தொழில்முனைவோர் முகங்களில் ஒருவர். தொழில்முனைவோருக்கு நடத்தும் மாத இதழில் காந்தி குறித்து அவருடைய 150 பிறந்தநாளை முன்னிட்டு ஒரு வருடமாக தொடர் கட்டுரைகள் வெளிவந்த சூழலில் நிறைவு கட்டுரையாக இந்த கட்டுரை இடம்பெற்றது.

---  

காந்தியின் ‘அறங்காவலர்’ யோசனையைப் பற்றி அனைவருக்கும் ஓரளவு பரிச்சயம் இருக்கும். பொதுவுடைமை அலை இந்தியாவில் எழுச்சிப்பெற்ற விடுதலையை ஒட்டிய இறுதி ஆண்டுகளுக்கு முன்னரே காந்தி அறங்காவலர் முறையை பற்றி சிந்தித்துள்ளார். மிக முக்கியமான வேறுபாடு என ஒன்றைச் சொல்லலாம் என்றால் காந்திய வழிமுறையின் நோக்கம் அன்பு மற்றும் கருணையைச் சார்ந்தது. மனிதர்கள் தன்னலத்தை துறந்து மேலெழ முடியும் எனும் நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டது. காந்தி பகல்கனவு காண்பவர் அல்ல. அவருக்கு மனிதர்களின் இருண்ட பக்கங்கள் நன்கு பரிச்சயம். அவருடைய சுய சரிதையில் பல இடங்களில் மக்கள் திரளின் மீதான விமர்சனத்தை நாம் காண முடியும். காந்தி செல்வந்தர்களையும் தொழில் முனைவோரையும் வெறுக்கவில்லை. அறிவியல் மற்றும் நவீன தொழில்நுட்பத்தை முழுக்க நிராகரிப்பவர் என்று முத்திரைக்குத்துவதும் பிழை. சிங்கர் தையல் இயந்திரத்தை ஒரு பெரும் சாதனை என்று எண்ணினார். ராட்டையும் ஒரு இயந்திரம் என்பதை உணர்ந்தவர் தான். அவருடைய விமர்சனங்கள் தொழில்நுட்பம் உலகை சுரண்டப் பயன்படுத்தப்படுகிறது எனும் நோக்கிலிருந்து எழுவது. பொருள் ஈட்டும் திறன் இயல்பிலேயே வாய்க்கப் பெற்ற ஒருவரை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றே அவர் கருதினார். வாழ்நாள் முழுவதும் செல்வந்தர்களின் உதவி அவரை வந்து சேர்ந்தபடிதான் இருந்தது. ஆனால் அது அவருடைய அற நிலைப்பாடுகளை பாதித்ததில்லை. அம்பாலால் சாராபாயை எதிர்த்துதான் அகமதாபாதின் மில் தொழிலாளிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக காந்தி செயல்பட்டபோதும் அவர் அம்பாலால் சாராபாயை வெறுக்கவில்லை. எளிதாக இதை ஒரு போலி நிலை என சொல்லிவிடலாம் ஆனால் அது உண்மையல்ல. கோச்ரப் ஆசிரமத்தில் தக்கர்பாபாவின் சிபாரிசின் பேரில் ஒரு ஹரிஜன குடும்பம் சேர்த்துக்கொள்ளப்பட்டபோது அவருக்கு நிதியளித்தவர்கள் கடும் அதிருப்தி அடைந்தார்கள். நிதி உதவியை நிறுத்தினார்கள். காந்தி ஹரிஜன மக்கள் வசிக்கும் இடத்திற்கே அடுத்த மாதம் புலம் பெயர்ந்து விடலாம் என முடிவு செய்திருந்த சூழலில் யாரோ ஒரு சேத் 13000 அளித்துவிட்டு செல்கிறார். பிர்லா, டாட்டா என அன்றைய பெரும் செல்வந்தர்கள் காந்தியுடன் இணைந்து பணியாற்றினார்கள். ‘இந்திய சுயராஜ்ஜியம்’ நூலின் இறுதியில் ஒவ்வொருவரிடமும் சிலவற்றை சொல்கிறார். இந்திய செல்வந்தர்களிடமும் அவருக்கு சொல்வதற்கு சில இருந்தன. காந்தி இந்திய வணிகர்களை இயல்பாக ஏற்றுக்கொண்டாலும் இந்திய மகாராஜாக்களை ஏற்கவில்லை. அவர்களை கடுமையாக விமர்சித்தார். அவர்களுடைய ஆடம்பரமும் அதிகார தோரணையும் அவரை கடுமையாக எரிச்சல் படுத்தியது. வாரணாசி இந்து பல்கலைக்கழக கால்கோள் நாட்டு விழாவில் இப்படி ஆடம்பரமாக அமர்ந்திருக்கும் அரசர்களை கடுமையாக விமர்சித்து மேடையிலேயே உரையாற்றினார். இந்திய சுயராஜ்ஜியம் நூலில் ‘எனக்கு மட்டும் போதிய ஆற்றல் இருந்தால் ஆங்கிலேயர்களுக்கு எதிராக எப்படி போராடுகிறேனோ அதேயளவு தீரத்துடன் இந்திய அரசர்களுக்கு எதிராகவும் போராடுவேன்’ என சொல்கிறார். காந்தியை புரிந்துகொள்ள இது உதவும். அவருக்கு வணிகர்கள் மீது இணக்கமும் மன்னர்களின் மீதான விலக்கமும் ஏன் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். செல்வம் மன்னர்களைப் பொறுத்தவரையில் தேங்கி விடுவதாகவும், அதிகாரத்தையும் வீண் ஆடம்பரத்தையும் பறைசாற்றுவதாகவும் இருப்பதே அவருடைய சிக்கல். பொருள் ஈட்டுவது சிக்கல் அல்ல அந்த பொருளை எப்படி செலவு செய்கிறோம் என்பதே அவருடைய முதன்மை கவலை. 

காந்தியின் ஆடை வெவ்வேறு காலகட்டங்களில் பரிணாமம் அடைந்தது. தென்னாபிரிக்காவில் இறுதி போராட்டத்தின்போது ஒப்பந்த கூலிகளின் எளிய ஆடையையே தனது ஆடையாக தேர்ந்தார். மதுரையில் அரையாடை உடுத்தத் தொடங்கிய கதை நாம் அறிந்ததே. தேவைக்கு அதிகமாக தன்னிடம் எதுவும் இருக்கக்கூடாது என்பது அவருடைய எண்ணம். இந்தத் தேவைகளை பொதுப்படுத்த முடியாது என்பதையும் அவர் அறிவார். இதுவும் பொதுவுடைமை சித்தாந்தத்திலிருந்து திண்ணமாக வேறுபடும் இடம் என சொல்லலாம். காந்திக்கு குற்ற உணர்ச்சி வெகுவாக உண்டு. இத்தனைக் கோடி மனிதர்கள் போதிய உடையின்றி இருக்கும்போது அவர் மட்டும் கூடுதலாக அணிய வேண்டியதில்லை என கருதினார். வட்டமேஜை மாநாட்டின்போது அவருடைய உடையைப் பற்றி கேட்கும்போது “எனக்கும் சேர்த்து உங்கள் மன்னர் உடை அணிந்திருக்கிறாரே” என சொன்னதை வேறு கோணத்தில் புரிந்து கொள்ளலாம். மன்னர் காந்திக்கு மட்டும் அல்ல ஏழை இந்திய குடிகள் அனைவருக்கும் சேர்த்து உடை அணிந்திருந்தார். 

பென்சில் சொல்லும் செய்தி, பசுமாடு சொல்லும் செய்தி என ஆளுமை வளர்ச்சி திறனுக்கான சந்தை எல்லாவற்றையும் தன் கோணத்தில் வளைத்து சந்தைப்படுத்தி கொள்கிறது. காந்தி, திருவள்ளுவர் என எவரையும் நாம் விட்டுவைக்கவில்லை. இது பிழை என கொள்ள முடியாதுதான் ஆனால் காந்தியை ஆளுமைத்திறன் வளர்க்கும் பண்டமாக குறுக்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏனெனில் மிக முக்கியமாகவும் கவனமாகவும் காந்தியிடம் இருக்கும் கலகக் குரலை தவிர்த்துவிடுகிறது. ஆஷிஷ் நந்தி ஒரு கட்டுரையில் எழுதுகிறார் “பல ஆண்டுகளுக்கு முன்னர் நடத்த ஒரு கூடுகையில் எனது நண்பரும், காந்தியின் பெயரருமான ராமச்சந்திர காந்தி மீண்டும் மீண்டும் காந்தியை இந்தியாவில் வாழ்ந்த ஒரு துறவி என பேசிக் கொண்டிருந்தார், அவருடைய அந்த துறவுத்தன்மையால்தான் இந்திய பொதுமக்களின் வாழ்வை அவரால் மாற்ற முடிந்தது என்றார். உமாசங்கர் ஜோஷி (குஜராத்திய எழுத்தாளர்) இதைக் கேட்டு எரிச்சலுற்றார்  “.காந்தியின் பெயரரே... இந்தியாவில் நூற்றுக்கணக்கான துறவிகள் உருவாகியுள்ளனர்..காந்தியின் தனித்தன்மை என்பது அவர் புனிதர் என்பதனால் வந்ததல்ல, காந்தியின் தனித்தன்மை என்பது இதுதான், அவர் ஒரு அரசியல்வாதியும்கூட.”

காந்தியிடமிருந்து விமர்சனமற்ற கீழ்படிதலை அல்ல அன்பும் மரியாதையும் கலந்த, வெறுப்பும் முன்முடிவுகளும் அற்ற கீழ்படியாமையை கற்றுக்கொள்ள வேண்டும் என எண்ணுகிறேன். அப்படியொரு குரல் எழும்போது அதை இயல்பாகவும் நேர்மையாகவும் எதிர்கொள்ளும் திறன் நமக்கு வேண்டும். நமக்கு மேலான அதிகார படிநிலைகளின் நெருக்கடிகளை நாம் எதிர்கொள்ளும்போது நமக்கு இந்த உறுதியும் தெளிவும் தேவை என நம்புகிறேன். 

