Monday, September 9, 2019

மதிமுகம் நேர்காணல்

சென்ற மாதம் சென்னைக்கு செல்ல வேண்டிய சூழல் இருந்தது. ஏப்ரல் மாதம் தொடங்கியே திருமதி. அபிநயா ஸ்ரீகாந்த் மதிமுகம் தொலைகாட்சிக்காக ஒரு நேர்காணல் எடுக்க வேண்டும் என நேரம் கேட்டிருந்தார். நான் சென்னைக்கு வரும் வேளையில் நேர்காணல் எடுக்க அவருக்கு தோதாக இல்லை. அபிநயா ஸ்ரீகாந்த் அவர்களை 'யாவரும்' நிகழ்வு ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகம். பயனன்றே மதிமுகம் தொலைகாட்சிக்காக அவர் 'ஒரு படைப்பாளரின் கதை' எனும் பெயரில் எழுத்தாளர்களை நேர்காணல் செய்கிறார் என அறிந்து கொண்டேன். இதுவரை முப்பதிற்கும் மேற்பட்ட எழுத்தாளர்களை வாசித்து அவர்களை நேர்காணல் செய்கிறார். தமிழ் இலக்கிய சூழலில் இது ஒரு பெரிய விஷயம் என்றே எண்ணுகிறேன். நேர்காணல்கள் அபூர்வம் அல்ல ஆனால் பெரும்பாலும் பெரியதயாரிப்பு ஏதுமன்றி பொதுவான கேள்விகளே எழும். குறிப்பாக காட்சி ஊடகத்தில் இது அபூர்வம்.  அவ்வகையில் எனக்கும் மதிமுகம் நேர்காணல் நிறைவான அனுபவமாக இருந்தது.  சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பான எனது நேர்காணல் இப்போது யூ டியுபில் வலையேற்றப் பட்டுள்ளது. மதிமுகம் தொலைக்காட்சிக்கும், அபிநயா ஸ்ரீகாந்திற்கும் எனது நன்றிகள். கண்ணாடி போடாமல் சுவிசேஷ ஜபக்கூட்ட போதகர் போல் உள்ளதாக நண்பர்கள் சொன்னார்கள். கண்ணாடியை கழட்டியவுடன் முகத்தில் இருப்பதாக நம்பப்படும் அறிவுஜீவி களையும் காணும்.