Tuesday, May 29, 2018

சிறுகதை குறிப்பு - 4- சிறுமி கொண்டு வந்த மலர்

மே மாத மரப்பாச்சி கூட்டத்திற்கு விவாதிக்க இக்கதையை தேர்வு செய்திருந்தோம். ஊட்டி காவிய முகாமில் விஷால் ராஜாவின் 'முடிவின்மையில் நிகழ்பவை' சிறுகதையைப் பற்றிய விவாதத்தின் போது தேவதை கதை அமைப்பைப் பற்றியும் பேசினோம். அப்போது இக்கதையை இவ்வடிவின் சிறந்த உதாரணமாக சொன்னார் ஜெயமோகன்.

இக்கதைக்கு டாக்டர். ரவிச்சந்திரன் சிறப்பான வாசிப்பை அளித்தார். கூடுகையின் நோக்கம் இத்தகைய பல வாசிப்புகளை புனைவுகளின் மீது நிகழ்த்தி நம் புரிதலை விசாலப்படுத்துவதே. இந்த குறிப்பு கதை விவாதத்திற்கு பிறகு அதன் சாரத்தை ஒட்டி எழுதப்படுகிறது.

நகரத்து நெரிசலான தெருவில் உள்ள அடகுக்கடை தான் கதைக்களம். சமணரான சுகன்சந்த் ஜெய்ன் குழப்பமான மனநிலையில் முந்தைய நாள் நிகழ்வை அசைபோடுகிறார். முந்தைய நாள் பாவாடை சட்டை அணிந்த ரெட்டை ஜடை போட்ட களையான முகம் கொண்ட சிறுமி அவர் கடைக்கு வருகிறாள். கிராம 180 ரூபாய் விற்கும் காலத்தில் ஏழெட்டு பவுன் இருக்கக்கூடிய ஒரு தங்க ரோஜாப்பூ அவளிடம் இருக்கிறது. அதை உரசிப்பார்த்து அவள் கேட்கும் ஆயிரம் ரூபாயை கொடுக்கிறார். ஆனால் இளைப்பாறிவிட்டு வரும்போது அது சாதாரண ரோஜாவாக மாறிவிடுகிறது. இறுதியில் அதை தூக்கி சாக்கடைக்கு அருகே வீசிவிடுகிறார். 

எளிய கதையாக தென்படும் இக்கதையில் பல அடுக்குகளையும் நுட்பங்களையும் மாமல்லன் சாதித்திருக்கிறார். கோடரி எடுத்து கொடுக்கும் தேவதை கதை நம் நினைவில் இருக்கலாம். ஒரு அற்புதம் நிகழ்கிறது, மனிதனின் நேர்மை சோதிக்கப்படுகிறது, சோதனையை தாங்குபவன் ஆசிர்வதிக்கப்படுகிறான். பேராசையால் ஏய்ப்பவன் வீழ்கிறான். சிறுமி மலர் அளித்து பணம் பெற்று சென்ற பின்னர் அவளுடைய முகவரியைக் கூட வாங்கவில்லை என்று உரைக்கிறது. அதன் பின் அதுவும் வசதிதான் என எண்ணுகிறார். தானாக யாரையும் ஏமாற்றவில்லை. வாழ்க்கையே வாய்ப்பளிக்கும்போது தான் ஏன் மறுக்க வேண்டும் என தனக்குத்தானே நியாயம் சொல்லிக் கொள்கிறார். 

அதன் பின்னர் மருத்துவ செலவிற்கு பணம் கேட்டு நகை அடகு வைக்க வருகிறது ஒரு குடும்பம். அவர்களிடம் சுகன்சந்த் கறாராக நடந்துகொள்கிறார். அவர்கள் கேட்கும் தொகையில் இருந்து குறைத்து ஏமாற்றுகிறார். இதுதான் அவர் நேர்மைக்கான சோதனை. இதன் பிறகு தன் தங்க ரோஜா சாமானிய ரோஜாவாக ஆகிறது என்பதை கவனிக்க வேண்டும். ஏறத்தாழ அந்த சிறுமி வயதிருக்கும் போதிலிருந்தே இந்த தொழில் அவர் இருப்பதாக நினைவுகூர்கிறார். மீண்டும் அந்த பரிசுத்த நிலைக்கு மீள்வதற்கான ஒரு வாசல் அவருக்கு திறந்தது. கதை இறுதியில் அந்த ரோஜாவை ஏறத்தாழ அதே வயதில் இருக்கும் பேரன் எடுக்க வரும்போது அவனை தடுக்கிறார். சிறுமியை தேடி தெருத்தெருவாக அலையும் அவர் கோவிலுக்கு அருகே சென்றவர் கருவறைக்குள் செல்லவில்லை. அழுக்கும் கசண்டும் நிறைந்த நகரத்து தெருவில் அவரை நோக்கி ஒரு தெய்வம் இறங்கி வந்தது. மீட்பிற்கு ஒரு வாய்ப்பளித்தது. மறுநாள் காலையிலும் மலர் வாடவில்லை என்றபோதாவது உணர்ந்திருக்கலாம் இந்த அற்புதத்தின் நோக்கத்தை. ஆனால் சுயநலமும் பேராசையும் மறைத்துவிட்டது. 

மரபில் பொன் வைக்கும் இடத்தில் பூவை வைக்கலாம் என்பார்கள். பொன் அழிவற்றது, தேய்மானம் அற்றது, பூ அழிந்து போவது. இவை இரண்டும் ஏன் இணை வைக்கப்படுகின்றன? அழிவற்றதும் அழகியதும் ஒன்று சேரும் இடம் எது? மீட்புக்கான கதவுகள் நம் பிரக்ஞையில் நிலைப்பதே இல்லை.  இந்த கதையில் சிறுமி கொண்டு வரும் மலர் ஒரு உருவகமாக மனதில் விரிந்துகொண்டே இருக்கிறது. வாடாத அம்மலர் தூயது, இணையில்லாதது. கதை மாய யதார்த்த மிகு புனைவாக இல்லாமல் ஆன்மீக தளத்திலும் விரிகிறது. அதுவே இக்கதையை தமிழின் மிக முக்கியமான கதையாக ஆக்குகிறது. 

Thursday, May 24, 2018

ஸ்டெர்லைட் - 2

இனி நாம் ஒருபோதும் உண்மையை அறிய முடியாது. உண்மை மரித்து விட்டது அலல்து பொருளிழந்து விட்டது. இனி நாம் 'தரப்புகளுடன்' மட்டுமே வாழ்க்கை நடத்த முடியும். 

Truth is dead. We have to live only with versions. 

முதலில் யார் கலவரத்தை தூண்டினார்கள்? நக்சல் அல்லது தேச விரோத சக்திகள் போராட்டத்தில் ஊடுருவின என்கின்றனர் காவல்துறையினர். கலவரமே காவல்துறையினர் ஏற்பாடு செய்தது தான் என மெரீனா முன் அனுபவத்தின் பேரில் குற்றம் சொல்கின்றனர் போராட்ட மக்கள் தரப்பு. ஆகவே அவரவர் மனச் சாய்வுகளுக்கு ஏற்ப முடிவுகளை எடுக்கின்றனர் 

இந்த பிரச்சனையை சில அலகுகளாக பிரித்து கொள்வோம். 

துப்பாக்கி சூடு - ஆதரவு/ எதிர்ப்பு
போராட்டம் - ஆதரவு/ எதிர்ப்பு/ நிலைப்பாடில்லை 
ஸ்டெர்லைட் - ஆதரவு/ எதிர்ப்பு / நிலைப்பாடில்லை 

ஏனெனில் ஸ்டெர்லைட் குறித்தான விவாதங்களில் இவை ஒன்றுடன் ஒன்று கலந்தே விவாதிக்கப்படுகின்றன. ஒரு நேர்கோட்டில் இம்மூன்றையும் ஆதரிப்பவர்களும் இம்மூன்றையும் எதிர்ப்பவர்களும் மிகக் குறைவாகவே இருப்பார்கள். ஒன்றை எதிர்த்து மற்றொன்றை ஆதரிக்கும் அல்லது பொருட்டில்லை எனும் மனநிலையே பெரும்பாலானவர்களுக்கு இருக்கும். இச்சூழலில் துப்பாக்கி சூடைத் தவிர்த்து வேறு எதைப் பற்றி பேசினாலும் திசை திருப்பலாக பார்க்கப்படும் அபாயம் உண்டு. அது துப்பாக்கி சூட்டிற்கு எதிரான குரலை வலுவிழக்க செய்வதாக கருதப்படும். அதேசமயம் துப்பாக்கி சூட்டை கண்டிக்கும் சாக்கில் இங்கு வேறு பல விஷயங்களும் விவாத பொருளாக திணிக்கப்படுவதை கவனத்துடன் எதிர்கொள்ள வேண்டும். 


கலவரத்தை யார் துவங்கினார்கள் என்பதெல்லாம் இருக்கட்டும். இழப்பு என்னவோ மக்கள் தரப்பிற்கு தான். துப்பாக்கி சூட்டை வன்மையாக கண்டிப்பதில் எவருக்கேனும் மாற்றுகருத்து இருந்தால் பேசுவதற்கு ஏதுமில்லை. இது அப்பட்டமான மானுட விரோத செயல். அதிகார துஷ்பிரயோகம் என்பதைகூட உணராத மனிதர்களிடம் உரையாட ஏதுமில்லை. துப்பாக்கி சூட்டில் எந்த வரைமுறையும் கடைபிடிக்கப்படவில்லை. சீருடையில் இல்லாத காவலர்கள் குறிபார்த்து சுடும் காட்சி மனதை பதற செய்கிறது. 

ஸ்டெர்லைட் குறித்து எனக்கு எந்தவிதமான நிலைப்பாடும் இல்லை. சென்ற கட்டுரையில் குறிபிட்டது போல் நுகர்வை பற்றிய சிந்தையில்லாமல் உற்பத்தியை குறை சொல்வது நியாயமில்லை. வேதாந்தாவிற்கு எதிரான சதி பின்னல் போன்ற சோபையான வாதங்களின் மீது ஈடுபாடில்லை. தனிப்பட்ட முறையில் பெரும் ஆலைகள் மீது எனக்கு எப்போதும் ஐயம் உண்டு என்றாலும் பெரும் ஆலைகள் இன்றி இனி நாம் வாழ முடியாது எனும் நிதர்சனத்தை கணக்கில் கொள்ளத்தான் வேண்டும். 

போராட்டத்திற்கு ஆதரவா? எதிர்ப்பா? என்றால் நான் போராட்டத்தை ஆதரிக்கவே செய்கிறேன். காரணம் சென்ற கட்டுரையில் சுட்டியது போல் நவீன மக்களாட்சியில் காரணத்துடனோ காரணமின்றியோகூட மக்களுக்கு இத்தகைய ஆலைகளை எதிர்க்கும் உரிமை உண்டு. அவர்களுடைய ஐயத்தையும் அச்சத்தையும் போக்க போதிய வலுவில்லை என்றால், அவர்களுடன் உரையாடல் நிகழ்த்த இடமில்லை என்றால் அந்த ஆலை இயங்க அனுமதிக்க கூடாது என்றே நம்புகிறேன். 