காந்தி நவீன தொழில்மய நாகரீகத்தை நிராகரிக்கிறார். நடைமுறையில் நாம் காந்தியிடமிருந்து வெகுதொலைவு கடந்து வந்துவிட்டோம். நம்மால் ஒருபோதும் திரும்ப முடியாத தொலைவு. திரும்பத்தான் வேண்டுமா என்றால் அதுவும் விவாதத்திற்கு உரியதே. ஆனால் காந்தி நவீன நாகரீகத்தின் மீது வைத்த விமர்சனங்கள் அப்படியேதான் உள்ளன. காந்தியின் விமர்சனங்கள் நம்மை தொந்தரவு செய்பவை. சீண்டுபவை. ஆழுள்ளத்தில் உண்மை உண்மை என எதிரொலிப்பவை. ஆனால் ஒரு சமூகமாக நம்மால் இன்றைய நவீன வாழ்வை கைவிட்டு சென்றுவிட முடியாது என்பதே நிதர்சனம். தொழில்நுட்பத்தின் சிக்கலை தொழில்நுட்பமே தீர்க்கும். ஆனால் நாம் சிக்கலை தீர்க்க மேலதிக தொழில்நுட்பத்தை, மேலும் சிக்கலான தொழில்நுட்பத்தை நாடுகிறோம். அவை அதைவிட பெரும் சிக்கல்களை தருவிக்கின்றன. ஒருவகையில் நாய்வாலை நிமிர்த்த முயலும் பூதத்தின் கதைதான் நவீன நாகரீகத்தின் கதையும்கூட. இதற்கான மாற்றுவழிகளை நாம் கண்டடைய வேண்டும். மேலும் பொருத்தமான, ஆபத்தற்ற அல்லது குறைந்த ஆபத்துடைய, எளிய தொழில்நுட்பங்களை வளர்த்தெடுக்க வேண்டும். Human scale technology பற்றிய உரையாடல்கள் உலகெங்கும் நிகழ்ந்து வருகின்றன. தற்சார்பு பொருளாதாரம் குறித்த விவாதமும் பரவலாக நிகழ்ந்து வருகிறது. இத்தளங்களில் தொடர்ச்சியான விவாதங்கள் நிகழ வேண்டும். காந்தி “என் எழுத்தே என் செய்தி” என சொல்லவில்லை “என் வாழ்வே என் செய்தி” என்றே கூறியிருக்கிறார். காந்தி இந்திய சுயராஜ்ஜியம் நூலில் ரயில், மருத்துவர், வழக்கறிஞர் என எல்லாவற்றையும் கடுமையாக விமர்சிக்கிறார். பிரிட்டிஷ் அரசின் கொடை என போக்குவரத்தும், நவீன மருத்துவமும், நீதியமைப்பும் நம்பப்படும் சூழலில் அவர் அம்மூன்றையும் நிராகரிக்கிறார். ஆனால் அவர் வாழ்நாள் முழுவதும் ரயிலை பயன்படுத்தினார். அவசியமான சமயங்களில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். நீதி மன்றத்தோடும் நீதி அமைப்புகளோடும் தொடர்பிலேயே இருந்தார். காந்தியின் கருத்துக்களை வாழ்வுடன் உரசியே பொருள் கொள்ள வேண்டும். காந்தி மொத்த வாழ்வையும் சத்தியத்தை அடைவதற்கான சாதனமாகவே பார்த்தார். அரசியல் செயல்பாடு, உணவு பழக்கங்கள், அகிம்சை என எல்லாவற்றையும் அந்த நோக்கிலேயே நாம் உணர்ந்துகொள்ள முடியும். சத்திய சோதனையில் அவர் ஆட்டுப்பால் குடிக்க நேர்ந்த நிகழ்வைப் பற்றி சொல்லும்போது சத்தியமா அகிம்சையா என வரும்போது சத்தியத்தின் பாதையையே தேர்வு செய்தார். தானொரு பூரண அகிம்சாவாதி ஆக முடியாது என்பதை வருத்தத்துடன் பதிவு செய்கிறார். காந்தியை நெருக்கமாக்குவது அவர் கருத்துக்கள் என்பதைக் காட்டிலும் அவருடைய முரண்பாடுகள். அதுவே அவரை மானுடராக்குகிறது. பெரும் ஆற்றல்களுக்கு மத்தியில் உறுதியுடன் (அல்லது ஒருவித அசட்டுத்தன்மையுடன்) நிற்க முயன்று தத்தளிக்கும் மனிதராக, ஒரு காவிய நாயகனாக ஆக்குகிறது. 

காந்தி இலக்கிற்கும் வழிமுறைக்கும் இடையிலான பிணைப்பைப் பற்றி வலியுறுத்துகிறார். வினை விதித்தவன் வினை அறுப்பான், திணை விதைத்தவன் திணை அறுப்பான் என நாமறிந்த பழமொழி தான். நவீன வாழ்வில் இலக்கடையும் வெறி வழிமுறை குறித்த பிரக்ஞையை நீக்கி விடுகிறது. சரியான இலக்காகவே இருந்தாலும் கூட அதை அடைய அறமற்ற வழிமுறைகளை தேர்ந்தெடுக்கும்போது இலக்கு பொருள் இழந்து போகிறது. நம் வாழ்வில் இக்கட்டான நிலைகளில் இயன்றவரை இலக்கிற்கும் வழிமுறைக்கும் இடையிலான ஒர்மையை பேண இயலுமா என பார்க்க வேண்டும். காந்தி தோல்வியை ஏற்றுக்கொள்பவர். அதற்காக முழு பொறுப்பையும் தானே ஏற்பவர். செளரி சௌரா நிகழ்ந்தபோது போராட்டத்தையே நிறுத்தினார். அவருடைய குரலில் பலமுறை ஐயமும் சுய குழப்பமும் ஏற்படுவதுண்டு. பொதுவாக ஆளுமை வகுப்புக்களில் இவை எதிர்மறை இயல்புகள் என்றே நமக்கு கற்றுக்கொடுக்கப் படுகின்றன. காந்தியின் ஐயமே அவரை பெரும் தலைவராக ஆக்குகிறது என எனக்கு தோன்றுகிறது. ஹிட்லரின் உறுதி கொடுத்த பேரழிவின் பின்புலத்தில் இதை நாம் புரிந்துகொள்ள முடியும். தலைமைப் பண்பு குறித்த வரையறைகளை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். வெளிமுக பண்புடையவர்களே சிறந்த தலைவர்கள் அல்லது அத்தகைய இயல்புகளையே நாம் தலைமைத்துவத்தின் இயல்புகளாக கூறிவருகிறோம். உள்முக (Introvert) மனப்போக்கு கொண்டவர்களும் சிறந்த தலைவர்களாக ஆக முடியும். அவர்களுக்கு மக்களின் மீதான கரிசனமும் கருணையும் அதிகம். அதுவே அவர்களின் இயங்கு சக்தியும்கூட.  

 காந்தியை மேற்கோள் வழியாக மட்டும் புரிந்து கொள்வதைக் காட்டிலும் அவருடைய வாழ்வை உள்வாங்கி, படைப்பூக்கத்துடன் அணுகி அவருடைய முறைமைகளை நமதாக்கிகொண்டு நம் வாழ்வில் அவருடைய தடத்தை பின்பற்றிச்செல்ல முடிவதே அவரிடம் நாம் ஏதேனும் பெற்றுக்கொண்டோம் என்பதற்கான தடமாக இருக்கக்கூடும்.  

Thursday, December 12, 2019

ஆளில்லா ரயில்வே கேட்களில் தாழ்ந்து உயரும் அருட்கரங்கள்: பெருந்தேவியின் கவியுலகம்

(தமிழினி இதழில் வெளியான கட்டுரை) 

ஒரு தடித்த ஆய்வு நூலுக்கில்லாத கண்கள் ஒரு கட்டுரைக்கில்லாத உதடுகள் திமிர் பிடித்த கவிதைக்குண்டு – பெருந்தேவி

1
ஒரு புனைவெழுத்தாளருக்கு கவிதை என்ன அளிக்கும்? முதன்மையாக மொழியின் வார்ப்புருக்களைச் சிதைத்து அர்த்தங்களை உருக்கும். அவருடைய மொழியையும் சிந்தனையையும் பார்வையையும் தேய்வழக்காகாமல் காக்கும். அவருடைய உணர் கொம்புகளில் படிந்திருக்கும் பிசினை நீக்கித் துலங்கச் செய்யும். பெருந்தேவியின் கவிதை மேலதிகமாக ஒன்றை எனக்குச் செய்தது, மேற்சொன்ன வரிகளை எழுத்தாளன், அவன் என்று ஆண்பால் விகுதியிலேயே இதற்கு முன்பு வரை எழுதி இருக்கிறேன். அதை மறுபரிசீலனை செய்ய வைத்தது.

ஆயுர்வேதத்தில் ‘பிரகிருதி’ என்றொரு கோட்பாடு உண்டு. முக்குற்றங்களான வாத பித்த கபங்களின் விகிதாசாரம் பொருத்து அக புற இயல்புகள் தீர்மானிக்கப்படுகின்றன என்பது அதன் நம்பிக்கை. பெருந்தேவியின் கவிதைகளை வாசிக்கும் போது, இவை வாத பிரகிருதி உடையவரின் கவிதைகள் என்பதே என் முதல் எண்ணம். சல சித்தம் என்பார்கள். எப்போதும் அலைவுறும் படைப்பு மனம் உருவாக்கும் கவிதைகள். சுவர்களில் ஓயாமல் முட்டும் குருட்டு மிருகத்தின் தவிப்பு.

தந்தையின் மரணம் பல கவிதைகளில் பேசுபொருள் ஆகிறது. புகைப்படங்கள்:- ‘இறந்த பெற்றோரின் புகைப்படங்களைப் போல/படுக்கையறையில் விரோதிகள் வேறில்லை / உயிரோடிருந்த சமயத்தைவிட / அதிகம் விழித்திருக்கிறார்கள்.’ ஆதார், பண மதிப்பிழப்பு, ஸ்டெர்லைட் போராட்டங்கள், பாலியல் பாகுபாடு எனத் தற்கால அரசியல் பற்றி தயக்கமற்ற வலுவான அரசியல் கவிதைகள் எழுதுகிறார். முக்கியமாக அவை வெகு அரிதாகவே பிரகடனத்தன்மை கொள்கின்றன (கம்பீரம் போன்றவை). ‘பின்பாலியல் உயிரியாக’ கவிதையில் அறிவித்துக் கொண்டு காமத்தின் என்சைக்ளோபீடியா மாற்றி எழுதப்பட வேண்டும் என்கிறார். மேஷங்கள் கன்னிகள் விருச்சிகங்கள் முதலைகள் கவிதையில் – ‘எந்த ஜோசிய இணையதளத்திலும் இல்லாத / ஆண்மையின் பொதுக் குணாம்சம் / அந்தக் கடைசித் தகவல் / ராசிகளைக் கடந்த மொத்த சாராம்சம் / ஆண்களுக்குப் பெண்களைக் காட்டிலும் / சக ஆண்களைக் காட்டிலும் / முதலைகளையே பிடிக்கிறது / ஆண்களின் மனசு ஆக வினோதம்’ என அவருடைய குரல் ஒலிக்கிறது.

பெருந்தேவி கவிதைகளில் மரபு தொழிற்படும் இடங்கள் கவனிக்கத்தக்கவை. அவை மரபுடைப்பு அல்லது மரபு பேணல் என இரு எல்லைகளுக்குள் வகுக்கப்பட முடியாதவை. ஒரு எல்லையில் தில்லை காளி நடனப் போட்டியில் வென்ற ஆடலரசனை கேலி செய்கிறாள். மறு எல்லையில் எந்திர மனிதர்களும் அந்நியர்களும் யு.எப்.ஓக்களும் கவிதைகளில் நடமாடுகிறார்கள். எக்ஸ்பிரெஸ் அவென்யு கவிதைக்குள் த்ரேதா யுகம் பற்றிய குறிப்பு வருகிறது. டில்டோவும் ஸ்டில்லேடோவும் செக்ஸ்ட்டும் ஃபேஸ்புக்கும் ஃபேக் ஐடியும் கவிதைகளில் உலாவுகின்றன.

