Wednesday, January 21, 2015

இருப்பாய் ராமசாமி நெருப்பாய்


‘பேரன்பு மிக்க
ஆம்ப்ளே ராமசாமிகளே
தாயுள்ளம் கொண்ட
பொம்ப்ளே ராமசாமிகளே
அலைகடலென திரண்டிருக்கும்
அத்துனை ராமசாமிகளே’
அகில இந்திய ராமசாமி மக்கள் சம்மேளனத்தின்
113 ஆவது கிளையின் 14 ஆவது உபகிளையின்
செயலர் ‘சிம்மகுரலோன்’ ராமசாமியார் கர்ஜித்தார்.
‘இதோ இன்றொரு ராமசாமி வஞ்சிக்கப்பட்டு
நசுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, அடக்கப்பட்டு,
அச்சுறுத்தப்பட்டு, துன்புறுத்தபட்டு, துரத்தப்பட்டு,
ஓடுகிறான் ஓடுகிறான் ஓடுகிறான்
வாழ்க்கையின் எல்லைக்கே ஓடுகிறான்.
‘ராமசாமிகளே, உண்மையில்,
ராமசாமிகள் அப்படிப்பட்டவர்களா?
நான் கேட்கிறேன், இங்கிலாந்திலே, கிரேக்கத்திலே,
ரோமாபுரியிலே, அமெரிக்காவிலே, அரேபியாவிலே.
எங்கேனும் ராமசாமி இப்படி செய்த வரலாறுண்டா?
இதுவே கிட்டினனசாமிகளும் முனுசாமிகளும்
இப்படி செய்ததாக சொல்லும் துணிவுண்டா இவர்களுக்கு?
பொங்கி எழு புரட்டி எடு’
‘இருப்பாய் ராமசாமி நெருப்பாய்’
 ‘அஹம், அஹம்’ செருமிய தொண்டைக்கு
இதமாக ஜோடா உடைத்து கொடுத்தான் ஒரு ராமசாமி
கேப்பில் ஒரு துண்டுசீட்டை பதுங்கியபடி
கொண்டுவந்து கொடுத்தான் மற்றொரு ராமசாமி
‘மக்கழே, ஒரு மகிழ்சிகரமான செய்தி’
அண்மைய நிலவரப்படி அனைந்திந்திய கணேசன் பேரவையும்,
சர்வதேச பாலமுருகன் சமூகமும், ஐக்கிய கோவிந்தராசு கழகமும்,
இந்திய சாந்திராணி அணியும், தமிழக ஜமுனா சமாஜமும்.
நம் கரத்தை வலுபடுத்தி, ஆதரவு நல்கியிருக்கின்றன,’
அப்துல் காதர்ளும், ஜேம்ஸ்களும், கிருஷ்ணன்களும்,
ஆனந்திகளும், ஆறுமுகங்களும்
ஆதரவளிப்பர் என நம்புவோமாக
ஆம் தோழர்களே இப்போது இது
ராமசாமிகளின் பிரச்சினை மட்டுமில்லை.    

 .