சரி இந்த போராட்டம் சார்ந்த சமூக ஊடக விவாதங்களின் செல்திசையை கவனிக்கும் விதத்தில், எல்லா சிக்கலையும் தனித்தமிழ் தேசிய இலக்கை நோக்கிய பயணமாக மாற்ற முனைவது புலப்படுகிறது. ஒருவகையில் ஆளும் பா.ஜ.க இந்த உரையாடலை இந்த கோணத்தில் கொண்டு செல்ல ஊக்கப்படுத்துகிறது. பா.ஜ.க மீதான, நரேந்திர மோதியின் மீதான விமர்சனங்கள் இந்திய எதிர்ப்பாக கட்டமைக்கப் படுகிறது. ஆகவே இது தனித் தமிழ்தேசியர்களுக்கும் ஏதுவாக இருக்கிறது. பிரச்சனையைத் தவிர்த்து உரையாடல் இந்திய தேசியத்திற்கும் தமிழ் தேசியத்திற்கும் இடையிலான மோதலாக மட்டும் சுருங்கிவிடுகிறது. தனித் தமிழ் தேசியத்தின் சாத்தியங்கள், நியாயங்கள் பற்றி எனக்கு நேர்மறை அபிபிராயம் இல்லை. அதற்கான காரணிகளை பிறிதொரு சமயம் விரிவாக எழுதுகிறேன். எந்த ஒரு போராட்டம் பற்றிய விவாதமும் இத்திசையில் சென்று முட்டிகொள்வது அப்போராட்டத்தின் தார்மீகத்தை வீழ்த்துவதாக அமைகிறது. 


Tuesday, May 22, 2018

ஸ்டெர்லைட்

காந்தி சரியாகவே அரசைப் பற்றி கணித்தார். அரசு ஆன்மாவற்ற இயந்திரம் என்றார். தனிநபர் வன்முறையை காட்டிலும் பன்மடங்கு வீரியமானது. இந்த ஸ்டெர்லைட் போராட்டமும் கலவரமும் துப்பாக்கிச்சூடும் வெகுவாக அமைதி இழக்க செய்கிறது. அரசின் மீது நம்பிக்கையிழக்க செய்கிறது. 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் சில வருடங்களாக போராடி வருகிறார்கள். மிக முக்கியமாக அது ஏற்படுத்தும் மாசு பற்றிய கவலை அவர்களுக்கு இருக்கிறது. இந்த சிக்கலை வெறும் மேலெழுத்து வாரியாக புரிந்துகொள்வதை காட்டிலும் இதை ஒரு தத்துவ சிக்கலாக அணுகும்போதே நமக்கு விளங்கும். 

அரசு - மக்கள் உறவு தொன்றுதொட்டு தந்தை - பிள்ளைகள் உறவாகவே உருவகிக்கப்பட்டு வருகிறது. ஏறத்தாழ கேள்விக்கு அப்பாற்பட்ட கீழ்படிதலை கோருகிறது. நவீன மக்களாட்சி இந்த நிலப்பிரபுத்துவ மனநிலைக்கு எதிரானது. எனினும் இந்தியா போன்ற தேசத்தில் நிலப்பிரபுத்துவ விழுமியங்கள் முழுவதுமாக வெற்றிகொள்ளப் படவில்லை. அது அவசியமா, சாத்தியமா போன்ற கேள்விகளை விட்டுவிடலாம். 

பெரும்பான்மை மக்களின் நலத்தை காரணம் காட்டி, ஒரு இடத்தை தேர்வு செய்து அங்கு ஆலை அமைக்கிறார்கள். வேலை வாய்ப்பு மற்றும் வசதி பெருக்கம் நிகழும் எனும் நம்பிக்கை அளிக்கிறார்கள். ஆனால் அந்த இடத்தை சார்ந்தவர்களுக்கு அதில் ஒப்புதல் இல்லை. நவீன மக்களாட்சியில் பிராந்திய மக்கள் முடிவுக்கே வலு. காரணங்களோடு அல்லது காரணங்களே இன்றி நிராகரிக்க கூட அவர்களுக்கு உரிமையுண்டு. ஆனால் நிலப்பிரபுத்துவம் முடிவெடுக்கும் உரிமையை ஏற்பதில்லை. ஆகவே மக்களுக்கான முடிவையும் அரசே எடுக்கிறது. வெகுமக்களின் நன்மை பொருட்டு (பெரும்பாலும் வெகுமக்கள் நன்மை என்பது- அரசு மற்றும் முதலாளித்துவ ஆற்றல்களின் லாபநோக்கை உள்ளடக்கியதே) தியாகம் செய் என கோருகிறது. நாங்கள் எதற்காக தியாகம் செய்ய வேண்டும் என முரண்படுகிறார்கள்? எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்கிறார்கள் பிராந்திய மக்கள். நிலப்பிரபுத்துவமும் இல்லாத முழு மக்களாட்சியும் இல்லாத இரண்டுங்கெட்டான் சுழலில் இந்தியமக்கள் சிக்கி இருக்கிறோம். 

நவீன வாழ்வின் அற்புதங்களை நாம் அனுபவித்து கொண்டிருக்கும் இந்த கணத்தில் அது எங்கோ இயற்கை வளத்தை சுரண்டிக் கொண்டுதான் இருக்கிறது. நாம் நுகரும் ஒவ்வொரு பொருளும் அது உருவாகும் சூழலை நாசமாக்கிக் கொண்டுதான் இருக்கிறது. எனக்கு இப்பொருள் இங்கு உற்பத்தியாக வேண்டாம் என்பது சரி. ஆனால் அது வேறு எங்கோ அழிவை ஏற்படுத்தும்போது எவ்வித குற்ற உணர்வும் இன்றி நாம் அதை நுகர்ந்து கொண்டுதான் இருக்கிறோம். இந்த அற கேள்வியை நாம் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். காந்தி இதன் பொருட்டே கட்டற்ற நுகர்வின் ஆபத்துக்களை பற்றி எச்சரித்தார். நாம் நுகர்வதை துறப்பதில் இருந்து வெகு தொலைவுக்கு வந்துவிட்டோம். இந்த சுழலை உடைத்துவர என்ன வழி என்று யோசிக்கத்தான் வேண்டும். 

நியாயப்படி வெகுமக்கள் போராட்டத்திற்கு செவி சாய்க்கும் நவீன மக்களாட்சி இந்த ஆலையை மூடியிருகக் வேண்டும். ஆனால் அதற்கான எந்த முயற்சியும் செய்யவில்லை. மேலும் அரசு இதை முரண்டு பிடிக்கும் மகனுடனான ஈகோ சிக்கலாக அணுகத் துவங்கியது. இந்திய அரசுகள் இப்படித்தான் இதை அணுகி வருகிறது என்பதும் உண்மை. மிக அரிதாகவே தனது குறுகிய எல்லையை, நோக்கங்களை கடந்து சென்றிருக்கிறது. ஆகவே இதன் முதல் பொறுப்பு அரசை சார்ந்ததே. குறிப்பிட்ட கட்சி, அரசு என்பதை கடந்து இந்திய அரசுகளின் இயல்பாகவே இது இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.  பெரும்பாலும் பன்முகங்கள் கொண்ட எந்த ஒரு சிக்கலையும் அரசுகள் தீர்த்தத்தில்லை. அல்லது தீர்க்க விரும்பியதில்லை. காரணம் ஏதோ ஒரு தரப்பை பகைத்துகொள்ள வேண்டும் எனும் அச்சம். இந்திய மக்களாட்சியில் பணம் முதலாளிகளின் கொடை. வாக்கு வெகுமக்களிடம் உள்ளது. ஆகவே பெரும்பாலான விவகாரங்களில் அற நிலைபாடுகள் துலக்கமாக தெரிந்தாலும் கூட அவற்றை தீர்க்கமாக அரசுகள் எடுப்பதில்லை. 

ஆயுதம் ஏந்தியவர்களுக்கு எப்போதும் ஆயுதமற்றவர்களின் போராட்டங்கள் பெரும் குடைச்சல். அவர்கள் போராட்டக் காரர்கள் கலகத்தில் இறங்குவதற்காக காத்திருப்பவர்கள். போராட்டத்தை தங்கள் களத்தில் இழுத்துபோடவே அவர்கள் விரும்புவார்கள். ஆகவே அவர்களே கலவரத்தை தூண்டிவிடுவதும் நிகழ்வதுண்டு. அப்போது வலிமையே வெல்லும் எனும் சித்தாந்தம் மட்டுமே வெற்றியை பெற்றுக் கொடுக்கும். கூட்டத்தை கும்பலாக்க எப்போதும் முயல்வார்கள். அதில் வெற்றிகண்டார்கள் என்றால் போதும் அவர்கள் ஆயுதமேந்த போதுமான தார்மீக நியாயங்கள் உருவாகிவிடும். அப்போது போராட்டம் என்பது இரு கும்பல்களுக்கு இடையிலான யுத்தமாக மாறிவிடும். காவல்துறையோ, ராணுவமோ கும்பலாக செயல்பட பயின்றவர்கள். அவர்களின் திட்டமிட்ட வன்முறைக்கு முன் மக்கள் திரளால் ஒருநாளும் நிற்க முடியாது. கும்பலுக்கு இடையிலான மோதலில் எவ்வித விதிமுறைகளுக்கும் இடமில்லை. அங்கே வலுவான ஆயுதம் கொண்டவனே, அவன் எண்ணிக்கையில் குறைந்தவனாக இருந்தாலும் வெற்றி பெறுவான். 

காந்தி அரச வன்முறையின் முகத்தை நன்கு அறிந்தவர். அவருடைய போராட்ட முறைகள் திட்டமிட்டு கும்பல் மனநிலைக்கு எதிராக உருவாக்கப்பட்டதே. வெகுமக்கள் வன்முறை ஆங்கிலேயர்களுக்கு மக்கள் மீதான வன்முறையை அதிகபடுத்த வாய்ப்பளிப்பதாகும் என்று நன்கு உணர்ந்தவர். ஆகவே வெகுமக்கள் வன்முறையை வலுவாக நிராகரித்தார். தடியடிகளை வாங்கிக்கொண்டு, தலையில் குருதி சிந்த தொடர்ந்து நடைபோடுபவனே சத்தியாகிரகி எனும் மனச் சித்திரம் நமக்குண்டு. சௌரி சௌரா அலையை பயன்படுத்தி இந்தியா விடுதலையை அடைந்திருக்கலாம், ஆனால் அது எத்தகையதாக இருந்திருக்கும்? போராட்டத்தின் உச்சத்தில் அது திசைமாறுகிறது என்று உணர்ந்து போராட்டத்தை திரும்பப் பெற்றார். 

அண்மைய காலங்களில் தமிழகத்தில் கூட்டத்தை கும்பலாக்க முயன்று அதன் மீது ஆரோகணித்து தங்கள் இலக்கை, அதிகாரத்தை, தலைமையை அடைய முனைகிறார்கள். தொடர் வீராவேச உரைகள் வழியாகவும், வெறுப்பு பிரச்சாரங்கள் வழியாகவும் இதை சாதிக்க முயல்கின்றனர். ஆனால் கூட்டம் கும்பல் ஆகும்போது எழும் கட்டற்ற ஆற்றலை கட்டுபடுத்தும் வல்லமை இன்று எந்த தலைமைக்கும் இல்லை என்பதே நிதர்சனம். மதம் கொண்ட யானை முதலில் மிதித்து செல்வது பாகனையே. ஆகவே போராட்டக்காரர்கள், அதை வழிநடத்துபவர்கள் பொறுப்புடன், ஒவ்வொரு உயிரின் மீதும் அக்கறைகொண்டு உரையாட வேண்டியது அவசியம். 

இந்த போராட்டங்கள், கிளர்ச்சிகள் வெகுமக்களை அரசியல் நோக்கி தொடர்ந்து இழுத்து வருகிறது. அற போராட்டத்தின் வலிமையை பறைசாற்றி நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். போலியான அரசியல் தரவுகளை தவிர்த்து மெய்யான அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குடிமை சமூகம் முழு மக்களாட்சிக்கு தயாராகும்போது வாக்குக்கு பணம் போன்ற இழிவுகள் நிகழாது. அப்போது தங்கள் உரிமைகள் குறித்தும் பொறுப்புகள் குறித்தும் சிந்திக்கும் சமூகமாக நாம் வளர்வோம். 