நிகழ்வுகளைக் காட்டிலும் சாத்தியங்களின் கற்பனைகளில் லயிப்பதையே கவிதைகள் பேசுகின்றன. “எப்போதும் நான் சாத்தியங்களிலேயே கிளர்ச்சியடைந்து விடுகிறேன் – (ஆனால்)”

சாத்தியத்துக்கும் நிகழ்வுக்குமிடையே
ஆனால் என்பது துருப்பிடித்த பாலம்
ஒவ்வொரு நொடியும்
விழுந்துகொண்டே இருக்கிறது
எல்லாம்வல்ல ஒரு
சிட்டுக்குருவி கூட
அதில் தத்தி நடக்க அஞ்சுகிறது

ஆற்றாமையும் ஆத்திரமும் பல கவிதைகளின் மைய உணர்வாகத் தொனிக்கின்றன. உதாரணம் – “இந்தக் கவிதை பழைய பாணியில்  எழுதப்படுகிறது.” அங்கதத் தொனி கொண்டதாகத் தோற்றமளிக்கும் இக்கவிதை முடிவுறும்போது ‘யாருமற்ற ஊரைச் சுற்றி ஓடும் ஆற்றையும் / யாருமற்ற உலகத்தில் வசிக்கும் என்னையும் / மயிராக நினைப்பவர்களுக்காக’ என ஆத்திரத்தை வெளிப்படுத்துகிறது. நவீன வாழ்வின் மீதான ஒரு கரிப்பு அவருடைய பல கவிதைகளில் தொனிக்கிறது. ‘தரிசனம்’ கவிதையில் காப்காவின் பூச்சியாக மனிதர்களை காண்கிறார்.. சொத்தைப் பல்லில் நிரவப்பட்ட பூசை, நாக்கால் நிரடி அதன் துளையை மீண்டும் மீண்டும் தொடும் ஒரு உணர்வு நிலை. எங்கு சென்றாலும் எப்படிச் சென்றாலும் அந்தத் துளையை நோக்கியே படைப்பாளிகள் ஈர்க்கப்படுகிறார்கள். ஆனால் பெருந்தேவியின் மரபு சார்ந்த அறிவும் எதிர்க்கவிதை பாணியும் அவரைப் பிற கவிகளிடம் இருந்து வேறுபடுத்துகிறது.

ஆத்மாநாமிடம் கேட்க ஒரு கேள்வி
நீரில் மூழ்கும் முன்
நீ அணிந்திருந்த ஆடையை
வக்கணையாக மடித்து வைக்க
உனக்கேன் தோன்றியது
சொல்லேன்
வாழ்வு – பைத்தியம்
சாவு – பைத்தியம்
இடையில்
இரண்டு மணிமுடிச்சுகள்
இறுகிக் கிடக்கின்றன
அவிழ்க்க உதவி செய்யேன்
ஒரு பதில்
ஒரு வாய்ப்பு
இங்கிருந்து விளையாட
அல்லது
முடிவை ஏமாற்ற
ஒரு குட்டிச் சாத்தியம்
***
இக்கவிதையை ஒரு செவ்வியல் நவீனத்துவ கவிதை எனக் கொள்ளலாம்.

பருன்மையை குலைத்தல் எப்போதும் கவிதைகளின் இயல்பு. மொத்தப் புடவியையும் நீர்மையின் அம்சமாக காணுதல். ‘அறையின் நடிப்பு’ அப்படியான ஒரு கவிதை. ரத்னா ஸ்டோர்ஸ் பகல் 3-3.15 கவிதை எனக்குத் தேவதச்சனின் ‘இன்னொரு பகலில் போய்க் கொண்டிருக்கும் குண்டுப்பெண் சிறுமி’ கவிதையை நினைவு படுத்தியது. ரத்னா ஸ்டோர்ஸ் பெண்கள் தங்களுக்கேயான பதினைந்து நிமிடக் கடலைத் தக்க வைத்துக் கொள்கிறார்கள். ஏதோ ஒருவகையில் சின்னச்சின்ன இணைப் பிரபஞ்சங்களை நாம் சிருஷ்டித்துக் கொண்டிருக்கிறோம்.

இவை பெருந்தேவியின் கவிதைகளில் நான் உணர்ந்த பொதுவான அம்சங்கள். பெருந்தேவியின் புதிய தொகுதியான ‘விளையாட வந்த எந்திர பூதம்’ (யாவரும் வெளியீடு) முன்வைத்து அவருடைய கவிதைகளில் கடவுள் – கவிதை பற்றிய கூற்றுகள் என இரண்டு தளங்களை மட்டும் முன்வைத்து சில அவதானிப்புகளை நிகழ்த்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.

2
அப்பா
இறக்கும்போது பொட்டலமாய்ச்
சுருங்கிய உடலோடு
பரலோகம் என்று ஒன்றிருந்தது
அங்கே அவர் சென்றிருந்தால்
முடிந்தவரை தன் குச்சிக் கைகளால்
அங்கிருந்து அதிசயமாக நீளும் கைகளைத்
தடுத்துக் கொண்டிருப்பார்
‘அவளுக்கு எதையும் தராதிரும்,
முட்டாள் பிழைத்துப் போகட்டும்!’

***
இந்தக் கவிதை எனக்கு இசையின் ‘பிதாவே’ கவிதையை நினைவுக்கு கொண்டு வந்தது. ‘ஒரு பந்தென இருக்கிறோம் / கடவுளின் கைகளில் / அவரதைத் தவறவிடுகிறார் / தொப்பென வீழ்ந்து விடாதபடிக்குத் / தன் பாதத்தால் தடுத்து / முழங்காலால் ஏற்றி / புஜங்களில் உந்தி / உச்சந்தலையில் கொண்டு முட்டி / இரு கைகளுக்கிடையே / மாறி மாறி தட்டி விளையாடுகிறார் / மறுபடியும் பாதத்திற்கு விட்டு / கைகளுக்கு வரவழைக்கிறார் / ‘நான் உன்னை விட்டு / விலகுவதுமில்லை. உன்னைக் கைவிடுவதுமில்லை / பிதாவே! தயவு பண்ணி எம்மைக் கைவிடும்.’

ஒருவகையில் கடவுளின் கரங்கள், அது அருட்கரமாகவே இருந்தாலும் அதன் பிடியிலிருந்து விடுபடுதலே நவீன மனிதனின், அவனுடைய கலையின் நோக்கமாக இருக்கிறது. தனக்கு எந்த அளியும் வரமும் தேவையில்லை, அல்லது தனக்கு அளிக்கப்பட்டவை சார்ந்த ஒரு வித மிரட்சி பல்வேறு கவிதைகளில் உணர்வு நீட்சி கொள்கிறது. ‘திரும்பி வந்த கிளி’ கவிதையில் ‘தவிர நீ எனக்கு அதிகப்படி அந்தஸ்து இப்போது உன்னை வைத்துக் கொண்டு பிச்சை எடுத்தால் யார் தான் போடுவார்கள்’ என எழுதுகிறார். ஒருவகையான இருதலைக்கொல்லி நிலை. இந்தக் கவிதையையும் இவ்வரிசையில் வைக்கலாம்.

வராத செய்தி
ஆழ்கடலில் அல்லாதவற்றுக்காய் காத்திருக்கும் முத்துக்கொத்தோ
போகாத செவ்வரளிப் பூப்பாதையில் கலந்துவிட்ட தங்கச் சாவியோ
சுற்றி வருபவர்களில் ஒருவராய் மாறிவிட்ட குருட்டு வேதாளமோ
மறைத்த திரையை அவிழ்க்காமல் காத்து இரட்சிக்கும் அருட்கரமோ
யானறியேன்
வராவிட்டாலும் வராதே இருக்கட்டும் வராத செய்தி.

***
பெருந்தேவியின் கவிதைகள் வழியாக கடவுளின் இருப்பையும்,  இன்மையையும், ஐயத்தையும் மாறி மாறி பரிசீலனை செய்கிறார் எனத் தோன்றுகிறது.

விண்ணப்பம்
சின்ன ஆன்மாக்கள் அழுகின்றன
பெரிய ஆன்மாக்கள் மன்னிக்கின்றன
இடைப்பட்டவை மருகுகின்றன
அவமானத்தில் அல்லது அச்சத்தில்
இறை
(ஒன்று இருந்தால்)
சிலவற்றைத் தேற்றட்டும்
பெரியவற்றைப் பொறுக்கட்டும்
தவறினாலும்
ஒன்றை மட்டும் செய்துவிடட்டும்
இடைப்பட்டவற்றை
சிறிதாகவோ
பெரிதாகவோ
ஆக்கிவிடட்டும்
***
‘உலோக ருசி’ தொகுப்பில் உள்ள கவிதை இது. இறைக்கு அருகே அடைப்புக் குறிக்குள் ஒன்று இருந்தால் என வருகிறது. ஏறத்தாழ இதே உணர்வை கொண்டிருக்கும் மற்றொரு கவிதை. ஆனால் இதில் ஐயமற்ற இறைஞ்சுதல் வெளிப்படுகிறது.

வேண்டுதல்
விண்மீன்கள்
அல்லிகளாய் போதவிழும்
இரவில்
எம் தேவமாதாவே
உன் ஒளிர்க்
கன்னமதாய்
அமைதி சிறிதே
காட்டித்தாரும்
விம்மி விம்மி நெஞ்சம்
உறைகிற
தன்னுணர்வை
மெழுகுவர்த்திக்கு
இணையாக்கி
உருக்கித்தாரும்.
சுகங்களின் கிளிஞ்சல்கள்
கனவில்
எம் பாதங்களைக்
கிளிக்காதிருக்கட்டும்.
துயரங்களை ஆண்டடக்கிய தாயே
மகனுக்கு உண்டானதை
மகளுக்குத் தாராதேயும்
இதயமுனத்தில்
ஏந்திய அம்புகளை
வாரத்தின் நாட்களாக்கிக் கொண்டோம்
இரவுக்கு விசனத்தை ஊட்டாதேயும்
அல்லது
இப்போது
கதவெமதைத் தட்டுவது
ஊழ்வினையல்ல
என்ற உத்திரவாதத்தையாவது தாரும்
ஏன் ஏன்
அறையெங்கும்
கடவுளின் கண்ணாய்க்
கணினியின் ஒளித்திரை
பச்சைச் சிறுதுளி
மின்னி அருளுகிறது
ஏன் ஏன் கைவிட்டீர்
ஒரு துளிக்
கண்ணீரை
நாளை அவளுக்குத் தாரும்.

***
இந்தக் கவிதை உன்னதமான எதையும் அல்ல, குறைந்தபட்சம் உடைந்து அழுவதற்குப் போதுமான கண்ணீரைக் கோருகிறது. கண்ணீர் வழியே வாழ்வை அர்த்தப்படுத்திக் கொள்ள முனைகிறது.

தனிப்பட்ட முறையில் பெருந்தேவியின் மொத்தக் கவிதைகளில் எனக்கு மிகப்பிடித்த கவிதைகளில் ஒன்று என இக்கவிதையைத் தயங்காமல் சொல்வேன். அவரே மறுத்தாலும் கவிஞரின் முகத்தில் தேவனைத் தேடாமல் இருக்க முடிவதில்லை. பேரிருப்பின் சமிஞ்கையை உணர்ந்து கொண்ட திடுக்கிடல் வெளிப்பட்ட கவிதை.

