முன்னரே எஸ்ராவை விஷ்ணுபுர விழாவில் சந்தித்து பேசியிருக்கிறேன். காந்தி ஜெயந்தி நிகழ்ச்சி ஒன்றிலும் அவருடன் பங்கு கொண்டிருக்கிறேன். சில முறை அவருக்கு மின் அஞ்சல் எழுதியதும் உண்டு. கடந்த ஞாயிறன்று அவர் குடும்பத்துடன் காரைக்குடி வந்திருந்த போது அவரை நேரில் சந்தித்து ஏறத்தாழ மூன்று மணிநேரம் அவருடன் தனித்து உரையாட ஒரு வாய்ப்பு கிடைத்தது. எங்கள் வீட்டிற்கு வந்தார். சுதீர் அவருடன் எளிதில் அன்டிக்கொண்டான். அவனுடன் சமமாக விளையாடினார். சுதீருக்கு மற்றொரு பெயர் ராமகிருஷ்ணன் தான். அவனும் ஒரு எஸ்.ராமகிருஷ்ணன் தான் என அறிமுகம் செய்தேன்.
![Image may contain: 2 people, people smiling, people sitting, sunglasses and indoor](https://scontent.fmaa2-1.fna.fbcdn.net/v/t1.0-9/21768384_10213671423407412_7556533697226396256_n.jpg?oh=1a4d3acb1e27b4027ca19d4d2479cdfa&oe=5A4C4D68)