From a patriarch to...

Its been 5 years now. On a hot and humid day of may, in the breezy town of Pondy our wedding happened in a crowded hall surrounded by well wishers, friends and relatives. 5 years have evaded leaving its fragrance and imprints on us. Like most other families i was also groomed in a conventional patriarchial household. Conventional not orthodox is the key. After my father left the world when i was 8 years my mother brought me up single handed. She had to face my father's debts, had to source income, importantly as a young widow she had to face the world full of opportunistic men. I grew knowing  her difficulties. Under her stewardship we drifted away a bit from patriarchy, but not wholly. I grew in a small town, reasonably good schooling and then moved to chennai for college. Lived there for 6 years. Urban life was something new and fresh but when i wanted to leave chennai i didnt have any qualms. 

Manasa grew in a family of working parents, completely urban. She lived in Pondy and then studied in Chennai. Surrounded by family members at Pondy amidst cousins, brothers and sisters. While i grew as a only child and without any peers to share my resources. She is radical in some aspects while i stay practical. While at times I surge with radical thoughts she will handle practically. We had our shares of fights and misunderstandings, loosing cool. But we moved on. She made me realize how much of ego i had got. She grounded me, while my impractical dreams swept me. What is more surprising is she has her own artistic attitude. Sometimes I had to hammer down her dreams citing practical reasons. She has an obsession for tidiness  and takes it to extreme level. Where as I scarcely care for neatness. Infact the only assurance she sought was something regarding cleanliness and which I have miserably failed. 

Being a Writer's wife it is expected of her to be his first reader (a bad precedence set by jey, probably). Whenever someone asks the question to her, she feels embarrassed. She even tried reading herself couple of stories. It doesnt matter whether your better half is the first reader or not, what is more important is she/he has to respect your pursuit of truth in the arena of art/ literature. More than everything else this has happened to us. 

Problems of Patriarchal upbringing reflects subtly in day today lives. When you expect your things to be done by others, worse is when you dont even realise these things can be done by oneself. Manasa has remained not just as a adorable life partner, she remains as a constant challenge. A challenge against our own untruth (false is too big a word), pretensions and prejudices. For a wedding relationship to be successful it mus go beyond the area of adorable love. The enigma of perfect love in constant evasion. A moral and mental challenge. Manasa exposed me to myself that I am far from perfection. She identifies me easily when i try to evade responsibility. 

And then Sudhir happened. People speak of personal spaces. But there is always the choice between space and lovely. they are in a way inversely proportional. I have encroached upon her space at times, and she had also reciprocated. Then we revert back to our places. These things happen in a family. Sudhir is the creator of time for us now. Sometimes one of us has to relent so that the other can continue creative pursuits, more often it was she who reverted and allowing some creative time for me. 

Some point of time people get disillusioned, accepting our imperfections and may be good relations i believe started loving these bits and pieces of imperfections as well. Better relations realize that but at the same time there will be constant strife to upgrade and inch towards a better life. Hope we have entered the better relationship phase. I wouldnt say i am a transformed person blah blah. But yes, the relationship has moved me and continues to move me, may be at a snail's pace, out of my comfort zone. Even now I am a patriarch, mostly patriarchs are the same for lifetime, but yes a self realised hypocritic patriarch (whether that makes things better or worse, who knows!)

In these days, a marriage lasting 5 years is itself a positive sign, that too without a moment of thought of breaking away and regret (atleast its the case of mine). So what can you expect, for anniversary as a gift, other than a reflective piece from a writer husband whose financial fortunes as you know is average. Thanks for being with me. Hope we have a perennial life of togetherness with more fun and colour. Happy anniversary Manasa. Long shall it last the fragrance of our love.     

Wednesday, May 9, 2018

அம்புப் படுக்கை - டேவிட் வாசிப்பு - 2

(நண்பர் டேவிட் அனுப்பிய வாசிப்பு. சென்ற பதிவின் தொடர்ச்சி)

பொன் முகத்தை பார்ப்பதற்கும் போதை முத்தம் பெறுவதற்கும்::

மெல்ல மெல்ல தன் இருப்பிற்கான அவசியம் மறைந்துகொண்டே வரும்போது ஏற்படும் பயம் ,இல்லை இப்ப தேவையில்லை என்று உணர்த்தப்ப்படும்போது ஏற்படும் வெறுமை ,
இதிலிருந்து விடுதலை செய்து, நமக்கென்று உள்ள இடத்தை உறுதி செய்து கொடுப்பவரை கண்ணீர் மல்க நன்றியுடன் பார்ப்போமே ,
அப்படித்தான் அறுபது வயது நாவன்னா லேனாவுக்கு, ஆறுமாத பேத்தி வள்ளியால் இப்படி ஒரு இடம் கிடைக்கிறது.ஷ்ரத்தா என்று டாடி மம்மியால் அழைக்கப்படும் ,ஆனால் ஆச்சியின் பெயர் சூட்டப்பட்ட வள்ளி எனும் ஷ்ரத்தா.

நவீன பிரச்சனைகளில் ஒன்று , பெரியவர்கள் குழந்தைகள் பீத்துணி மாற்றவும்,அவர்களுக்கும் வீட்டிற்கும் காவலாகவும் இருக்க வைக்கப்பட்டு போவது.  வயதான பின்பு மகனை நம்பி வாழும்,அதுவும் கணவனை இழந்த தாய் அல்லது மனைவியை இழந்த தந்தையின் அடையாளச்சிக்கல், வழி சொல்லி விட முடியாத பாதை. ஆனால் அடிப்படையான மனித உணர்வு , மரத்துப்போன சுயநலமிக்க செயல்களை தனது மகன், மகள் செய்யும்போது, அதில் பாதிக்கப்படும் அப்பா, எதுவும் செய்ய முடியாத நிலையில் எதிர்வினை ஆற்ற முடியாத உயிரின் நிலையில் மட்டுமே வாழமுடியும்.
கதைக்கு வருவோம்.

இங்கு பேத்தி பிறந்ததிலிருந்து கூடவே இருந்து பார்த்துக்கொள்ளும் அப்பா. கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் நிலை.
பாட்டு பாடி பாட்டு பாடி வள்ளியை தூங்க வைக்கும் தாத்தா , பாட்டின் ஒரு சில வரிகளை மாற்றிப்போட்டு , சொந்தமான பாடலில் ராகம் போட்டு பாடி தூங்க வைக்கிறார்.

விசுவாசம் என்னும் வார்த்தையை யார் உபயோகப்படுத்துகிறார், யாரிடம் உபயோகப்படுத்துகிறார் என்பதை பொறுத்து அதன் மதிப்பு மாறுபடுகிறது.
பொதுவாக இதற்கு முந்தைய தலைமுறை வரை , தான் வேலை செய்யும் இடத்தின் ஒவ்வொரு நிகழ்வுகளும் , பொருட்களும் , மறந்து போன சின்ன சின்ன செயலும் அதன் விளைவுகளும் , எல்லாவற்றிலும் முக்கியமாக ஒரு மரியாதையான வாழ்க்கை ஏற்பட உதவிய முதலாளி என்பவரின் மீது நினைவுகள் எப்போதும் எண்ணங்களுக்குள் சுழன்றபடி இருக்கிறது அது விசுவாசம் என்ற பெயருடன் சொல்லப்படுகிறது.

வாழ்க்கையின் சிரமமான பகுதியில், வறுமையில் இருந்து மீண்டு மூன்று வேளை சாப்பிடவும் , குடும்பம் என ஒன்றை ஏற்படுத்தவும் உதவியாக இருக்கும், நியாயமான முதலாளி என்பவரை நன்றியுடன் நினைக்கும் நியாயமான மனசு வாய்த்தவரை சந்திப்பதே மிகவும் குளிர்ச்சியான , நிகழ்வு.

அப்படிப்பட்டவர் நாவன்னா லேனா .
தன முதலாளியை , அவர் உடல் நிலை சரியில்லாததை கேள்விப்பட்டு , ஊருக்கு போய் பார்க்க நினைக்கிறார். இவர் போய் பார்ப்பதை அவரால்  அறியக்கூட முடியாத நிலை அவருக்கு. ஆனாலும் அவர் இறப்பிற்கு முன் போய் பார்க்க வேண்டும் என்பது நாவன்னா வின் விருப்பம். இந்த இரண்டு நிலைகளை மட்டும் பார்ப்போம். இவைதான் இந்ந்த சிறுகதையின் முரண். இதுதான் ரொம்ப எளிமையான , இதிலென்ன என்று கடந்து போய் விடும் மனநிலையை  நிறுத்தி வைத்து , இலக்கிய தரத்தை ஏற்படுத்துகிறது.இந்த முரண் , 

நிலை ஒன்று 
அதாவது தன் மகனிடம் , மனைவி இறந்த பிறகு , சார்ந்து வாழும் நிலை, அதுவும் தன குழந்தையை பராமரிக்க அவர் தேவை என்ற நிலையில் வாழும் மனிதர். அவருக்கு வேறு வழியில்லை. மகனோடுதான் இருக்க முடியும். ஆதரவற்றவர். ஆனால் வள்ளியை பார்த்துக்கொள்வதின் மூலம் இன்றியமையாத ஒருவராக தன்னை மாற்றிக் கொள்கிறார்.அதன் வழியே தன்னுடைய சுய மரியாதையை, இருப்பை காப்பாற்றிக்கொள்கிறார்.

நிலை இரண்டு
இவ்வளவு நாள் தனக்கு சோறு போட்ட முதலாளி , சாக கிடக்கிறார் என்ற செய்தி , ஒருமுறை அவரைப் போய் பார்க்க நினைக்க வைக்கிறது. உந்தி தள்ளுகிறது. இரண்டு நாள் கழித்து போகலாமே என்ற மகனின் வார்த்தை அவர்களுடைய வசதியை பொறுத்து என்பதை தாண்டி, உடனே ஊருக்கு போக வேண்டும் , முதலாளியை பார்க்க வேண்டும் என நினைக்கிறது. இது தன்னுடைய சார்பு நிலையையும் மீறி , தான் ஊருக்கு போவதால் ஏற்படும் தன நிலை மீதான அபாயத்தின், நிலையில்லா தன்மையையும் மீறி ,
போய் பார்க்க வேண்டும் என்று முடிவு எடுக்கிறார்.அது அறம் சார்ந்த முற்றிலும் சுயமான முடிவு.

இந்த இரண்டு நிலைகளுமே இந்த சிறுகதையின் அழகு.

இந்த முரண்பாடு., அறத்தின் மீது கட்டமைக்கப்பட்டு உள்ளதாலேயே இந்த சிறுகதை முக்கியத்துவம் பெறுகிறது.

சாதாரணமான சூழல்தான், இது தரும் பாதை நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்ற சிந்தனையை தூண்டாவிடில் , நாமும் நாவன்னாவின் மகன்களே.

மற்றபடி,

ஐநூறு ரூபா போனை கையோடு கொண்டு போகச் சொன்னான் நானா.

“அவசர அவசரமா இப்படி விழுந்தடிச்சு வரணுமா என்ன? இன்னும் ரெண்டுநாள் இருந்திட்டு திங்ககிழமை வந்திருக்கலாமே”

எந்த பொம்மையும் வள்ளி ஒரு வாரத்திற்கு மேல் திரும்பிக்கூட பார்த்ததில்லை.தான் இத்தனை மாதம் தாக்கு பிடித்ததே அதிசயம் என எண்ணிக்கொண்டார். 

மேனாட்டு கக்கூசில் உட்கார்ந்து கொண்டு , கண்களில் நீர் கோர்க்க , பேச்சு வராமல் , இவருக்கு முன் இறந்த மனைவியை நினைத்துப் பார்க்கும் மனிதன். 