உடல் பருத்த பெண்
நான் உடல் பருத்த பெண்
நடக்கும்போது மூச்சு வாங்குகிறது
நரைகளைப் பற்றி கவலையில்லை
பொடி எழுத்துகளைப் படிக்க கண்ணாடி தேவைப்படுகிறது
ஆனால் படிக்க முடியாது
எனக்கு சுகமாக நித்திரை வருகிறது
எந்தக் கனவுக் கோளாறுமில்லை
இரவில் படுக்கையில் படுத்தபடி
ஜன்னல் வழியாகப் பார்க்கிறேன்
ஒரே நட்சத்திரக் கோலாகலம்
இப்படி நிரூபிப்பதெல்லாம்
அவசியமில்லையேயென்று
எப்போது புரியப் போகிறது
முட்டாள் கடவுளுக்கு
க்ரீம்ஸ் ரோடில் ஒரு காலத்தில் எனக்குச் சிரிப்பு இருந்தது
மாற்றக் கடவுளுக்குமுன்
மண்டியிட்டுக் கதறி அழுபவர்கள்
இரவில்தான் அழுவார்கள்
நிலாவின் ஒரு துண்டத்தோடுதான்
துக்கத்தை விழுங்க முடியும்

நவம்பர்
அவள் ஜன்னல் வழியே பார்க்கிறாள்
பார்க்க ஒன்றுமில்லை
கடவுளின் அருட்கைகள்
ஆளில்லா ரயில்வே கேட்களில் உயர்ந்து தாழப் பழகிக்கொள்கின்றன

இக்கவிதைகளில் அவர் பயன்படுத்தும் அருள் எனும் சொல் என்னை வெகுவாக சலனப்படுத்துகிறது. அருளுக்கான இறைஞ்சுதல் கவிதைகளில் தொனிக்கிறது. பின்னர் அவை உதாசீனப்படுத்தப்படுகின்றன. மொத்தக் கவிதையுலகிலும் இந்த இருமை அவரை அலைக்கழிக்கிறது என்றே எண்ணுகிறேன். கவிதைகளில் வெளிப்படும் தவிப்பு வாசகரை பதட்டம் கொள்ளச் செய்கிறது. இவை தவிர்த்து முற்றிலும் விளையாட்டு தொனியில் கடவுள் வந்து செல்லும் கவிதைகளும் சில உண்டு.

அலகிலா விளையாட்டின்
அழிக்கும் கடவுள் டெட்டால் தான்
சந்தேகமேயில்லை
சக்திவாய்ந்த அதைத்தவிர
வேறெவரிடத்திலும் சரணடைவதில் பொருளில்லை.
விளையாட்டு
தம்ளர் காப்பியில் ஓர் எறும்பு
நீந்திச் செல்கிறது
கடவுளைப் போல நான்
சக்தியோடிருக்கிற
அபூர்வத் தருணம்
எறும்பே இன்னும் படபடத்து நீந்தேன்
உன் ஆறு கால்களில் ஏதாவது இரண்டைத் தூக்கித் தான் கும்பிடேன்

***
வாழ்வின் ஒரு தருணத்தில், எவரேனும் ஒருவருக்காவது கடவுளாக வேண்டும் எனும் விசை மனிதர்களுக்கு உள்ளது தான். இக்கவிதை ஒரு எல்லையில் குரூரத்தையும் மறு எல்லையில் பகடியையும் கொண்டிருக்கிறது. ஒரு உயிர் தன் கட்டுப்பாட்டில் உள்ளதான எண்ணம் இல்லாத அதிகாரத்தைக் கற்பிதம் செய்து கொண்டு திருப்தியுறுவது மற்றொன்று.

தெரிந்ததைக் கூறுகிறேன்
சாமி கண்ணைக் குத்திவிடும் எனக்
குழந்தைகளுக்குச் சொல்வதைப் போல
தங்களுக்குச் சொல்லிக்கொள்கிறார்கள்
உண்மையில் இதுவரை எந்தச் சாமியும்
யார் கண்ணையும் குத்தியதில்லை
மனிதர்கள் பார்க்காதபோது சாமிகள்
அரிவாள் சூலம் பொருள்களைக்
கீழே வைத்துவிட்டு நெட்டி முறிக்கிறார்கள்
பார்த்துவிட்டுப் போன மனிதர்களைப் பற்றி
அவர்கள் பேசிக்கொள்ளும்
கிசுகிசுக்களைக் கேட்டால்
காதைப் பொத்திக்கொள்வோம்
மந்தகாசமாக இருக்கும் சாமிகளுக்கு
இதில் அதிக சுவாரசியம் இருக்கிறது
முட்டைக்கண்ணை உருட்டி விழிப்பவர்கள்
கேட்காததைப் போலப் பாவனை செய்கிறார்கள்

உங்கள் உலகம் அழியும்போது
உங்கள் கணக்காகச் சித்திரகுப்தன்
வாசிக்கப்போவதெல்லாம் கிசுகிசுக்கள்தான்
இது தெரிந்திருந்தால்
நான் சொல்லவருவது உங்களுக்குப் புரியும்

3

கவிதைகள் வழியாகக் கவிதையை அவர் எப்படி பார்க்கிறார்? இத்தொகுப்பிலும் முந்தைய தொகுப்புகளிலும் பல கவிதைகள் கவிதைகளைப் பற்றியவை. இலக்கிய உலகம், படைப்பு மனம் சார்ந்து பல கவிதைகள் உள்ளன.

‘உலோக ருசி’ தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘நேர்’ கவிதைக்கு இலக்கணம் அளிக்க முற்படுகிறது.

கவிதையெனப்படுவது யாதெனில் / உன் கண்ணை அது நேருக்கு நேர் / பார்க்க வேண்டும் / தவிர்த்துப் பார்வையைத் / திருப்பிக் கொண்டால் / உன் தாடையை உடைத்து / முகத்தைத் தன் பக்கம் / திருப்பி விடுமோ / என அச்சம் தருகிற வகையில் / வலிமையாக / அதன் வலிமை அதன் நேர் மட்டுமே.

இங்கிருந்து இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘இளம் கவிஞர்களுக்கு’ கவிதையைக் கணக்கில் கொண்டால் ஒரு பயணம் நிகழ்ந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. கவிதைக்கும் எதிர்க்கவிதைக்கும் இடையிலான ஒரு பயணம் அல்லது ஊசலாட்டம். வெற்றுத்தாளை மேம்படுத்தினால் போதும் என பர்ரா கவிதைக்கு புதிய விளக்கம் அளிக்கிறார்.

இளம் கவிஞர்களுக்கு
ஊரில் மிச்ச மீதி மரம் இருந்தால்
அதில் உங்களைக் கட்டிவைத்து அடித்தால்கூட
உறுதியாக நிற்க வேண்டும்
‘கவிதையை எப்படி வேண்டுமானாலும் எழுதுவோம்.
வெற்றுத்தாளை மேம்படுத்தினால் போதும்’
என்கிறான் மகாகவி பர்ரா.

எதிர்க்கவிதையின் இயல்புகள் பற்றிய ஒரு கவிதை.

எதிர்க்கவிதையை வாசித்தல்
எதிர்க்கவிதை உங்களைக்
காதலிப்பதில்லை
உங்கள் கண்களில் தன் பிம்பத்தை அது தேடுவதில்லை
நான் சொல்வதை நம்புங்கள்
அதை உற்றுப் பார்க்காதீர்கள்
உறைந்து போக அதிக நேரம் பிடிக்காது.

***
கவிஞர் மீதிருக்கும் ஒளி வட்டங்களை நிராகரிக்கிறார். உணர்வுகளின் தேய்வழக்குகளில் சிக்கிப் போலித்தனத்தில் உழலும் கவிதைகளையும் நிராகரிக்கிறார். இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘என்றாள் யூதாஸ்’ ஒரு உதாரணம்.

***
நல்ல கவிதை
அன்பைக் கோருவதில்லை
நல்ல கவிதை தன்னை
எழுதுவதையே கோருகிறது
யாருக்கு இது புரியப் போகிறது?
வெட்டுக்கிளிகளுக்குப் புரியப்போவதில்லை
ஏசுவின் முகத்தைக் கவிஞன் முகத்தில்
காண்பவர்களுக்குப் புரியப்போவதில்லை
ஏசுவின் முகத்தைக்
கவிஞனின் முகத்தில் காண்பவர்கள்
கவிதையைச் சிலுவையில் அறைந்துவிட்டு
வரும் வழியில்
தாகசாந்திக்கு சோடா குடிக்கிறார்கள்.

***
இதே தொகுதியில் இடம்பெற்றுள்ள மற்றொரு கவிதை. அன்றாடத்திலிருந்து வெகுவாக விலகும் கவிதையின் உன்னதத் தளங்களை பகடி செய்கிறது.

ரைட்டா?
உண்மையில்
நவீன கவிஞர்கள் பலரும்
வானம்பாடியின் வயிற்றுக்குள்தான்
பாண்டி ஆடிக்கொண்டிருக்கிறார்கள்
வயிற்றுக்கு வெளியே ஒருசிலர்
வெண்ணெய்க் கத்திகளுடன்
உம்மென்று போஸ் கொடுக்கிறார்கள்
உலகமே அடுத்த ஜெனரேஷன்
ஆப்பிள் ஐபோனுக்காகப் பரபரத்துக்
காத்துக்கிடக்கிறது
உள்ளூரை டிக்டாக் கைப்பற்றிவிட்டது
நானோ ஒரு ஒட்டகச்சிவிங்கியை
வளர்க்கலாம் என்றிருக்கிறேன்
அதற்கு மூன்று வேளை தவறாமல்
சத்தான உணவு தருவேன்
அது தினமும் 10 சென்டிமீட்டர் வளரும்
ஒருநாள் வானத்தைத் தொடும்
அதில் நான் ஏறி உட்கார்ந்துகொண்டு
என் கவிதைகளை வாசிப்பேன்
ஒட்ட்கச்சிவிங்கி தலையசைத்து
அவற்றை ஆமோதிக்கும்

வினை என்றொரு கவிதையில் அன்பை கவிதையின் இடுபொருளாக கொள்வதன் மீதான விமர்சனம் தொடர்கிறது. ‘அன்பை அங்குலத்துக்கு / ஒரு முறை பேசும் கவிதைக்கு / மருக்கள் முளைத்து விடுகின்றன/ புற்றுநோயாக இருக்கக்கூடாது என/ அஞ்சிச் சந்தேகித்துப் பிரார்த்திக்க வேண்டியிருக்கிறது.

‘பெண் மனசு ஆழம்’ தொகுப்பில் இடம்பெற்றுள்ள இக்கவிதை அன்பொழுகும் கவிதையின் மீதான விலக்கம் ஏன் என சொல்கிறது. நான் ஒரு ரொமாண்டிக்:- எதிர்கவிதைப் பிரியர்கள் நிஜத்தில் ரொமாண்டிகாகத் தான் இருப்பார்கள் / தாய்மை இயற்கை அன்பு செண்டிமெண்ட் கவிதைகளைக் காலராவைப் போல் அவர்கள் தவிர்க்கிறார்கள்.

