Sunday, November 10, 2019

களி - பிரபு முருகானந்தம் வாசிப்பு

(பிரபு முருகானந்தம் எழுதிய கடிதம்)

களி சிறுகதை வாசித்தேன்.  காரைக்குடியில் நீங்கள் கூறக் கேட்கையில் பிடிபடாத தளங்கள் கதையை வாசிக்கையில் திறந்து கொண்டது.  நந்தவனத்தில் தந்தையின் உயிர் பிரியும் கணம் சுந்தர் கண்டங்கள் தாண்டி வசிக்கின்றான். அவரது மரணம் அவனை ஊர் திரும்ப வைக்கின்றது. வந்ததும் தந்தையின் தொழிலைச் தொடரச் செய்கிறது. தொழிலில் தந்தையை விடவும் சாமர்த்தியக்காரன் சுந்தர். வசந்த மாளிகையை கிட்டத்தட்ட முற்றிலுமாக புதுப்பின்கின்றான். வருமானம் பெருகுகின்றது. கொஞ்சம் கொஞ்சமாக அவன் தந்தையின் தடையங்கள் வசந்த மாளிகையில் இருந்து மறைந்து விடுகின்றது. ஆனால் அவன் மனம் தந்தையை தேடும் களம் வசந்தை மாளிகை அல்ல. நந்தவனம். அதுதான் சந்திரனின் இயல்பான களம். அவரது இறுதிச் சாயலாக அங்கு எஞ்சியிருப்பது கணேசன் மட்டும் தான்.  அவன் தந்தையின் மரணம் மனதில் ஏற்படுத்தியிருக்கும் வெறுமையை கணேசன் ஒரு கணமேனும் நிரப்ப மாட்டாறா என சுந்தரின் மனம் தவிக்கின்றது. அவன் கணேசனை சந்திரனாக கற்பனை செய்ய முயற்சிகின்றான். அது கணேசனுக்கும் அது தெரியும்.  இளமையிலியே மைந்தனை இழந்த கணேசனின் மனமும் சுந்தரை மகனாகச் சென்று அறவனைக்கத் துடிக்கின்றது.  ஏனோ சுந்தர் வாங்கித் தந்த ‘ஆஷ்பி’ ராக்கெட்டை மடியில் அமர்த்தி குழந்தையாக பாவிக்க முடிந்த கணேசனால் சுந்தரைச் மைந்தனாகக் தழுவிக்கொள்ள இயலவில்லை.  இவ்விரு மனங்களின் அன்பும், அகங்காரமும் ஆடும் ஆட்டம் களி.   

No comments:

Post a Comment