மேல் சொன்ன வரிகளும், கக்கூஸ் காட்சியும் யாரையும் உலுக்கிப் போடும்.

உணர்வுள்ள மனிதர்கள் ஆக ஆக்கும் , இந்த “பொன் முகத்தைப் பார்ப்பதற்கும் போதை முத்தம் பெறுவதற்கும் “ 

முரண்களால் ஆன வாழ்வில் , எந்த பாதையை எப்படி தேர்வு செய்கிறோம் என்பதை பொறுத்து மனிதம் வாழ்கிறது. மனிதம் என்பது அவரவர் மனசு என்பதும் , மனசுபோல செயல், செயல் போல வாழ்க்கை என்பதும்,

சுனீல் கிருஷ்ணன் சொல்கிறார்.

அம்புப் படுக்கை

புத்தக தலைப்பின் சிறுகதை. மரணக் குறிகளில் தேர்ந்த தாத்தா ,நாடி பார்த்து வைத்தியம் சொல்லும் தலைமுறையின், ஆயுர்வேதம் படித்த சுனீல் கிருஷ்ணன் இல்லை இல்லை சுதர்சன், வாழ்வின் மீது ஏற்படும் பெரும் விழைவும்,வாஞ்சையும் ஒரு பக்கம் , வாழ்வின் மீதான பிடிப்பை ஒவ்வொரு விரலாக நெகிழ்த்தி வாழ்வை கை விடச்செய்ய வைக்கும் வெளிப்புற நிகழ்வுகள், மறு பக்கம், எனும் நிலையில் வாழ்வின் நினைவுகளை மீட்டியபடி , விடை தேட முனைபவராக ஆனா ரூனா செட்டியார் இருக்கிறார்.

பர்மாவில் சேர்த்த பொருளை பத்திரமாக , கொண்டு வந்து சேர்த்தவர்.தன்  வயதை விட மிக குறைவான பர்மீய ஆச்சியையும் இந்தியா கொண்டு வந்து சேர்த்தி , பாத்திரக்கடை வைத்து செழிப்புடன் வாழ்ந்தவர்.

சுதர்சனுடைய  தாத்தாவிடம் பல வகைகளில் மரண அபாயத்தில் இருந்து  தான் தப்பித்த கதைகள் சொல்பவர்.

நம்மள குறி வச்சிகிட்டே இருக்கு.. எப்படியோ ஆறுமுகசாமி அருளால இம்புட்டு நாளா இன்னும் தல தப்பி இருக்கேன் என்பதும், அந்தளவுக்கு எல்லாம் இல்ல,குத்துமதிப்பா அம்பு மாரி தான்...முடிவு பண்ணியாச்சுன்னா அவ்ளவ்தான். மத்தபடி ஒவ்வொரு நாளும் எல்லோருக்கும் இதே கதைதான்..என்று தாத்தா பதில் வைத்தார்.ஆனால் இது அன்றாட வாழ்வின் எல்லோருக்குமான கதை இது.

இதோ தலை போயிருக்கும் , புத்திசாலித்தனத்தால தப்பிச்சேன் என்பதும்,கொஞ்சம் லேட் ஆகியிருந்தா என் பொணத்தை தான் பார்த்திருப்பே என்று பெருமை பேசுவதும், தொண்டைக் குழியிலேயே நிற்கிறது. உனக்கு நேரம் வரல தம்பி னு சொல்லலாம்.ஆனா அப்படியும் முழுசா சொல்லிட்டு உட்கார்ந்துட முடியாது. வலியை குறைத்து , வலியை தவிர்த்து என்பதே சரின்னு நினைக்கிறேன். ஆனாலும் மரணம் என்பது தவிர்க்க முடியாதது.தவிர்க்க போராடுவது இயல்பு.இயல்பிலேயே அதிக போராட்டம் மரணத்துக்கு எதிராக நிகழ்த்திய ஆனா ரூனா செட்டியார் ,

அவ்வளவு  சீக்கிரம் மூச்சை நிறுத்தவில்லை. மகன் போனில் நான்கு நாளில் காரியம் எல்லாம் முடிந்து திரும்பி விடுவேன் என யாருக்கு வேற்று உறுதி தருகிறான்.மற்ற உறவு எல்லாம் காத்திருக்கிறது, ஆனா ரூனாவின் காரியத்திற்கு. மனதுக்குள் சொல்லிப் பார்த்துக்க்கொள்கிறான்,

“வாதம், பித்தம், கபம் - ஆள்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல்”  என்று ஆயுத பூஜைக்கு ஆயுர்வேத கல்லூரியில் சேர்ந்து ,தீபாவளிக்கு லீவில் வந்திருக்கும் சுதர்சன்.  ஆனா ரூனாவின் நாடி அலையை போல எழுகிறது நீண்ட நேரத்திற்கு பிறகு,சீக்கிரம் இறந்து விடுவார் என்பதை தெரிந்தாலும் சுதர்சன் ஆனா ரூனா விடமும் ,சொந்தங்களிடமும் போய் சொல்லுகிறார்.
ஒன்று ஆனா ரூனா வின் எதிர்ப்பு சக்தியை,பாராட்டும் வகையில் பதிலை  தந்ததால், எந்த பாதிப்பும் இல்லை என்ற நினைப்பில் , பூரிப்பில் மூச்சை நிறுத்தி விடுகிறார். இங்கு சுதர்சன் தந்திரவாதி .

இரண்டு
நாடி பார்த்து மரணக்குறி சொல்லும் பழக்கத்தை எதிர்க்கும் மனது அவனுடையது.எல்லோரும் சூழ்ந்து நின்று உயிரின் பிரிவை எதிர் நோக்கும் போது, அந்த வீரியமான உயிர் இன்னும் வீம்போடு இழுத்துப் பிடித்துக்கொண்டு இருக்கிறது. தன்னுடைய பொய்யால் , அவர்களின் மரணக்குறி நம்பிக்கையையும் உடைக்கிறார். இங்கும் சுதர்சன் தந்திரவாதி.
இப்படி சொன்னால் அது ஆனா ரூனாவின் சிந்தனைப்படி இருக்கும். இப்படி சொன்னால் அது ஆனா ரூனாவின் சிந்தனைப்படி இருக்கும்.\ வாழ்நாள் முழுதும் , தான் ஏமாற்றி வந்ததாக நினைத்துக் கொண்டிருக்கும், அந்த சாவை , ஏமாற்றி அவரிடம் தந்துவிட்டான் சுதர்சன். ஆனால் சுதர்சன் மனசுப்படி, அவனுடைய தாத்தா சொல்வதுதான் சரி. அம்பு மாரி வரும்போது நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. இங்கு சுதர்சனும் ஒரு அம்புதான். இறுதி அம்பு. எப்போதும் தத்துவம் ஒன்று இலக்கியத்துக்குள் பொதிந்து வரும்.
அம்புப்படுக்கை ஆரம்பம் முதல் சாவு தத்துவம் சொல்கிறது. 

குருதிச் சோறு

பழைய,மருவி வந்த செவி வழி அன்னபூரணிக் கதை. அதற்கு ஆதாரமாக  இருக்கும் பதினோரு கருமையான வழவழப்பான கற்கள். குருதிச் சோறு படைக்கப்படும் காளியம்மன் திருவிழா. மேற்சொன்ன கதையை காளியம்மன் திருவிழாவின் கடைசி நாள் பிராமண பாட்டி சொல்லும் வழக்கம். அரசர் காலத்தில் நடந்த அறம் மறந்த ராஜாவின், வறுமைக்காலத்தில் பசியை போக்கிய அன்னபூரணி, தனது பத்து குழந்தைகளையும் தந்து மக்கள் அனைவரின் பசி போக்கிய தெய்வம் அவள்.
அப்புறம்  புதுக்கோட்டை மகராஜா காலத்தில் , வறுமை வறுமை அப்படி ஒரு வறுமை, இறப்பை மீறிய பசி .அரிசி திருடி பசி போக்கியவளை குடிசையோடு,குழந்தைகளோடு கொளுத்திய கதை. பஞ்சம்.புதுக்கோட்டை.நல்லவளின் சாபம்.

இது ஒரு பக்கம் .,அப்புறம் அவளுக்கு குருதிச் சோறு படைத்து , அவளுடைய பசியை போக்கும் நடை முறை. யாருமே எக்காலத்திலும் மறந்து போக கூடாத ,வழமையாக தலைமுறைகளுக்கு சொல்லி வளர்க்கப்படும் திருவிழா நேர்த்திக்கடன். அன்னபூரணிக் கதையின் காளியம்மன் பற்றியும் ,பிள்ளைக்கறி பற்றியும் உள்ள தொடர்பு , தத்துவார்த்தமானது. அறம் போதனை செய்கிறது. திருவள்ளுவரும் அழகாக சொல்லியிருக்கிறார்.
ஏனென்றால் எல்லோருக்கும் பொதுவாக கொடுமையான பஞ்ச கால கட்டம், குடிகளை அழித்து ஒழித்திருக்கிறது. சுனீல் கிருஷ்ணன் இதை ஒரு மர்மக்கதை போல எழுதினாலும் , குருதிச் சோறு நல்ல குறும்படத்திற்கான அத்தனை அம்சங்களும் உடைய  அறம் சார்ந்த நம்பிக்கையை தரும் கதை. 


காளிங்க நர்த்தனம்.

வைணவ கதைகளில் ஒன்று காளிங்க நர்த்தனம். காளிங்கன் என்பது ஐந்து தலை நாகம் , அதை வெற்றி கொண்டு கிருஷ்ணன் அதன் தலை மேல் ஆடிய நடனம் காளிங்க நர்த்தனம். ரொம்ப எளிமையான இதன் தத்துவம் முன்னோர்களின் அனுபவ குறிப்பு. கண்-பார்வை , காது-கேட்டல் , மூக்கு- நுகர்தல் , வாய்- பேசுதல் ,கைகளும்கால்களும் – தொடுதல் என விளக்க வேண்டியதில்லை என்றாலும்... ஒருவர் ஐந்து புலன்களும் அடக்கி ஆள வேண்டும்.

காந்தியின் குரங்குகள் நினைவுக்கு வராமல் இருக்காது. அவரும் ராம் தான். காந்தி ராம்.  மனம் என்பது பாம்பு.சும்மா நெளிந்து நெளிந்து அலை பாய்ந்து கொண்டே இருக்கும் , இந்த ஃபேஸ்புக் காலத்தில் மனசும் பாம்பும் ஒண்ணுனு சொன்னா சுலபமா புரிஞ்சுடும்.

இந்த ஐந்து வகை புலன்களும் தொடர்பு  கொண்ட மனப்பாம்பு , தலைகளை தட்டி வைத்து அடக்கி வைக்க தெரிந்திருக்க வேண்டும்.இல்லன்னா கிருஷ்ணர் மாதிரி யாரவது வந்து கட்டுப்பாட்டிற்கு இல்லாத புலன்களை தட்டி வைப்பார்கள்.

அதனால்தான் அலை பாயுதே கண்ணா என , அவரை வந்து நர்த்தனம் ஆடி அடக்கி வைக்க கூப்பிடுகிறார்கள். இசையில் காலிங்க நர்த்தன தில்லானா என்று ஒன்றும் வைத்திருக்கிறார்கள்.யமுனா நதியில் அழிச்சாட்டியம் பண்ணிய , காளிங்கனை அடக்கிய கண்ணனே வா என்று அதில் வரும்...கேட்க நல்லா இருக்கும். ஒரு கோபமான , கேட்கும்போதே ஆட வேண்டும்போல இருக்கும். 