அதே தொகுப்பில் இடம்பெற்றுள்ள மற்றொரு கவிதை இப்படி முடிகிறது. ‘கவித்துவம் சொட்டக் கவிதை எழுத எனக்கு மட்டும் தோன்றாமலா இருக்கும் / ஆனால் ஒரு பெண் குரங்கின் புட்டம் குறுக்கே வந்து விடுகிறது / கவித்துவ அழகியலின் மலர்ப்பாதையில் அடைத்து நிற்கிறது அந்தக் குரங்கின் புட்டம் / கொப்புளங்கள் வேறு / வன்புணர்வு செய்யப்பட மழித்த யோனி கொண்ட ஒரு இந்தோனேசியக் குரங்கது.’ ஒட்டகச்சிவிங்கி கவிதையுடன் சேர்த்து வாசித்துக் கொள்ளும் போது கவிதையின் அன்றாடம் மற்றும் அரசியல் தளத்தை பெருந்தேவி முக்கியமாக கருதுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

போலியான உன்னதக் கற்பிதங்களை தேய்வழக்காக ஆக்கும் கவிதைகளை விமர்சிக்கிறார். உன்னதங்களை காண்பதற்கு ஒட்டகச்சிவிங்கியாக வேண்டும், இல்லையேல் காணக் கிடைப்பது குரங்கின் புட்டம் தான். ‘வெயிலைப் பற்றிய கவிதைகள் இருக்கட்டும் வெயிலின் பயங்கரங்களுக்கு தயாராவோம்’ என்று எழுத அவரால் முடிகிறது. ‘உருவகப் பாவம் – போதுமான அளவிற்கு மேல் உருவகித்து விட்டார்கள் அதுவும் அந்த முயல்குட்டியின் பாவம் சும்மா விடாது’ என மற்றொரு கவிதையில் அவமரியாதை செய்யப்பட்ட உருவகங்களுக்காகச் சாபமிடுகிறார்.

பாருங்கள் எனும் இக்கவிதையும் ஏறத்தாழ இதே தொனியைக் கொண்டிருக்கிறது. எளிமைப்படுத்துவதையும் உன்னதப்படுத்துவதையும் ஒருங்கே நிராகரிக்கிறது.

உங்கள் வளர்ப்புப் பிராணிகள் அல்ல கவிதைகள் பாருங்கள்
உங்கள் வரவேற்பறையில் சொகுசாக வார்த்தை ஆட்டத்தை ஃபிக்ஸ் செய்து வரிகளை ஸ்கோர் செய்ய முடியாது பாருங்கள்
கவிதைகள் பெருந்தன்மையை வெறுப்பவை
பக்கத்திலிருக்கும் சிறுவனுக்கு
அழகு காட்டியபடி அவன் பார்க்க
முறுக்குகளைக் கடித்துத் தின்பவை
கவிதைகள் சுகாதாரம் நாகரீகம் பேணாதவை
பொதுச்சாலையில் பட்டப்பகலில்
ஆற அமர நின்று ஒன்றுக்கடிப்பவை
அவை இரவில் (குறிப்பாக)
பத்தாயிரம் விளக்குகளை
உடலில் எரியவிட்டு
ஓயாது ஓடும் வார்த்தைகளின் திரைகளாய்
மனத்தை பீடிப்பவை
அவை இரவில் (குறிப்பாக)
பூச்சிகளாக விதவிதம்
உடலில் ஊறி
பதைபதைக்க எழ வைப்பவை
பக்கச்சுவரற்ற கிணற்று நீர்களாய்
வா வா என்று அழைப்பவை

***
கவிதைகளை ஏறத்தாழ ஒரு கலகமாகவே முன்வைக்கிறார். ‘கவிதையை ஒற்றறிந்து கண்டுபிடித்தது’ கவிதையில் இப்படியொரு வரி வருகிறது “நீ எனக்குத் தொழில் என்றால் சண்டைக்கு வருகிறது.” அடையாளம் எனும் கவிதையில் பேராசிரியர் என அழைக்க வேண்டாம், உண்மையில் பாரதியின் தொழில் தான் என்னுடையதும் என்கிறார்.

“ஓர் எழுத்துப் பாணிக்கு வாழ்க்கைப்பட்டு, கட்டையில் வேகும் வரை அதே பாணியில் எழுதிக் குவிப்பது, ஓர் அலுவலர் வருகையேட்டில் தினசரி இடும் கையொப்பத்தில் இருந்து எவ்வகையில் மாறுபட்டது?’ என வாயாடிக் கவிதைகளின் முன்னுரையில் எழுதுகிறார். தொகுப்புகள் தோறும் வளர்சிதை மாற்றம் இருந்தாலும் சில ஆதாரப் புள்ளிகள், கேள்விகள் மாறவில்லை.

கவிதை என்ன செய்யும்? அதன் உக்கிர வெம்மை விளையாட்டல்ல. வாசிப்பும் எழுத்தும் ஒரு எல்லையில் மீட்சிக்கான சாதனங்கள் ஆகின்றன.

உன் வாழ்க்கையைத்தான் நீ வாழ்கிறாய்

உன் வாழ்க்கையைத் தான் நீ வாழ்கிறாய்
ஆனாலும் சில சமயம்
உன் இதயமும் பாலுறுப்பும் தீப்பிடித்து எரிகையில்
நீ எழுத்தைத் தான் நாட வேண்டியிருக்கிறது
உன் ஒட்டுமொத்த சதை தோல் திசுக்களுக்கிடையில்
உறைந்துபோய் விடுகையில்
எழுத்தைத் தான் நாட வேண்டியிருக்கிறது
கருகாதிருக்க புரையோடிப் போகாதிருக்க
நீ எழுதத்தான் வேண்டியிருக்கிறது
ஆனாலும் அப்புறப்படுத்த முடியாத
ஒரு தீய்ந்த முனை ஒரு துர்நாற்ற அழுகல்
பொறியில் மாட்டிக்கொண்ட உன் சின்ன உடலில்
ஆனாலும் அதில் கொஞ்சம் வெளியே நீண்டிருக்கிறது
உன் மூக்குக்கும் கொஞ்சம் வெளிக்காற்று
ஆம், உன் வாழ்க்கையைத் தான் வாழ்கிறாய்.

***
இது மற்றொரு கவிதை. நிலா முழுக்கக் கறையான்கள் எனும் பயன்பாடு அமைதியிழக்கச் செய்கிறது. முழுமதி, அமைதி, நிறைவு, அழகு, ஞானம் எனப் பல அடுக்குகளில் பொருள் கொள்ளத்தக்கது.
***
ஒருவேளை
எதற்காக வாசிப்பது எதற்காக எழுதுவது
தெரியவில்லை
என் நிலா முழுக்க கறையான்கள்
தொலைத்தவர்கள் செல்லும் கடைசி நரகம் எழுத்தாக
தொலைத்தவர்களுக்குக் கிடைக்கும் சுவர்க்கம் வாசிப்பாக (மட்டும்) இருக்கலாம்.
***
இதன் மறுமுனை ஒன்றுண்டு. இந்தப் பயணமே பெருந்தேவி கவிதைகள் வழியாக அடைந்த இடம் எனத் தோன்றுகிறது.
எப்படிக் கவிதை எழுதுகிறீர்கள்?
சந்தைக்குப் புதிதாக வந்திருக்கிற
வசீகரமான டில்டோக்களைப் போல பார்த்துத் தேர்தெடுத்த சொற்கள்
வழுக்கிக் கொண்டு செல்ல வேண்டும்
திட்டமென்னவோ உங்களுக்கு உதவியாக இருப்பது தான்
ஆனால் சொற்களுக்கு நடுவில் சில பாம்புகள் புகுந்துவிட்டன
வாயை வேறு திறந்து வைத்திருக்கின்றன
நீங்கள் விழுந்து விடுகிறீர்கள் அவற்றுள்
ஆனால் இந்தப் பாம்புகளை நான் விடவில்லை
நம்புங்கள் நான் அத்தனை மோசமில்லை
ஆனால் உங்களுக்கு என்னால் உதவ முடியவில்லை
இந்தப் பாம்புகளுக்கு வாழ்க்கைப்பட்டிருக்கிறேன்
விழுங்கித் துப்பி விழுங்குகின்றன
மாணிக்கமாக முடியாத சாதாரணத்தை.
***
கவிதைக்கு நடுவில் பாம்புகள் புகுந்து விடுகின்றன அல்லது நான் (x) பறவை கவிதையில் உள்ளது போல் மேஜையில் அமர்ந்திருக்கும் பறவை ‘முழுவதும் உண்ணப்படாமல் மிச்சம் வைக்கப்படும் விருப்பு வெறுப்பிற்கு அப்பால் அலகால் இயங்க வைக்கிறது இதயத்திற்குள் சட்டென நுழைகிறது-‘ ஏறத்தாழ எழுத்தை தன்னை மீறிய செயலாகவே முன்வைக்கிறார். ‘என் கவிதையின் குரல் என்னுடையதில்லை, அதன் கூக்குரல்களுக்கும் நான் பொறுப்பேற்பதாக இல்லை’ (நகரலாமே) என பொறுப்பைத் துறக்கிறார். ஸ்ரீ வள்ளி கவிதைகளுக்கான திறவுகோல் இங்குள்ளது. பெருந்தேவியை இவற்றைக் கொண்டு ‘inspired artist’ எனச் சொல்லலாம் என்றே தோன்றுகிறது.

ஒட்டுமொத்தமாக அவருடைய கவிதை உலகின் பிரகடனம் போல் ஒலிக்கும் ஒரு கவிதை இது.

இலக்கியக் கூட்டமொன்றில் மைக் பிடித்து உரையாற்றியது
நான் கடவுளை மறுக்கிறேன்
கடவுள் மறுப்பை மறுக்கிறேன்
கடவுள் அவர் பாட்டுக்கு பழைய மணைக்கட்டை ஓரத்தில்
உட்கார்ந்திருக்கட்டும் என்கிறேன்
தீவிர இலக்கிய சாமிக்கு பஜனை பாட மறுக்கிறேன்
அன்பை வலியுறுத்துகிறேன்
அன்பை எழுத்தில் கொட்டி முழக்காதீர்கள் என்கிறேன்
காதுகள் டமாரமாகிக் காலமாகிவிட்டது
உங்கள் ஆண் எழுத்தாளர் x பெண் எழுத்தாளர் ஆட்டம்
அலுத்துவிட்டது
இது பின்-பால் உயிரிகளின் காலம்

காலையில் கிழவனாக
மதியம் பெண்ணாக
முகநூலில் ஃபேக் ஐடியாக
இரவில் மிகை இயக்க ட்ரோன் ஆக
வாழ்பவர்களின் காலம்
நினைவேக்கம் புழுதிச் சித்திரம் என்கிறேன்
இல்லாத இடத்துக்குப் போகாத பாதையில்
தடதடத்து ஓடுகிறது பனங்காய் வண்டி.

***
தொல்ஸ்தோய் பாதை தஸ்தயேவ்ஸ்கி பாதை எனப் பொதுவாக இலக்கியம் குறித்து இரு வரையறைகள் உண்டு. அண்டத்தில் இருப்பது பிண்டம் பிண்டத்தில் உள்ளதே அண்டம். உன்னதங்களை, ஒழுங்குமுறைகளைக் கட்டி எழுப்புதலும் அதைக் குலைப்பதும் ஒரு இலக்கின் இரு பாதைகள். ஒளியையும் அன்பையும் கவிதைகளில் எழுப்புவதும் அதை உடைத்து வீசி எல்லாவற்றையும் தொந்திரவிற்கு உள்ளாக்குவதும் ஒன்றே. கோணங்கி ஒருமுறை ‘கவிஞன் உலகின் முதல் மனிதன், புனைவெழுத்தாளன் உலகின் கடைசி மனிதன்’ என்றார். கவிதையின் ஆதார இயல்பு எல்லாவற்றின் மீதான வியப்பு. ரிக்வேத சிருஷ்டி கீதங்களை இயற்றியவர் ஒரு கவிதான். புனைவின் ஆதார இயல்பு எல்லாவற்றின் மீதான விமர்சனம். உலகின் கடைசி மனிதர் ஒரு கவிஞராகவும் இருக்க முடியும் என்பதை பெருந்தேவி நிறுவுகிறார்.


Sunday, December 8, 2019

நீலகண்டம் - தூயன்

நண்பர் எழுத்தாளர் தூயன் நீலகண்டம் வாசித்து அவருடைய கருத்தை கடிதமாக எழுதி இருந்தார். நன்றி தூயன். 


Dear suneel,


 I finished ' Neelakandam'. Very exciting started reading but  was disappointed. I never thought that you could have written. Lot of flaws... Mythical narratives and contemporary plot didn't mingle with any point.  Stereotype characters...My only quibble with this work is that before publishing you should have given a discerning readers or at least a good editor who could have turned this into a sharp and crisp..i was left wondering many places , is this written by suneel who made me exciting and engaging his previous Stories.




You bring together fantasy, myths, history, reality along with main plot that was good idea. But doesn't metamorphose in certain points. For example, vikram-vedala myth story, i thought, it would be bound or changed the whole story.but not.
One thing i emphasis that you don't believe such persons who   have been saying positive feedback about this work. Really it has lots of flaw. If they have anything useful to hone , they must criticize. If i could read it's first draft, would have been saying nuances and subtle elements.
Ok don't misunderstand me.  I hope suneel a finely grated sence of narrator will give excellent text future..
                    bye
.                     Thuyan


அன்புள்ள தூயன்,

வாசித்ததற்கும் அது குறித்து எழுதியதற்கும் நன்றி. இதில் தயங்கவோ கோபப்படவோ புரிந்துகொள்ளாமல் போகவோ எதுவும் இல்லை. அதை தாண்டிய நன்னம்பிக்கையும் நட்பும் நமக்குள் உண்டு. இது ஒரு ஆரோக்கியமான சூழல். நான் உங்கள் விமர்சனங்களையும் பார்வைகளையும் மதிக்கிறேன். என்னைப் பொறுத்தவரை இந்த படைப்பு இப்படி உருக்கொள்ள அதற்கான நியாயங்கள் உள்ளன என்றே நம்புகிறேன். அவ்வகையில் என் பங்கை இயன்றவரை உண்மையாக செய்திருக்கிறேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சியும் நிறைவும் உண்டு. மேற்கொண்டு நன்றாக எழுதியிருக்கலாமா என்றால் எழுதியிருக்கலாம், இதில் சில பிழைகள் உள்ளனவா என்றால் இருக்கக்கூடும். எனக்குத் தெரியவில்லை. இந்த நாவலை எவ்வகையிலும் நான் நியாயம் செய்யப்போவதில்லை. ஏனெனில் அது இப்போது முடிந்து போன ஒன்று. என்னிலிருந்து வெளிவந்துவிட்டது. அதற்கான விதியை அது தேரட்டும். உங்கள் மீது எனக்கிருக்கும் நட்பும் நம்பிக்கையையும் போலவே இந்நாவலின் முதல் வரைவுகளை வாசித்த நண்பர்களின் மீதும் உண்டு. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவகையான எதிர்பார்ப்புகள், வாசிப்பு பின்புலன்கள். இலக்கியத்தின் மீது அவர்களுக்கு இருக்கும் ஈடுபாடும் அக்கறையும் ஐயத்திற்கு அப்பாற்பட்டது. எழுத்தாளராக அவர்களை சார்ந்து இயங்க முடியாது. நாவலுக்கான பொறுப்பை அவர்கள் மீது சுமத்த முடியாது. தொடர்ந்து எழுதி, கண்டடைந்து, கடக்க வேண்டியது தான் நம் பணி.

அன்புடன் 
சுனில் 
  

Thursday, December 5, 2019

நீலகண்டம் - பிரபாகரன் வாசிப்பு

(கவிஞர் பிரபாகரன் காரைக்குடி மரப்பாச்சி இலக்கிய வட்டத்தின் முக்கிய உறுப்பினர். விகடன் மாணவ பத்திரிக்கையாளராக இருந்தவர். காரைக்குடியிலிருந்து எழுந்து வரக்கூடிய படைப்பளர்களில் ஒருவராக அவர் இருப்பார் எனும் நம்பிக்கை எனக்குண்டு. நீலகண்டம் நாவல் வாசித்து அவருடைய கருத்தை அனுப்பி இருந்தார். நன்றியும் மகிழ்ச்சியும்.)

பாற்கடலைக் கடைந்த போது வெளிவந்த ஆலகால நஞ்சை உண்டதால் நீலகண்டன் ஆக சிவபெருமான் மாறிய கதையை நாம் அறிவோம். இங்கு நஞ்சு என்பதோடு எதை வேண்டுமானாலும் பொருத்தி பார்க்கலாம். நம்மால் அதை செரிக்கவும் இயலாது, உமிழ்ந்து தள்ளவும் இயலாது. அதோடே வாழ விதிக்கப்பட்டது போல பல நேரங்களில் போராடவும், ஏற்றுக் கொள்ளவும், சகித்துக் கொள்ளவும், துறந்து ஓடிவிடவும் நாம் தவிப்பதே உணர்வுகளின் கலவையாக வாழ்வினைக் கட்டமைக்கிறது. சுனில் கிருஷ்ணன் அண்ணாவின் நீலகண்டம் நாவலும் அதன் வியக்க வைக்கும் ஒன்றிணைவுகள், பிணக்குகள், முரண்கள் மீது கட்டப்பட்டது. நீலகண்டர்களாக வாழும் மனிதர்களின் கதையை இந்நாவல் பேசுகிறது.

    குழந்தைமை என்பது வரமாக பார்க்கப்பட்ட சமூகத்தில் குழந்தைகள் இல்லாத நிலை சாபமாக கட்டமைக்கப்படுகிறது. நவீன சூழலின் தோற்றுவாய்களால் அந்த சாபத்திற்கு ஆட்படும் இணையர்கள் அதற்கான சாப விமோசனத்தையும் சந்தையாக்கப்பட்ட நவீனத்திலேயே தேடுகின்றனர். அந்த இணையர்களில் ஒருவர் தான் ரம்யாவும் செந்திலும். இரு வேறு கலாச்சார பின்னணி கொண்ட இருவரும் குடும்பங்களைத் தவிர்த்து வாழ்க்கையை அமைக்க போராடுகின்றனர். பிள்ளையின்மை சாபமாக மாறுகிற தருவாயில் அந்த கவலையே தங்களை அரிக்கிற நஞ்சாக மாறி தொண்டைக் குழியில் சிக்கி நிற்கிறது.

    இருவேறு குடும்பங்களின் பின்னணியை தொடர்ச்சியாக இல்லாமல் கதையின் போக்கே தீர்மானிக்கும் இடங்களில் கதைகளாக வருவது வாசிப்பின் ஆர்வத்தை உந்தி செல்கிறது.

    தத்தெடுக்கிற குழந்தை ஆட்டிசக் குழந்தையாக அமைந்துவிடும் சூழலில் வாழ்வில் சந்திக்கும் முரண்களைப் மிக நேர்மையாக பேச முயன்றிருக்கிறது நாவல். இதன் இணையாக விக்கிரமன் வேதாளம் கதைகளும், குழந்தை வர்ஷ்னியின் புனைவுகளாக வரும் கடலாமை, சோட்டா பீம், பாக்மென், நீலநிற யானை பொம்மை கதைகளும், ரம்யா செந்தில் வாழ்வின் நிகழ்வுகளும் இணைந்து நாவலை நகர்த்துகிறது.

    குடும்பங்களில் ஒவ்வொரு விதமான நம்பிக்கைகள் இருக்கின்றன. தங்களுக்கு நடக்குற எல்லாவற்றிலும் முன்னோர்களின் பங்கு இருப்பதாக நம்புகிறோம். அதிலும் இளவயதில் இறந்த பெண்களை சாமிகளாக வழிபடும் மரபு, அவர்களைச் சாந்தப்படுத்தும் நிகழ்வாக படையல்களை நடத்துவதை நான் அறிவேன். தொன்மங்களை, புராணங்களை புனைவுகள் என ஒதுக்க முடியாத இடத்தினை வாழ்க்கை சுட்டிக்காட்டி கொண்டே இருக்கிறது. 

    நீல நிறம் கொண்ட நஞ்சினைக் கட்டுக்குள் இருந்து விடுவித்துவிட்டால் குற்றஉணர்ச்சி எனும் நச்சாக மாறி விழுங்கிவிடுகிறது. கட்டுக்குள் கொள்ளும் வரை தான் அதனோடு நமக்குள்ள பிடிப்பு. 

    வெகு அழகான இடங்கள் நாவல் முழுவதும் இறைந்துக் கிடக்கிறது. பேக்மேனும் கடலாமையும், குழந்தை உற்பத்தி முனையம், மெடியா சுடலை மாடன் நாடகம், நீலநிற பொம்மை, வான்மதி- சோட்டா பீம் கதை இவையெல்லாம் சுவாரசியமான இடங்கள். வான்மதி-அருள்மொழி கதை நச்சினை அமுதாக்கி கொள்ள பழகியவர்கள் பற்றியது.

    நாவலோடு பயணிக்கும் யாரும் வர்ஷ்னி குழந்தை மீது அன்பு கொள்வதைத் தடுக்க முடியாது. நாகம்மா போலவே பச்சை நிற உடையிலேயே காட்சி அளிக்கிறாள். நாகம்மா, வர்ஷினி ஏன் ரம்யா கூட பிரக்ஞைகளின் வேறுபட்ட வடிவங்கள் தானே. கனத்த மனதோடு தான் நாவலின் கடைசி அத்தியாயங்களை கடக்க முடிகிறது. இவ்வுலகமே நீலகண்டம் தான். நாம் எல்லோரும் நீலகண்டர்கள் தான். நமக்கான நச்சு தான் வேறுவேறு.   

Thursday, November 28, 2019

இந்திரமதம் - சிவமணியன் கடிதம்

ன்புள்ள சுனீல்,


நலம். மிக்க நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.


கால் வைக்கும் தூரத்தில் பள்ளிக்கரணை சதுப்பின் அருகிலேயே என் வீடு இருந்தாலும், வானில் பறக்கும்  பல விதமான வெளிநாட்டு, உள்நாட்டு  பறவைகளையும், சதுப்பினை ஒட்டிய மாநகர் கழித்த குப்பைகளைத் தாங்கி இருக்கும் பெருங்குடி கிடங்கு மட்டுமே என் பார்வையில் இருந்தது. மழைக்காலத்தில் தரையில் பழுப்பு நிறத்தில் காணக் கிடைந்த நீர்பாம்புகளையும், மாம்பழ அளவு ஆமையும், பல விதமான நத்தைகளும், ஒரு சில அட்டைகளையும் பார்த்த நினைவுகளை மீண்டும் நினைக்க வைத்தது இந்தக்கதை. 