சரி போதும் புராணங்கள் ,
அப்புறம் பதஞ்சலி முனிவர் பற்றியும் சொல்லணும். அவர் பாணினி மொழியில், யோகா , மருத்துவம் , இலக்கணம் வகுத்து கொடுத்திருக்கிறார் . இரண்டு நாக பாம்புகளுக்கு மேல் உட்கார்ந்திருக்கும் சிலைகள் கோவிலில் இருக்கும். பனிரெண்டு சைவ சித்தர்களில் ஒருவர். அவரைப்போன்ற சித்தர் முறுக்குசாமி ,அரியக்குடி ஊத்துக்கோட்டை கோவிலில் இருக்கிறார்.

கோவிலுக்கு சென்றால் அவர் பேசுவதை கேட்காமல் ,ஞானச்சிதறலை கேட்காமல், திரும்பாத மாணிக்கம்.,தானும் ஒரு நாள் விஷ காய்ச்சலில் விழுகிறான். ஏனென்றால் அது பரம்பரை சாபம். இவ்வளவுதான் கதை.

ஆனால், நாக தோஷம் என்னும் பேச்சு ,தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் தண்டனையாகவே இருக்கிறது. மாணிக்கம் என்னும் பெயரே , பாம்பின் வாயிலிருந்து அதன் விஷம் காத்து அதனால் உருவாகும் கல் என்று தானே சொல்கிறோம். அப்படித்தான் இந்த கதை நாயகன் மாணிக்கம் கூட குற்றம் குறை இல்லாதவன். ஆனால் அவனையும் சாபம் விடவில்லை. 

இது உண்மையா, மாணிக்கத்தின் பூட்டி செய்த தவறுக்கு ,முப்பாட்டன் செய்த தவறுக்கெல்லாமா இப்ப தண்டனை வரும்...ஆம்மாம்...என்கிறார் சுனீல் கிருஷ்ணன். அறிவியலாக புரிந்து கொள்ள முற்சி செய்யலாம், தன மன பாம்பை அடக்கி ஆள தவறிய, ஏதோ ஒரு புலன்களின் தூண்டுதலால் மீளாத்தவறு செய்த முன்னோர் , ஜீன் இப்போதும் நமக்குள் ஒளிந்திருக்கிறது.
அது வெளியே வரும். கண்ணன் போல ஏதோ ஒன்றின் மூலம் தண்டிக்கப்படும்...ஆமா...மாணிக்கம் மாதிரி விஷம் உபயோகப் படுத்தாத , உயர்ந்த கல்லுக்கு ஏன்?

அதுக்கு விளக்கம் தெரியல..எனக்கு சாபம்னு சொல்லிட்டு போறத தவிர..அப்படித்தான் நடக்கிறது என ஜோதிட சாஸ்திரம் கூட சொல்கிறது.இதில் உண்மையில்லை என்றெல்லாம் சொல்ல முடியவில்லை.முழுக்க கட்டுக்கதை என்று ஒதுக்க முடியவில்லை.
ஏதோ இருக்கு ...,எனக்கு தெரியல. 



வாசுதேவன்

தொகுப்பின் முதல் கதை.

வெறும் எலும்புகளுக்கு மேல் யாரோ தோலை உருக்கி ஊற்றியது போல வாசுதேவன்,மண்டையில் முடி ஒட்ட வெட்டி, வலது பக்க மண்டையோட்டின் ஒரு பகுதி இல்லாமல்,பள்ளத்தாக்கு போல இருக்கும் ஏறக்குறைய சாவின் விளிம்பில்.,உயிருள்ள பிணம்.ஆக்ஸிடென்ட் ல் தலையில் அடி நான்கு வருடங்களாக கட்டில் பிணம்.

அங்கு ஆயுர்வேத பேராசிரியர் கொடுத்த சிகிச்சை முறைகள் படி தினமும் வாசுதேவனுக்கு மருத்துவம் செய்ய சென்ற இரண்டு ஆயுர்வேத மாணவர்கள்.அது கிழி,பிழிச்சல்,வஸ்தி,மூக்கு குழாய் வழியே தங்க பஸ்பம் என பல வகை சிகிச்சை முறைகள்.

முதல் நாள் முதல் டீ காபிக்கு பதில் பூஸ்ட் வாங்கி குடிக்கும் மாணவர்கள்.
பேராசிரியர் பணத்திற்காக செய்ய சொல்கிறார் என்பதை அறிந்தும் வாசுவின் மேல் அருவருப்புடன் சிகிச்சையை ஆரம்பிப்பவர்கள்,பத்து பதினோராவது நாள் கடந்த பிறகு அப்படி ஒன்றும் அருவருப்பாக வாசு அவர்களுக்கு தெரியவில்லை.

ஒரு நாளைக்கு ஆயுரத்தைநூறு செலவாக்கும் அப்பா அம்மாவின் முகம் பார்த்து, உண்மையை சொல்ல நினைத்து, வாசுவுக்கு எந்த வைத்தியமும் சரியா வரும்னு தோணலை, என்பதை கொஞ்சம் கொஞ்சமாக அம்மாவிடம் சொல்ல, இந்த சுத்து சிகிச்சை, ஒரு மாதமாக செய்ததுடன் முடித்து கொள்வதாக அப்பா சொல்ல வெளியேறுகிறார்கள்,அதே நாள்,

கணவன் ஆர்மியில் இருந்து இறந்துவிட்ட , வாசுவின் சகோதரி குழந்தையுடன் வேலை மாற்றம் காரணாமாய் , வாசு வீட்டிற்கே வருகிறாள். 
மூன்றாம் நாள் வாசு இறந்து விட்ட செய்தி வருகிறது.  குழந்தை வைத்திருக்கும் பொம்மையின் கை கால்களை பிடுங்கி திருகி கழுத்தை திருகி விளையாடிக் கொண்டிருக்கிறது. என்று முடிக்கிறார்.  

சரியா, இப்ப வண்ணநிலவனுடைய எஸ்தர் சிறுகதையையும் வாசித்துவிடுங்கள். இரண்டு பேரும் சொல்வது , கருணைக்கொலை பற்றியது. அந்த சூழல் , கடுமையான , திரும்பி வரவே முடியாத மரணப் பாதையில் , இருக்கும் நெருங்கிய உறவு , உயிர் பிரிய நாம் கண்ணை மூடிக்கொள்வது. இங்கு மாணவர் சுனீல் செய்ததும் அதுவேதான், அவரின் அன்பும் மெல்லிய மனதும் அந்த அம்மா அப்பாவின் செலவை தாண்டி, பொய்யான நம்பிக்கையை இந்த சிகிச்சை தருவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அதற்கு மேல், வாசுவுடன் அந்த குறைந்த நாட்களில் ஏற்படும் உறவு, உயிர் படும் வதை, உயிர் இச்சை மட்டும் இருக்கும் வாசு, சுனீலின் கண்களில் எதையோ எதிர்பார்த்து பேச தேடும் , உணர்வை , சுனீல் புரிந்து கொள்கிறார்.
மனதோடு பேசவும் செய்கிறார். தன்னுடைய சிகிச்சை பற்றி நம்பிக்கை தருகிறார்.

ஆனால் சுனீலுக்கும் தெரிகிறது வாசுவுக்கும் புரிகிறது, வாசுவின் உடலில் எந்த முன்னேற்றமும் நடக்க போவது இல்லை என , வெறும் காசுக்காக ,சிகிச்சை அளிப்பதை வெறுக்கிறார் சுனீல். உண்மையை சொல்லிவிட்டு நகர்ந்து கொள்வது , ஒருவகையில் அந்த கடைசி நம்பிக்கையையும் ,கைவிடுவது போலத்தானே.வலியுடன் அதை கடக்கிறார்.

உண்மையிலேயே சுனீல் வாசுவின் மூச்சை நிறுத்திவிடுவதாக முதலில்  எழுதி இருப்பாரோ என, எனக்கொரு எண்ணமிருக்கிறது.பிறகு அவருடைய தொழிலுக்கு அது சரிப்பட்டு வராது என மாற்றி இருந்திருக்கலாம். பிறகு வாசுவின் சகோதரியின் குழந்தை மூலம், நடப்பதாகவே மறைமுகமாய் சொல்லி முடிக்கிறார்.

அழகான முரண் கருணைக்கொலையில் காலம் கடந்து எப்போதும் வாழ்கிறது.,வேறு வார்த்தைகள் தேடுகிறேன், அன்பின் அடிப்படையில் உயிரைப் பிரித்தல்னு வச்சுக்கலாம். முரண் , என்னன்னா , உயிர் பிரித்துவிடலாம் அல்லது மருத்தவத்தை நிறுத்திவிடலாம் எனும் முடிவை இந்த உலகத்திலேயே மிகவும் நேசிப்பவர்தான் எடுக்கிறார் , இப்போதைய நிலையை ,அந்த ஆன்மா படும் வதையை உணர்ந்தவர் மட்டுமே முடிவை எடுக்கிறார்.

உயிரின் மீது காட்டும் அன்பு எப்படி உயிரை பிரிக்கிறது என்பதுதான் , இதன் மையம். உயிர்த்தன்மை வாய்ந்தது அன்பு. அது பாதுகாக்கும், உணவு தரும், ஆறுதல் தரும், கோபப் படாது ,பொறாமை கொள்ளாது, தன்னை வருத்திக் கொள்ளும், மரியாதையை தரும், உணர்வுகளை சிந்தனை வழியே பேசிக்கொள்ளும்,

அது எப்படி ஒரு உயிரை பிரிக்கும்?
ஆம் அன்பு உயிரை பிரிக்கும் வேலையையும் செய்யும்.அந்த சூழ்நிலை மிகவும் துயரமானது, அன்பை பெறுபவர் மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொள்வார்கள். அன்பை தருபவருக்கு , காலங்கள் சென்றாலும் அது மனதை விட்டு நீங்காது.ஒருவித குற்ற உணர்ச்சியுடன் இருப்பார்கள்.

உயிர் பிரியும் அந்த ஆன்மா அவர்களை விட்டு பிரியவே பிரியாது. இது ஏதோ ஆன்மீக கருத்து இல்லை, எண்ணங்கள் மூலம் , அந்த முடிவு தந்த வலி, மீண்டும் மீண்டும் சுற்றி சுற்றி வரும். நினைவுகளில் அன்புக்குரியவர் வாழ்ந்து கொண்டே இருப்பார். ஆன்மா மகிழ்வுடன் இருக்கும். அப்படித்தான் இந்த உணர்வு வாழும்.

அறம் சார்ந்த இந்த நிலைப்பாடு மிகவும் தனிப்பட்டதே தவிர யாராலும் பொதுமைப்படுத்திவிட முடியாது.சட்டங்கள் சில நாடுகளில் இருந்தாலும், உயிர் விடுதலை அளிப்பவர் உயர்வான அதே சமயம், மிகவும் பாரமான நிலையில் இருக்கிறார். இங்கு அந்த பாரத்தையும்,உயர்வையும் குழந்தையின் மேல் சுமத்தி விட்டு சுனீல் தப்பி விட்டார். குழந்தைதான் அந்த தெய்வம் என்று முடித்துவைக்கிறார்.

Tuesday, May 8, 2018

அம்புப் படுக்கை - டேவிட் வாசிப்பு

(நண்பர் டேவிட் நீயா நானா படப்பிடிப்பில் பழக்கமானவர். தற்போது தனியாக திரைப்படம் எடுக்கும் முயற்சியில் இருக்கிறார். அம்புப் படுக்கை தொகுப்பை வாசித்து அதில் அவரைக் கவர்ந்த ஐந்து கதைகளைப் பற்றி எனக்கு தனித்தனியாக மடல் செய்தார். அவற்றை இங்கே ஒன்றாக தொகுத்து உள்ளேன். நன்றி டேவிட்)

ஆரோகணம் :;
அவரோகணத்தில் ஆரம்பிக்கிறேன்.
எந்த உயர்வையும் புனிதப்படுத்தாத நிலையில் இருந்து பார்க்கிறேன். ஒவ்வொரு முறை படித்து முடியும்போதும் சுனிலின் கதை தொகுப்பின் மையத்தைபற்றி வாசித்துவிட்டு வருகிறேன். சுவை கூடுகிறது.