திறமைமிக்க புதியவர்களை கவரும் நோக்கத்துடன் எழுதப்பட்ட கூகுள் எவ்வாறு செயல்படுகிறது?  சமீபத்தில் வாசித்த நூல்.  கூகுள் நிறுவனம் உருவானதன் சுருக்கமான பிண்ணணி மற்றும் அதன் செயல்முறை, எதிர்காலத் திட்டம் போன்ற  தகவல்கள் கொண்டது.   அதில் இணைய எத்தனிக்கும் உறுப்பினர்களுக்கான தகுதி மற்றும் பின்னர் பெறப்போகும் சாத்தியமான வாய்ப்புகளைப் பற்றி முதன்மையாக விவரிக்கும் சந்தைப்படுத்தும் புத்தகம். அதில்  H I P P O (Highest paid person’s opinion) என்கிற ஆர்வமூட்டும்  சுருக்க சொல் ஒரு ‘தீட்டு சொல்’ போல பலமுறை வருகிறது.  அதாவது அலுவலகத்தில் உன்னை விட அதிகமான ஊதியம் பெறும் சக பணியாளரின் அல்லது பலவருட அனுபவம் கொண்டவரின் கருத்து, விவாதத்தின் அறுதிக் கருத்தாக இருக்க வேண்டிய அவசியமில்லை. விவாதங்களின் போது,  அழுத்தங்களின்றி உன்னுடைய புதுமையான யோசனையை, முன் வைத்தால் அதுவே பெரிய திட்டங்களுக்கு முன்மாதிரியாக இருக்கலாம், ஆகவே ஹிப்போ விடம் மோத தயங்காதே.  என பலப் பலமுறை வேறு வேறு பகுதிகளில் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது.  



அணுக்கமாக பழக நேரும் குரு , சீடர்களின் உறவு வலிமையாகத் தோன்றினாலும்,  சில உச்ச தருண நுண்ணிய சீண்டல்களால் அறுந்து விடும்  அளவிற்கு நொய்மையானது. ஆனாலும் வேறு வழியில்லை, துறை சார்ந்து, வித்தை கற்றல் சார்ந்து சீடன் குருவுடன் அணுக்கமாக இருந்து, சில சமயம் கருத்துகளை மறுத்து மோத வேண்டியதிருக்கிறது.  ‘இந்திர மதம்’  சேஷாத்ரியே தன் ஆசிரியரிடம் குன்ம நோய் இல்லை என்பதை விவாதித்து மீறி நிறுவுகிறார். அதே போன்ற, ஒரு தருணத்தில் சேஷாத்ரியை மறுக்க முடியாமல் உள்ளுக்குள் உழலும் சிவானந்தனுக்கு நிகழும் தரிசனமே கதையின் மையம். மறு வாசிப்பில், அதே சிக்கலான தருணத்தை இளங்கோ எவ்வாறு எதிர்கொள்கிறான் என்பது கதையின் மையத்தோடு ஒட்டிய மற்றொரு முக்கியமான பகுதி எனத் தோன்றுகிறது. 


‘வைத்தியனுக்கும் மகா வைத்தியனுக்கும் உள்ள இடைவெளி இதுதான். மகா வைத்தியன் ஒவ்வொரு, சிறுசிறு தோல்வியையும் தனிப்பட்ட தோல்வியாக உணர்ந்து மனதை உழப்பிக் கொள்வான்’


கதை மொத்தமும் இந்த வரிகளுக்குள் கூர்மையாக குவிவதாக தோன்றுகிறது. 


இருபுறமும் குருதியை உறிஞ்சும் உறுப்பு கொண்ட அட்டையின் குதம் எங்கிருக்கிறது என்பது கதை எழுப்பும் அடுத்த கேள்வி.


அன்புடன்

சிவமணியன்

அன்புள்ள சிவமணியன்,

வாசித்து, நேரம் எடுத்து கடிதம் எழுதியதற்கு நன்றி. இக்கதையைப் பற்றி சில விஷயங்களை சொல்லலாம். ஒன்று, இக்கதையை முழுக்க சித்தரிப்புகள் வழியாக நிகழ்த்திக்காட்ட முயன்றிருக்கிறேன். உரையாடல் மிகக் குறைவாக அதேசமயம் உள்ளத்தையும் நேரடியாக சொல்லாமல் புறச் சித்தரிப்பு வழியாகவே கதையை சொல்ல முயன்றிருக்கிறேன். அவ்வகையில் எனக்கு இக்கதை களியைக் காட்டிலும் சவாலானது நிறைவளிப்பதும் கூட. 

இரண்டாவதாக, இது ஒரு உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது. சித்த மருத்துவர் சிவராமன்  வாழ்வில் நிகழ்ந்தது. இந்தக் கதை ஆயுர்வேதத்தை அல்லது இந்திய மருத்துவத்தை விமர்சன நோக்கில் அணுகும் கதையாக சுருக்கிவிட முடியாது என்றே எண்ணுகிறேன். ஆயுர்வேதத்தை ஒரு பின்புலமாக மட்டும் கண்டுகொண்டால் எல்லா துறைகளிலும் சேஷாத்ரிகளை கண்டுகொள்ள முடியும். நீங்கள் அதை உங்கள் வாசிப்பின் வழியாக தொட்டுக்காட்டியது நிறைவளித்தது. 

அன்புடன் 
சுனில்  

Monday, November 25, 2019

நீலகண்டம்- கார்த்திக் பாலசுப்பிரமணியன்

(நண்பரும் எழுத்தாளருமான கார்த்திக் பாலசுப்பிரமணியன் நீலகண்டம் குறித்து எழுதிய குறிப்பு. நேற்றிரவு தொலைபேசியிலும் பேசினார். நன்றி கார்த்திக். அவருடைய நாவலும் இந்த ஆண்டு வெளியாக இருக்கிறது. அவருக்கும் என் வாழ்த்துக்கள். )


இது நாவல்களுக்கான ஆண்டு போலும். இச்சா, ஹிப்பி, பாரிஸ், கடலும் வண்ணத்துப்பூச்சியும், ரூஹ், பிரபஞ்சன் நினைவுப் போட்டியில் வெற்றிபெற்றவை என்று வெளிவந்துவிட்ட நாவல்கள், அறிவிக்கக் காத்திருக்கும் நாவல்கள் என்று கொண்டாட்டமாய்த் தொடங்கவிருக்கிறது இப்புத்தாண்டு. இவ்வரிசையில் நீலகண்டத்தின் வழியே சுனிலும் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார்.

அன்பின் வழியதைப் பேசும் அதே நேரத்தில் இலக்கியம் மனித மனதின் சிடுக்குகளையும், ஆதி விலங்கொன்றின் எச்சமாய் ஊறித் திளைத்திருக்கும் கசப்பையும் பேசத் தலைப்படுகிறது. அன்பிற்கும் வெறுப்புக்குமான ஊசலாட்டத்தின் நடுவே இடைப்பட்டு தவிக்கும் மனிதர்களின் கதையே நீலகண்டம்.

நவீன வாழ்வின் பெரும் சிக்கலாக உருவெடுத்து நிற்கும் குழந்தையின்மை, அதன் பொருட்டு ஆண்-பெண் இருவரிடத்தும் ஏற்படும் மனம் மற்றும் உடல் சார்ந்த அலைக்கழிப்புகள் என்று முக்கியமான இழையைத் தொட்டுத் தொடங்குகிறது நாவல். ஆட்டிஸம் பாதித்தக் குழந்தையினைத் தத்தெடுத்தல், வளர்த்தல் என்று முந்தைய இழையிலிருந்து நகர்ந்து இன்னும் சிக்கலான களத்தினுள் நுழைகிறது. மேலும், ரம்யாவுக்கும் அவள் அம்மாவுக்கும் இடையிலிருக்கும் உறவுச்சிடுக்கு, நாகம்மை வரும் அத்தியாயங்கள், சாயக்காட்டாரின் மகன், முரளி மீரா தம்பதிகள் என்று ஒரு பிரச்சினையின் பல்வேறு கோணங்களை அலசுகிறது இந்நாவல். அதன் பொருட்டு பல்வேறு நிலப்பரப்புகள், காலங்கள், மனிதர்கள், தொன்மம், நம்பிக்கை என்று விரிகிறது.

இத்தனை அடர்த்தியான கதையை சிறிதும் தொய்வின்றி வாசிக்க சுனிலின் மொழியும், அவரின் கதைசொல்லும் முறையும் துணை நிற்கிறது. இது நாவலின் ஆகப்பெரிய பலம். நெகிழ்வும், மிகையுணர்வும் பொங்கிப் பெருகச் சாத்தியமிருந்தும் அவ்விடங்களையெல்லாம் இயல்பாய் அதன் போக்கில் விட்டிருப்பது சிறப்பு.

அன்பின் ஒளியாய், அறத்தின் சுடராய் தன்னை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் இவ்வுலகம் துரதிர்ஷ்டவசமாய் எல்லோருக்கும் அப்படியிருப்பதில்லை. அதிலும் குறிப்பாக அகத்திலோ புறத்திலோ மெல்லிய பிறழ்வையோ, ஒரு சிறு கோணலையோ கொண்டவர்களிடத்தே இதே உலகம் தன்னுள் திரண்டு நிற்கும் அழுக்கை, இருளை பச்சாதாபமின்றி பாய்ச்சுகிறது. நாவலின் மொத்த சாரமென்று இதில் வரும் கீழ்கண்ட வரிகளைக் கொள்ள முடியும்.

“இவ்வுலகம் நீலகண்டர்களால் ஆனது. அவர்கள் தங்கள் பிரியம் திரிந்து நஞ்சாவதை எப்போதும் காண்பவர்கள். தங்கள் பிரியத்தின், அதன் திரிபின் விளைவுகளை ஏற்பவர்கள். அதன் பொருட்டு பிரியத்தின் முள்ளை எப்போதும் தொண்டையில் பொதித்தவர்கள்”

தான் கொண்ட விலக்கத்தை மீறி வருவின் மேல் செந்திலுக்கு அன்பு முகிழ்க்கும் தருணமும் அதை நோக்கிய பயணமும் நுட்பமாய் வெளிப்பட்ட அளவுக்கு, ரம்யாவுக்கு எற்படும் அன்பின் திரிபுநிலை இங்கு வெளிப்படுவதில்லை. சட்டென்று ஒரு புள்ளியில் நிகழும் அம்மாற்றத்தை வாசகனாய் உள்வாங்கிக்கொள்வதில் பெரும் தயக்கம் மேலிடுகிறது. நாவலின் உச்சமாய் நிகழ வேண்டிய திறப்பு அவ்வாறு நிகழாமல் போவதே இந்நாவலின் மிகப்பெரிய குறை. அதே போல வேதாளம் விக்ரமாதித்தியன் வரும் அத்தியாயங்களும் அதில் சொல்லப்படும் கதைகளின் பரிச்சயத்தால் கதைப் போக்கில் தொய்வை ஏற்படுத்துவதைத் தவிர மேலதிகமாய் எதையும் செய்யாமல் நின்றுவிடுகின்றன. கடைசிப் பக்கத்தில் வந்து சுபம் போட்டிருக்க வேண்டிய அவசியமில்லை. அதில்லாமல் திறந்த முடிவே இன்னும் பொருத்தமாய் இருந்திருக்கும்.