காந்தியின் அம்புப்படுக்கை இது. அதாவது இறப்பின் கடைசி நிமிடங்கள் . அந்த சூழலில் என்ன நினைத்திருப்பார். வாழ்க்கை வாழ வேண்டுமென்றா இல்லை வேண்டாமென்றா என்ன நினைத்துகொண்டிருப்பார். இறந்த பிறகு எல்லோரும் சொல்வது போல அவர் சுவர்க்கத்திற்கு போயிருப்பாரா..
அங்கே அவருக்கென்ன வேலை?

அவர் நரகத்தில் இருப்பதையும் அங்கும் போய் பணிவிடை செய்வதையும்தான் விரும்புவார். அதுதான் காந்தி. எழுத்தாளன் வாசகனின் கவனத்தை கோருவது, இதுபோன்ற படைப்புகளில் தான். காந்தியின் கோட்பாடுகளை திரும்ப திரும்ப நினைவூட்ட வேண்டிய காலகட்டத்தில்
இருக்கிறோம்.
$
காந்தியின் கொள்ளுப்பேத்தி நீலம் பாரிக் எழுதிய புத்தகத்தின் மேற்கோள் வருகிறது. தன் மகன் ஹரிலாலுக்கு அநீதி செய்துவிட்டதாக நினைப்பார் என்பதும் , இங்கிலாந்து செல்ல அவரை அனுமதித்து, தன் அன்பை தன் கொள்கைகளை திணிக்காமல் இருந்திருக்கலாம் எனவும் , ஒரு
தலைவனின் மகன் அடையும் துன்பம் உணர்ந்தவராகவும் , கடைசி நிமிடங்களில் வருந்துகிறார்
காந்தி.
$
காலமும், தேசமும்,தொலைவும் எதுவும் அவருக்கு தெரியவில்லை.அவர் கண் முன் வெண் பனி கடல் இருப்பதாக சொல்கிறார் சுனீல்.
என்னவொரு சர்ரியலிஸ்டிக் கற்பனை.
காந்தி எந்த காலத்திற்கும் பொருத்தக்கூடியவர். காந்தி எல்லா தேசத்திற்கும் பொருந்தக்கூடியவர். காந்தி எல்லையில்லா தொலைவிற்கு உங்களை கூட்டி செல்வார். அவருக்கு அவர் கண்களுக்கு தெரிந்தது எல்லாம் தூய்மையானது மட்டுமே. அவர் பார்வை நல்லதையே பார்க்கிறது,நல்லதையே கேட்கிறது, நல்லதையே பேசுகிறது.
$
மனைவியை பற்றி நினைக்கிறார். காமம் பற்றியும் அன்னையாக பார்க்கிறேன் என்று சொன்னேனே என்றும் முரண்படுகிறார். இந்த மனசாட்சியே காந்தியின் அடையாளம். இந்த கேள்விகளும் அதன் பதில்களுமே அவர் நம் முன் உயர்ந்து நிற்க காரணம்.

மனைவி உயிரோடு இருந்திருந்தால் தன்னை காப்பாற்ற குறுக்கே வந்து விட்டிருப்பாள், என்பது சுகமான கற்பனை. காந்தி நினைத்திருப்பாரா தெரியாது. ஆனால் எழுத்தாளன் கூட்டிப்போகும் பாதை , காந்தி தன் மனைவியை நேசித்தார் என்பது, அன்னை தன் மகவை காப்பது போல காத்திருப்பார் என்பது, இறுதி மூச்சின் போதும் கஸ்தூரி பாயை நினைத்து பார்த்திருப்பார், என்பது.
$
ஒவ்வொரு வரிகளும் சர்ரியலிஸ்டிக் தன்மையுடன் வாசகன் கற்பனை செய்து பார்க்க தூண்டுகிறது.
“பனிச்சிகரத்தின் சரிவு மேலும் குறுகியது”
“வெண் பனிக்காட்டு பரப்பிலிருந்து துருத்திக்கொண்டு தனித்து உயர்ந்து நின்றது கறுத்த நெடுமரம்.”
$
மூளையின் செயல்பாடுகளைப் பற்றி ,மனிதன் அந்த நாகத்தை அடக்குவது பற்றி யோசிக்கிறார். உறக்கம் வராது போக வைக்கும் நிகழ்வுகள் தெரிகிறது. அவர் விரும்பிய அதாவது காந்தியின் ராம் பற்றி நினைக்கிறார். காந்தியின் ராம் வேறு அல்லவா அவர் அன்னை கற்று தந்த உறக்கமற்ற இரவுகளை கடக்கும் மந்திரங்கள் சொல்லும் சிறுவனை போல் காந்தியை நினைத்துப்பார்க்கவே அழகாக இருக்கிறது, சுனீலின் மனம் போல.
$
காலன் என்னும் உலக நியதியை, அவர் பழக்கி வைத்த நாயை போல கூடவே தன் சொல் பேச்சு கேட்க வைத்திருந்ததையும் அழகாக காட்சிப்படுத்துகிறார். காந்தியின் பயணம் முழுதும் தொடர்ந்து வரும் கருப்பு நாயாக சாவை அழைத்து வருகிறார். ஒரு இடத்தில் காந்தி “ நல்ல வழித் துணைவன் நீ “ என்று கூறுகிறார். மனிதா நீ இறக்கப்போவதை
நினைத்துக்கொள் , உன் அகங்கார மமதையை அடக்கு என்கிறார் சுனீல். ஏனென்றால் காந்தி அதை செய்து காட்டியிருக்கிறார்.
$
அப்புறம் முழுமையும் முழுமையின்மையும் பற்றி பேசுகிறார் காந்தி. முழுமையை எம்பி குதித்து எட்டிபிடிக்கவே தன வாழ்நாள் முழுவதும் முயன்று இறுதியில் தோற்று விட்டதாகவே காந்தி நினைக்கிறார். முழுமையற்ற மனிதனாக தன்னை உணருகிறார்.

சுனீல் கூட கைலாஷ் மானசரோவர் போய்விட்டு வந்திருக்கிறார் என நினைக்கிறேன்.அந்த சூழலில் விம்மி வெடிக்கும் அழுகையும் மனிதத்தின் முழுமையற்ற தன்மை மீது வரும் நேசமும், காந்தியின் எண்ணமாக எழுதி இருக்கிறார்.
$

கதை ஆரம்பத்திலேயே காந்தி சுடப்படுகிறார் , பட் பட் என்று , கதை இறுதியில் அதாவது தர்மர் என்னும் யமன் கூட்டிப்போக வரும் இடைப்பட்ட நேரத்தில் இவ்வளவு சிந்தனைகள். தர்மர் அவரிடம் பட் பட் பட் என்று மூன்று குண்டுகள் சுடப்பட்டன என்று உறுதிப் படுத்துகிறார். சுனீல் நினைக்கிறார் இரண்டாவது குண்டில் அவர் உடல் வலியிலிருந்து விடுபட்டிருக்கும் என்றும் மேலும் நான்காவது குண்டு பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்றும் நமக்கு கூறுகிறார்.
அத்தனையும் காந்தித்தனம் , காந்தி டுடேவின் டேக் லைனே அதுதானே ,
என் வாழ்க்கையே என் செய்தி ...என்பதுதானே அது.

திமிங்கிலம்

திமிங்கிலம் பற்றிய செய்திகள் அனைத்தும் நன்மையை பிரதிபலிப்பதாக இருந்தது இதுவரை. ஓ இப்படி ஒரு உயிர் இருக்குமா என்றால் அதற்கு முழு தகுதியும் திமிங்கிலத்திற்கு இருக்கிறது. ஆம்.உலகமே அழியப்போகிறது.உலகின் முதல் மனிதனைப் பற்றி வாசித்திருப்போம். ஆனால் கடைசி மனிதன் யார் , அவன் யாராக இருப்பான்
என அறிய முயன்றிருக்கிறார்.

உலகின் கடைசி மனிதன் திமிங்கிலமாகத்தான் உருவகப் படுத்தப் படுவான்.
ஏனென்றால் திமிங்கிலம் எல்லோரையும் விட நீண்ட நாள் வாழமுடியும்.
மற்ற மீன்களை , சக உயிரை உண்டு வாழும். நிலத்திலிருந்து நீருக்குள் வாழ பழகிக்கொண்ட மிருகம். மிகப்பெரிய பாலூட்டி . அப்ப கதையும் ஃப்யூச்சர்ல நடக்கற மாதிரி தான யோசிக்க முடியும். ஸோ சயின்ஸ் ஃபிக்ஸன்
கதையாக இருக்க, அம்புப்படுக்கை கான்செப்ட் படி , அந்த கடைசி மனிதனின் கடைசி நிமிடங்கள். அவன் என்றே வச்சிக்குவோம் , அந்த கடைசி மனிதனின் குணம், அவன் மனைவி பற்றி, அவன் தான் வாழ்வதற்காக என்னவெல்லாம் செய்வான். என்று யோசித்திருக்கிறார்.

ஆரம்பமே கனவில் துவங்குகிறது. வரிசையில் எரிபொருள் வாங்குவதற்கு க்யூ நிற்கிறார்கள் வளர்ப்பு பிராணியை தேடும் பாட்டி... எரிபொருளுக்காக மனித எலும்புகளை உபயோகிப்பதால் எங்கும் பிண வாடை. மனிதன் தன் நிலைத்த பாதுகாப்பான வாழ்வுக்கான தேடல்.

2020 ல் முதலாம் பெரு நிகழ்வு முதல், 3000 ல் எட்டாம் பெரு நிகழ்வு வரை உலகம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டு வருகிறது. பெருநிகழ்வு ஒவ்வொன்றும் ஒரு அழிவை தருகிறது. புதுப்பிக்கவியலா எரிசக்தி காலாவதியாகிறது. அறிவியல் கண்டுபிடிப்புகளே மானுடத்திற்கு எதிரி என்பதை நிறுவுகிறார் சுனீல். அடிப்படை அறிவியல் தவிர. அவன் ஆராய்ச்சியாளனாக இருக்கிறான். அவனுடைய அறிவியல் ஆராய்ச்சியும் ராணுவமும் சேருவதை அவன் மனைவி விரும்பவில்லை.
பிரிகிறாள். ஹோமோ ரீகாம்பினன்ட், ம்யூடன்ட் கார்டிஃபோலியா, பிரகிருஸ்தான் (பிராக்) ,குமிழ் வடிகட்டி, கார்ப்சோ கார்பன், பிணப்பொறுக்கிகள், மனித மூளையை நிலைகுலைய செய்யும் நுண்ணுயிரி, சயனோ பாக்டீரியம் என்று ஆராய்ச்சியில் இருக்கும் விஷயங்களோடு கற்பனையை கலந்து கட்டி முழு நீள ஹாலிவுட் ஆங்கில படத்திற்குண்டான விஷயங்களை தருகிறார்.

2018 ம் ஆண்டு என்ன சமூக தீமையை பற்றி பேசுகிறோமோ அதேதான், எந்த மாற்றமுமில்லை, இன்னும் பட்டவர்த்தனமாக உலகின் ஒவ்வொரு உயிரும் உணரும் ராட்சஷ நிமிடங்கள் கற்பனை செய்திருக்கிறார். அவன் -திமிங்கிலம் – ஹீப்ரு -தற்போதைய இஸ்ரேலியன்/யூதன் . அவள் –வாத்துகுட்டி - அரேபிய பெண் -தற்போதைய ஈராக்கி.

இறுதியாக அவன் தன்னை உணருகிறான். ஆனாலும் மாற்றிக்கொள்ள இயலா தூரத்திற்கு போய்விட்ட அவனால் எதையுமே மாற்றமுடியவில்லை.
அவனுடைய கண்டுபிடிப்புகளே அவனை தற்சார்புடைய, தோல் மூலம் சுவாசிக்கும் உயிரினமாக , கடலுக்குள் சென்று விடுகிறான். எனக்கென்னவோ அவன் இந்த உலகின் கடைசி உயிரினமாகவே இருப்பான் என்று தோன்றுகிறது.

மனிதம் மீது அக்கறையற்ற உலகமாக மாறிவரும் சூழலில், நடக்கபோகும் நிகழ்வுகளை பேசுகிறார் சுனீல்.மனிதன் மாபெரும் சல்லிப்பயல் என்று ஜி.நா சொன்னது ஞாபகத்துக்கு வருகிறது.

கூண்டு
மந்திரக்கூண்டு செய்ய சொல்கிறான் அரசன். கொல்லன் ஒரு தேர்ந்த ரசவாதி. அந்த நாடு காரணமில்லாமல் வஞ்சிக்கப்பட்டவர்கள் கொண்ட நாடு. இந்த பின்னணியில் ஒரு ஃபாண்டஸி கதை. இன்று முழுக்க முழுக்க நியாயம் கேட்டல் ,நீதியை நிலை நாட்டல் , அதர்மத்தை அழித்தல் என்ற
கோரிக்கைகள் முதலாளித்துவத்துக்கு எதிராக ,கார்ப்பொரேட்டுக்கு எதிராக, சுரண்டலுக்கு எதிராக கேட்கும் எல்லா குரலும் ஆள்பவர்களின் தவறை நோக்கியே இருக்கும்.

அதுதான் இந்த கூண்டு. கூண்டு = நீதி ; கொல்லன் = நீதி,காவல் துறைகள். இந்த நாட்டிலும் ஒரு மாயக்கூண்டு செய்ய அரசன் கொல்லனிடம் சொல்கிறான். கொல்லனும் பதினான்கு ஆண்டுகள் மேலாக உழைத்து உருவாக்குகிறார். பதினான்கின் முக்கியத்துவம் பற்றி புராணங்களில் சொல்லப்படுவன பற்றி நான் யோசிக்கவில்லை. ஆனால் அது ஆயுள் தண்டனைக்காலம் என்கிறேன். அந்த கூண்டை வைத்து தவறு செய்பவர்களை, அரசுக்கு துரோகம் செய்பவர்களை பிடித்து விடலாம். என்று அதன் மேல் எதிர்பார்ப்பு அதிகமாகிறது. கூண்டு இரக்கமற்ற இயந்திரம் என்ற பயம் மக்கள் மனதில் இருந்தது கூண்டு வரப்போகிறது என்பதாலேயே சின்ன சின்ன திருட்டுகள் குறைந்தது. ஒருநாள் கூண்டும் வந்தது. என்ன செய்தது? அரசனும் மக்களும் என்ன ஆனார்கள்?
அந்த மாயக்கூண்டிலிருந்து அதன் பிடியிலிருந்து யார் தப்ப முடியும்.
ஏனென்றால் இங்கு யார் குற்றவாளிகள் இல்லை?

பேசும் பூனை
தனிமை. வெறுமை.
மொபைல் போனில் வித விதமாக வரும் விளையாட்டுக்கள் தொடர்ந்து பரவலாக புழங்க என்ன காரணம்? தனிமை. வெறுமை. இந்த தலைமுறையின் மிக முக்கியமான பிரச்சனையை பேசும் பூனை., கோபக்கார பறவைகள், ஓடுவது துரத்துவது, பறவையை கொல்லுவது, மறைந்திருந்து மனிதர்களை கொல்லுவது என்று இப்போது நீலத்திமிங்கிலம் என்பது வரையான விளையாட்டுகளில் பார்க்கலாம்.

மொபைல் விளையாட்டுகள் அல்ல பிரச்சனை , மனித மனமே பிரச்சனை.
அகச்சிக்கலில் தொலைந்து போய்க்கொண்டிருக்கிறோம். மிகவும் நியாயமான எதிர்பார்ப்புகள் நிறைவேறாத பெண் தேன்மொழி. வயது வித்தியாசம் மட்டுமில்ல கணவனின் செயல்களும் அவளை விலகிப்போக செய்கிறது. இது மொபைல் விளையாட்டில் கவனத்தை மாற்ற ,காரணமாகிறது. ஒருமுறை அதன் போதை அறிந்து விட்டால் அதற்குள்,அதற்குள் மீண்டும் மீண்டும் இழுத்துக்கொண்டு போகிறது. இங்கு பேசும் பூனை தேன்மொழிக்கு இன்னொரு மெய்நிகர் நண்பனாக மாறுகிறது. புத்திசாலித்தனமாக உரையாடுகிறது. அவளுடைய வேலை பழு குறைக்க புதிய பொருள்களை வாங்கி குவிக்கிறது.

இங்கு தனிமைக்கு ஆட்படாத ஆளே இல்லை எனலாம். எல்லாம் இருக்கும் ஆனால் ஒரு வெருமையில் வாழ்கிறார்கள். சுனீல் கூட தனிமை உணர்ந்து தான் எழுத்தாளராக மாறி இருக்கிறார். உலகத்துடன் தொடர்புடன் இருத்தல், தன்னை சமூகத்துடன் தொடர்பு படுத்திக்கொள்வது எல்லோருக்கும் வாய்க்காது. 
எழுத்தாளனுக்கு,பத்திரிக்கையாளனுக்கு,இயக்குனருக்கு,அரசியல்வாதிக்கு மிக சுலபமாக தொடர்பு ஏற்பட்டுவிடும்.மொத்த சமூகத்தையும் அவன்
பார்க்கிறான். இங்கு மிக அதிகமான எண்ணிக்கையில், இறுக்கமான சூழல், அவரவர் வாழ்க்கையினால் ஏற்படுகிறது. வாழ்க்கை முறையினால் ஏற்படுகிறது. எம்பத்தி குறைந்து கொண்டே வருகிறது. அடுத்தவர் மனதை அறிந்து கொள்வதே இல்லை , சூழ்நிலையை புரிந்து நடந்து கொள்ளும் தன்மை இல்லை.

மரக்கட்டைகளாக, நுண்ணுணர்வற்றவர்களாக , உணர்வு வறட்சியுடன்
பொருள்களை நோக்கிய வாழ்வு வாழ்கிறோம். இன்றைய மத்திய வர்க்க பிரச்சனையை பேசுகிறார்.ஓடுவது யாருக்கென்று புரியாமல், பிறகு களைத்து போய் சாவு கேட்கும் மக்கள். வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நாமே முன்வந்து ஏற்படுத்தும் இன்னொரு சிக்கலே மீள முடியாத தூரத்திற்கு, பிரிவிற்கு கூட்டிப்போகிறது.

தனிமையும்,வெறுமையும் நம்மை தாக்காதவாறு அல்லது அதிலிருந்து வெளியேற என்ன செய்ய முடியும் , இந்த மனிதன். ஆயிரம் பதில்கள் தரலாம்.
உள்ளிருந்து அவனவனுக்கு வரும் பதில்கள் பொறுத்தே நிச்சயிக்கப்படுகிறது மீதி வாழ்க்கை. பெரும்பாலும் குடி,போதைக்கு தஞ்சமடைவார்கள்.அவர்களுக்கு சொல்ல ஒரு பழைய கண்ணீர்
கதை இருக்கும். மனம் சார்ந்த பிரச்சனைகளை வெளியே சொல்லும் சூழலே இங்கில்லை. திருமணம் ஆன பெண்களுக்கு சுத்தமாக இல்லை. திருமணம் ஆன ஆண்களுக்கு போதை விடுதிகளே அடைக்கலம். இதுதான் நிலை. இதைத்தான் பேசும் பூனை பேசுகிறது.

2016

ஒரு புனைவு கதாபாத்திரம் இறப்பதற்கு சில நொடிகள் முன்னதாக பேட்டி எடுக்கிறார் சுனீல் அதாவது நரோபா என்ற அவர் புனை பெயரில். ஜார்ஜ் ஆர்வெல் பிரிட்டிஷ் இந்தியாவில் பிறந்த எழுத்தாளார்., பத்திரிக்கையாளராக அறியப்பட்ட விமர்சகர், சர்வாதிகாரத்திற்கு எதிராக தனது புனைகதைகளிலும்,கட்டுரைகளிலும் எழுதியவர். அவரது 1984 என்ற நாவலின் முக்கிய பாத்திரத்தை மையமாகவும், அந்த நாவலில் இருந்து ஆங்கிலத்தில் உபயோகப்படுத்திய அத்தனை புதிய வார்த்தைகளும் அதன் செயல்களையும் உபயோகப்படுத்தி ஒரு சிறுகதை.

முதல்ல 1984 படிச்சுட்டு வரத்தோணும்படி ஆர்வத்தை ஏற்படுத்திவிட்டது. நரோபாவும் வின்ஸ்டன் ஸ்மித்தும் உரையாடும்போது பெரியண்ணன்,சிந்தனை காவலர்கள், அரை எண் 101, சிந்தனைக்குற்றம் போன்ற ஆர்வெலின் ஐடியாக்களை அலசுகிறார்கள்., . இன்னும் சில நிமிடங்களில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்மித் பின் மண்டை வழியே சுடப்பட்டு
இறக்கப்போகிறார் வாய்மையுடன் இருந்த குற்றத்திற்காக. நீங்கள் கண்காணிக்கப் படுகிறீர்கள். உங்கள் சிந்தையில் வாய்மையை சுமந்தாலும் தெரிந்துவிடும் அவர்களுக்கு , நீங்கள் கலகக்காரர் என்று. ரகசியம்,அந்தரங்கம் என்று ஒன்றில்லை.உண்ணும் உணவும்,பிறப்புறுப்பின் மச்சம் கூட அவர்களுக்கு தெரியும். நீங்கள் கண்காணிக்கப் படுகிறீர்கள். நரோபா பேட்டிக்கு முன் திபெத்தியனுடன் பேசுவதாகவும், பின்னதாக ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கன் ஸ்மித்திற்காக காத்திருப்பதாகவும் சொல்கிறார்.

எங்கெல்லாம் காலனி ஆதிக்கம் இருந்ததோ, அங்கெல்லாம் ஸ்மித்களுக்கான தேவை இருக்கிறது என்கிறார். நீங்கள் வாழ நினைக்கும் வாழ்வை வாழ முடியாது , நீங்கள் ஆர்வெலின் உலகத்தில் அல்ல, உங்களை சுற்றி பாருங்கள் எந்த நாட்டுக்கும் பொருந்தும். நீங்கள் கண்காணிக்கப் படுகிறீர்கள்.

Sunday, May 6, 2018

நானும் என் படைப்பும் - ஏன் எழுதுகிறேன்?

(இந்த மாத கணையாழியில் வந்த கட்டுரை)

பள்ளிக்கு செல்லத் துவங்கிய முதல் நாளில் இருந்தே அன்றைய நிகழ்வுகளை அம்மாவிடம் ஒப்புவிக்கும் வழக்கம் எனக்குண்டு. நிகழ்வுகளின் ஊடாக கதைகளும் இயல்பாக எப்படியோ நெய்யப்படும். சித்ரா மிஸ்சும் ஹனி மிஸ்சும் பாத்திரங்களாக இருக்கும் தினத்தில் நடனமிடும் பல்லிகளும் பேசும் மேசைகளும் கூடச் சேர்ந்துகொள்ளும். அம்மாவிடம் சொல்லும் கதைகள் திட்டமிட்டு யோசித்து உருவாக்கியவை அல்ல. சொல்லச் சொல்ல ஊற்றெடுப்பவை. இன்றுவரை என் கதையின் வடிவம் என இதையே சொல்லலாம். ஒரு சிறிய பொறி அல்லது காட்சி அல்லது கனவு வருடக்கணக்காக ஆழத்தில் துயில் கொள்ளும், ஏதோ ஒன்று விழித்து மேலெழும்பி என்னை வெளிக்கொணர் என கோருகிறது. அதை மட்டுமே வழித்துணையாக கொண்டு, தீர்மானமான இலக்கற்ற வெளியில் துழாவிச் சென்று எங்கோ ஒரு புள்ளியில் இருள் நீங்கும் ஒளியை கண்டு கொள்கிறேன். எழுதி முடித்த பின்னரே நான் கதையாக்குகிறேன். 