இதுபோன்ற குறைகளையெல்லாம் தாண்டியும் வாசிப்பின் வழியே கண்டடைவதற்கு தன்னகத்தே செறிவான கதையையும், களத்தையும் கொண்டுவந்திருக்கும் நீலகண்டம் தமிழ் நாவல் பரப்பில் ஒரு முக்கிய வரவு.

Wednesday, November 20, 2019

நீலகண்டம்- சரவணன் மாணிக்கவாசகம்

சரவணன் மாணிக்கவாசகம் என்பவர் நீலகண்டம் நாவல் குறித்து எழுதிய ஃபேஸ்புக் குறிப்பை நண்பர்கள் அனுப்பியிருந்தார்கள். அவருக்கு என்னுடைய நன்றிகள். 

நீலகண்டம்- சுனில் கிருஷ்ணன்:

ஆசிரியர் குறிப்பு:

சிறுகதைகள், நாவல்கள், விமர்சனக் கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் என பல தளங்களில் இலக்கிய உலகில் இயங்குபவர்.  தொழில்முறை ஆயூர்வேத மருத்துவர். அம்புப்படுக்கை எனும் சிறுகதைத் தொகுப்புக்காக சாஹித்ய அகாதமியின் யுவ புரஸ்கார் விருது பெற்றவர். 

நீலகண்டம்:

செந்திலும் ரம்யாவும் காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொள்கின்றனர். எல்லோருக்கும் எளிதாக கிடைக்கின்ற குழந்தைப்பேறு இவர்களுக்கு சிரமமான ஒன்றாகிறது. பல ஆண்டு முயற்சிக்குப்பின் ரம்யா கர்ப்பமாகி ஏழாவது மாதத்தில் வலிப்பு வந்து கரு சிதைகிறது. பெண்குழந்தையை தத்து எடுக்கிறார்கள். அது ஆட்டிஸம் குழந்தை. எந்த சிகிச்சைக்கும் சரிவராமல் அப்படியே இருக்கிறாள். விதி சிரிப்பது போல் ரம்யா குறையேதும் இல்லாத ஆண்குழந்தையைப் பெற்றெடுக்கிறாள்.

என் சிந்தனைகள் :

நீலகண்டம் விசமோ, அமிர்தமோ எதுவாயிருப்பினும் தொண்டையிலேயே தங்கியது போல் இந்நூலும் படித்தவர்கள் மனதில் வெகுகாலம் தங்கப்போகிறது. தனித்துவமான மொழிநடை, வித்தியாசமான யுக்திகள், ஆழமான உளவியல் யாவும் கலந்து இந்நாவலை முக்கியமான நாவலாக்குகிறது. படிப்பவர் மனதில் நிச்சயம் பல கேள்விகளை விதைக்கும் நூல் இது. ஆட்டிஸ குழந்தையின் கதையில், குழந்தைகளுடனான உறவு என்ற விசயம் தீவிரமாக அலசப்படுகிறது. அமைதியான நதியில் போகும் ஓடம் போன்ற மணவாழ்க்கை, காலம் தாண்டி கரை சேரும். புயலடித்த பின் தான் தெரியும் ஓடம் எவ்வளவு பாதுகாப்பற்றதென்று. சம்பந்தமில்லாதது போல் சொல்லப்படும் கிளைக்கதைகளுக்கு மையக்கதையுடன் தொடர்பிருக்கிறது. சாகரின் பிறப்பும் அப்படித்தான். அடிக்கடி சரித்திரம் தலைமுறை தாண்டி திரும்புகிறது. ஆட்டிஸக்குழந்தை மனம் அற்புதமாகப் படம் பிடிக்கப்பட்டுள்ளது. சோப்புக்குமுழி போல் சிக்கலில் வெடிக்கும் உறவுகள். சிறப்பின்
 பாலால், தாயும் மனம் திரியும். சுனில் கிருஷ்ணனுக்கு ஐம்பது வயதுக்கு மேல் என்று யாரும் சொல்லியிருப்பினும் நம்பியிருப்பேன். தமிழ் நவீன இலக்கியம் இவர் போன்றவர்களால் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்து கொண்டு தான் இருக்கும். 

பிரதிக்கு :

யாவரும் பப்ளிசர்ஸ் 90424 61472
முதல்பதிப்பு அக்டோபர் 2019
விலை ரூ 270.
Saravanan manicavasagam

Monday, November 18, 2019

நீலகண்டம் - ஜினுராஜ்

நண்பர் ஜினுராஜ் நீலகண்டம் குறித்து எழுதிய கடிதம் ஜெயமோகன் இணையத்தில் வெளிவந்துள்ளது. நன்றி ஜெயமோகன்.இன் மற்றும் ஜினு. பொதுவெளியில் வந்துள்ள முதல் வாசிப்பு. நேற்று கவிஞர் ந. ஜயபாஸ்கரன் தொலைபேசியில் அழைத்து நாவல் குறித்து நேர்மறையாக தனது அபிப்பிராயத்தை அளித்தார். இயலிசை வல்லபி ஒரேயமர்வில் தொடர்ச்சியாக ஐந்து மணிநேரம் அமர்ந்து வாசித்ததாக சொன்னார். இது வானதி வல்லபிக்கு சமர்ப்பணம் செய்யப்பட படைப்பு. அவருக்கு நாவல் பிடித்திருந்தது நிறைவாக உணரச்செய்தது. வானதி இருந்து வாசித்திருந்தால் என்ன சொல்வார் என யோசித்துக்கொண்டிருந்தேன். அருண்மொழிநங்கை அக்காவும் வாசித்து விட்டார். சிறப்பாக உள்ளது என குறுஞ்செய்தி அனுப்பினார். நண்பர் சித்திரன் நாவலின் வடிவம் சார்ந்து சில விமர்சனங்களை முன்வைத்தார். எது எப்படியோ பொதுவெளியில் நாவல் தனக்கான இடத்தை அடையட்டும். சிலருக்கு பிடிக்கக்கூடும், சிலருக்கு பிடிக்காமல் போகலாம். நான் என்னளவில் முற்றிலும் என்னை நாவலில் இருந்து துண்டித்துக்கொண்டு அடுத்து ஆகவேண்டிய வேலையைப் பார்க்கலாம் என்றிருக்கிறேன்.  



---

சுனில் அண்ணாவின் முதல் நாவல்* வாசித்தேன் ஆசான். சித்தத்தில் பல முறை நிகழ்ந்தபின் சொற்களில் நிகழ்ந்திருப்பதால் முதல் நாவலுக்குரிய எந்த தடுமாற்றமும் காணவில்லை நிச்சியமாக இது சுனில் அண்ணாவின் முதல் நாவல் என்று கூற இயலாது.இங்கு  என்னுடைய வாசிப்பு அனுபவத்தை பகிர்கிறேன்.



நீலகண்டம் நாவல் ஒரு குறிப்பிட்ட அரங்கிற்குள் நிகழும் கூத்தை மேலேயிருந்து பார்க்கும் தோற்றத்தை வாசகனுக்கு தருகிறது.அரங்கிற்கு மேலேயிருந்து காணும் பொழுது கூத்தில் கதாநாயகர்கள்,கதாநாயகிகள் கிடையாது யாவரும் நாயகர்கள், நாயகிகள் தான் அதே போல நாவல் வர்ஷினியை சுற்றி நிகழ்ந்தாலும் செந்தில்,ரம்யா,ஹரி என அவர்களின் பார்வையை  கொண்டு நோக்கும் போது அவர்களுக்கே உரிய தனி வாழ்வு எழுகிறது இது நாவலுக்கு பன் முகத்தன்மையை அளிக்கிறது.எடுத்து வளர்த்த குழந்தையின் ஆட்டிச குறைபாட்டை ஒரு குடும்பம் எதிர் கொள்வதையே நாவலின் பெரும்பாலான பக்கங்களில் நிகழ்ந்தாலும் நாவலின் கச்சிதத்தன்மையிலுருந்து நிகழ்வுகளை நெகிழ வைக்கிறது இந்த பன்முகத்தன்மை.இது நாவலுக்கு இலக்கியத்தன்மையை அளிக்கிறது.



நேர் பார்வையில் ஒழுங்கான செயல்கள் கூட மேலேயிருந்து நோக்கும் போது ஒழுங்கு கொண்டு நேர் கோட்டில் நிகழ்வதல்ல எனவே நிகழ்வுகளை பின் தொடர்ந்த செல்லும் வாசகனை எதிர்பாரத இடத்திற்கு கொண்டு சென்று அகத்திற்கு அதிர்ச்சியை அளிக்கிறது.அதிர்ச்சியின் வழியே மற்றொரு ஒழுங்ககை சித்தம் சமைக்கிறது.



நாவலை வாசிக்கும்பொழுது நான்கு முறைக்கு மேல் இத்துடன் நிறுத்திவிடுவோம் எனத் தோன்றியது ஏனெனில் அக ஆழத்தின் நுட்பமான சில இடங்களை தொட்டு உள அதிர்வை அளித்தது ஆனால் அது சுட்டுவது உண்மை,தவிர்க்க இயலாதது.திடீரென உண்மை முன்னால் தோன்றும் போது நடுக்கத்தை அளிக்கிறது.அந்த உண்மைகளை சொற்களால் நேரடியாக சுட்ட இயலாது நிகழ்வுகளால் அவற்றின் திசை நோக்கி குறிக்க இயலும் ;அது போதும் நான் யாரென அறிவதற்கு.ஒரு கணம் நானும் செந்திலும் , அண்ணாமலையும்,நந்தகோபாலும் ஒன்றென்று உண்மையை உணரும்போது அதிர்ந்தேன் நானல்ல என்று கூறினேன் பிறகு உணர்ந்தேன் நீலகண்டன் தொண்டையில் உள்ள ஆலகால விஷம் என்னுள்ளும் உள்ளது என்று அதை சுட்டையில் உணர்ந்தேன் நானும் விஷமென்று.



நாவலில் இடையிடையே வரும் விக்ரமன்,வேதாளம் கதை நாவலுக்கு கதை சொல்லும் தன்மையை அளிக்கிறது.கதைத்தன்மை சித்தத்தை வெளியே விடுவதில்லை மேலும் மேலுமென கதைக்கு ஏங்கச் செய்கிறது.நாவலின் இந்த வடிவமைப்பே அந்த உள அதிர்வுக்கு இடையிலும் நாவலை விடாமல் வாசிக்கச் செய்தது இது இந்த நாவல் அமைப்பின் சிறப்பு எனக் கருதுகிறேன்



தொன்மம்,நாட்டார் கதை,ஆன்மீகம்,தத்துவம் ஆகியவற்றை கொண்டு நவீன உலகின் சிக்கலை எதிர்கொண்டு மாறாத எப்போதுமுள்ள சிக்கலை கண்டறிய முயலுகிறது இந்த நாவல் இது தனிப்பட்ட முறையில் என்னோட ரசனைக்கு  மிகவும் அணுக்கமானது அந்த வகையில் இது எனக்கு மிகவும் பிடித்தமான நாவல்.



நூலை வாங்குவதற்கு

https://be4books.com/product/நீலகண்டம்/.



நன்றி

இப்படிக்கு

தி.ஜினுராஜ்.