நினைவில் அமிழ்ந்த ஒரு மனிதரைப் பற்றி எழுதத் துவங்கி அவர் மீது வேறு பல மனிதர்களின் சாயை கவிந்து முற்றிலும் வேறொருவராக உருமாறுவதை ஆச்சரியத்துடன் காண்கிறேன். ‘அம்புப் படுக்கை’ கதையில் வரும் வைத்தியர் தாத்தா- எனது அப்பா வழி தாத்தாவிற்கு துண்ணூறு கொடுத்து நோய் தீர்க்கும் வழக்கம் எல்லாம் இல்லை. அடிகளார் போல் நீண்ட தாடியுடன் மந்திரித்து துண்ணூறு பூசியவர் அம்மா வழி தாத்தா. ‘காளிங்க நர்த்தனத்தின்’ மாணிக்கம் நானறிந்த நான்கு நபர்களின் கலவை. ஒரு மனிதனுக்குரிய தோற்றமும், வெவ்வேறு மனிதர்களின் இயல்புகளும் எப்படி ஒரு பாத்திரத்தில் உருக்கொள்கிறது என்பது பெரும் புதிர். தொடர்பற்றவையும் தொடர்புள்ளவையும் என எதையெதையோ மனித அகம் தொடுத்து விளையாடுகிறது. இந்த சுவாரசியம், இந்த விளையாட்டு, இந்தப் புதுமை என்னை எழுத வைக்கிறது. கதைகள் வாசிப்பதும் எழுதுவதும் வாழ்வை சுவாரசியமாக ஆக்குகின்றன. வாழ்க்கையை அர்த்தப்படுத்திக்கொள்ள எனக்கு கதைகளை விட மேலான வேறு காரணங்கள் ஏதும் அகப்படவும் இல்லை.   

வாழ்க்கையும் இலக்கியமும் என்னை சம அளவில் பாதிக்கின்றன. அப்படிச் சொல்வதேகூட அபத்தம்தான், தாக்கம் நிகழ வேண்டும், நிகர் வாழ்வு வாழ வேண்டும் எனும் விழைவுதானே வாசிக்கவே வைக்கிறது. ‘வாசுதேவன்’ என்னை எழுத்தாளன் ஆக்கிய கதை. என்னை என் கனவுகளில் துரத்திய ‘வாசுதேவனின்’ முகத்தை எழுதித்தான் கடந்தேன். காஃப்காவின் க்ரேகர் சம்சாவை அறிந்து கொண்ட பிறகுதான், அவன் கனவிலிருந்து கதைக்குள் குதித்து எனக்கு மீட்பளித்தான். அவனை உயிர் பிழைக்க வைக்க முடியவில்லை என்றாலும் கதை வழியாக வெளிப்பட்டு தன்னை அவன் ‘அமரனாக’ ஆக்கிக் கொண்டான். புனத்தில் குஞ்சத்துல்லா எழுதிய நாவல் ‘கன்யா வனம்’, அதன் முன்னுரையில் ‘காலமும் காமமும் மனிதர்களை எப்போதும் அலைக்கழிக்கின்றன’ என்று எப்போதோ வாசித்தது, அரியக்குடி கோவிலில் புடைப்புச் சிற்பமாக பிணைந்து கிடக்கும் ரெட்டை நாகங்களை கண்டதும் நினைவில் எழுந்தது. இந்திய குறியீட்டுவியலில் காலமும் காமமும் நாகமாகின்றன. அந்த நாகத்தில் ஏற முயன்று வழுக்கியவர்கள் வாசலில் இருக்க, நாகத்தில் உறங்குபவன் உள்ளிருக்கிறான், ஒரு கள்ளம் கபடமற்ற பாலகன் காலமற்ற வெளியில் அதன் தலையில் ஏறி நின்று ஆடுகிறான். காமம் பிரபஞ்சத்தின் அளவுக்கே, பிறிதொருவர் இல்லாத நிலைக்கு விரியும்போது காமமற்றவனாகவும் ஆகிறான். அந்தக் கதை அங்கேயே உருபெற்றது. கதைமாந்தர்கள் எல்லோரும் பின்னர் சேர்ந்து கொண்டார்கள். ஆர்வெல்லின் 1984 நாவலுக்கு நூதன முறையில் புத்தக அறிமுகம் எழுதலாம் என்று எழுத ஆரம்பித்து இரண்டாவது பக்கத்தில் கதைசொல்லியின் குணாதிசயம் புலப்பட துவங்கியதுமே கதையாக மாறிவிட்ட கதை தான் 2016. 

நானும் என் அண்ணனும் எங்கள் சொந்த ஊர் திண்ணையில் அமர்ந்து ‘ட்ரேட்’ ஆடியபோது தாய உருளையில் ‘ஆறு’ விழுந்த போதிலும், ஐந்துதான் விழுந்தது என்று சிரமட்டார் காளி மீது பொய் சத்தியம் செய்து பயந்து நடுங்கிய கதையை எழுத வேண்டும் என துவங்கியதே ‘குருதிச் சோறு’ ஆனால் இரண்டாம் பத்தியிலேயே கதை தன் போக்கில் வளர்ந்து கட்டற்று சென்றது. முதல் மற்றும் மூன்றாம் பகுதியை ஒரே நாளில் எழுதி முடித்தேன். ஏறக்குறைய ஓராண்டிற்கு பின் இரண்டாம் பகுதியை எழுதினேன். வாழ்வளித்த முகமறியாத மூதாதைக்கு செலுத்தும் நன்றியாக கதை மாறிவிட்டிருந்தது. 

‘பொன் முகத்தை பார்ப்பதற்கும்...’ ஏறத்தாழ என் கதைதான். எனக்கும் என் பிள்ளைக்குமான பிணைப்பை ஊடறுக்கும் கைபேசியின் மீதான வருத்தம். பெரியவர் அழுவதோடு முடிந்திருக்க வேண்டிய கதை, மன்னை சாதிக், கல்பனா அக்கா, சாம் ஆண்டர்சன்களின் புண்ணியத்தால் வேறொரு முடிவை எட்டியது. தொழில்நுட்ப படையெடுப்பை திறன் கொண்டும் எதிர்கொள்ளலாம், அல்லது கோமாளியாக்கியும் தன் இருப்பை தக்க வைத்துகொள்ளலாம். ‘திமிங்கிலம்’ ஒரு போட்டிக்காக ஆங்கிலத்தில் எழுதிய அறிவியல் புனைவு. மனிதர்கள் எரிபொருளாக ஆகும் சாத்தியத்தை அச்சத்தை மையமாகக் கொண்ட ஒரு கனவின் மீது எழுதப்பட்ட கதை. ஆனால் எங்கோ நிறைவடையாமல் தொக்கி நின்றது. எழுதி முடிக்காத மற்றொரு கதையில் இருந்து ஜெமீமா எனும் பாத்திரமும், பிராகிருதிஸ்தான் எனும் கற்பனை நிலப்பரப்பும் இந்தக் கதையுடன் கலந்ததும் இதன் வண்ணமும் வீச்சும் மாறியது. தொன்மங்கள் மீது பெரும் காதல் உண்டு. தொன்மங்கள் மனித மனங்களின் கூட்டு நெசவு. மகாபாரதத்தின் ‘சுவர்க்க ஆரோகண பருவத்தின்’ தாகத்தில் உருவான கதை ஆரோகணம். ‘குருதி சோறு’ கதையின் தொன்மம் நானறிந்த பல்வேறு நாட்டார் கதைகளின் கலவையில் உருவானது. ‘காளிங்க நர்த்தனமும்’ கூட ஒரு தொன்மத்தை சமகாலத்தில் பொருள் கொள்ளும் முயற்சி என சொல்லலாம். ‘பேசும் பூனையை’ கூட ஒரு தேவதை கதையாக வாசிக்க முடியும். 

என் கதைகளில் சில கேள்விகளை பின்தொடர்ந்து செல்கிறேன். எது விடுதலை? அதை அடைவது எப்படி? தீர்மானமான விடைகளை அடையவில்லை என்றாலும் பயணம் தொடர்கிறது. வஞ்சமும் குரூரமும், பேரன்பும், தியாகமும் என எல்லாமும் ஒரே மனிதனுள் எப்படி குடிபுகுகிறது? கணக்கற்ற ஆச்சரியங்கள் நிறைந்த வாழ்வில் சிலவற்றை புனைவுகளாக்கி விசாரணைக்கு உட்படுத்துகிறேன், அல்லது அந்த விந்தைக்கும் குரூரத்திற்கும் சாட்சியாகிறேன். ஒரு வாசகனாக நிலமற்ற காஃப்காவையும் நிலத்தின் கரிப்பை உணர்த்தும் கி.ரா.வையும் நேசிக்கிறேன். கதைக்காரனாகவும் நான் என்னை குறுக்கிக் கொள்ள விரும்பவில்லை. நிலத்தின், அதன் மாந்தர்களை கதையாக்கும் அதே நேரத்தில் புதிய நிலத்தை கற்பனையில் உருவாக்கியோ அல்லது நிலமே அற்ற வெளியிலோ கதைகளை உலவ விட விழைகிறேன். 

முதல் தொகுப்பிற்கு பின்பான கதைகள், ‘அம்புப் படுக்கை’ தொகுப்பின் பொதுவான விசனங்களில் இருந்து தற்காலிகமாகவேனும் திசை மாறி இருக்கிறது. அதிகமும் குறுங்கதைகள், அதுவும் எழுத்து வாழ்வின் அபத்தங்களைச் சொல்லும் பகடி கதைகளை எழுதி வருகிறேன். இவை ஏதோ ஒரு வகையில் அகச் சமநிலையை ஏற்படுத்த முயல்கிறது. கவிதைக்கு நெருக்கமான வடிவில் உள்ள கதைகள் எனச் சிலவற்றை குறிப்பிடலாம். அல்லது கவிதையாக முடியாமல் தோற்றவை என்றும்கூட. 

கதைகளே அதிகாரத்தை உருவாக்குபவை, நிலைநிறுத்துபவை, அவை நிறுவிய அதிகாரத்தை கதைகளைக் கொண்டுதான் எதிர்கொள்ள முடியும். கதைகளே அதிகாரத்தை உருக்குபவை, நிலைகுலையச் செய்பவையும் கூட. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் கதை ஓர் அரசியல் செயல்பாடு. ஆகவே கதை எழுதுவது எனக்கு சமூக கடப்பாடாகவும் ஆகிறது. அவை நம் நனவிலியில் பலவீனமாகவேனும் அலையெழுப்பிச் செல்கின்றன. 
கதை ஒரு ஆன்மீகச் சாதனையும்கூட. எல்லாவற்றினிலும் மேலாக, கதைகளினூடாக நான் அமரனாகிறேன் எனும் நம்பிக்கை எனை எழுதச் செய்கிறது. என்றேனும் கதைகளில் முழு பூஜ்ஜியத்தை எழுதி விட வேண்டும், ஒருவேளை அதற்கு பிறகு கதை எழுதாமல் போகவும் கூடும். 
அதுவரை எனக்கு நானே சொல்லிகொள்வது. 
ஆகவே கதை புனைக.