Saturday, November 13, 2010

ஆயுர்வேதம் ஒரு அறிமுகம் - 7

இன்றைய காலக்கட்டத்தில் மருத்துவ துறையில் பல பிரிவுகள் உள்ளன .ஸ்பெசாலிட்டி, சூப்பர் ஸ்பெசாலிட்டி என்று தினம் தோறும் புதிய பிரிவுகள் வந்த வண்ணம் உள்ளன .ஆயுர்வேதத்தில் எப்படி ?
ஆயுர்வேதத்திலும் பல பிரிவுகள் உள்ளன .முதல் கட்டமாக ஆயுர்வேதத்தை மூன்றாக பிரிக்கலாம் .
1.மானுஷ ஆயுர்வேதம்- மனிதர்களுக்கானது
2.வ்ருக்ஷ ஆயுர்வேதம் -மரம் செடி கோடிகளுக்கு ஆனது
3.மிருக ஆயுர்வேதம் - பிராணிகளுக்கு ஆனது .
இதில் வ்ருக்க்ஷ ஆயுர்வேதம் முற்றிலும் வழக்கொழிந்து போய் விட்டது .கவனிக்க மரங்களுக்கு ஜீவன் உள்ளது அதை பேண வேண்டும் எனும் முனைப்பு அன்றே இருந்து உள்ளது
மிருக ஆயுர்வேதம் பரவலாக ஓரளவுக்கு விஞ்சி இருக்கிறது - யானைகளுக்கும் குதிரைகளுக்கும் இன்றும் சில இடங்களில் இது நடைமுறையில் உள்ளது .முறையே கஜ ஆயுர்வேதம் , ஹய ஆயுர்வேதம் என்று அழைக்க படுகின்றன .பண்டைய காலத்தில் பாலக்காப்ய எனும் ஒரு கஜ ஆயுர்வேத நிபுணர் வாழ்ந்தார் அவர் இயற்றிய பாலக்காப்ய சம்ஹிதையின் சிதறிய வடிவங்கள் இன்றும் கிடைக்க பெறுகின்றன . ஹய ஆயுர்வேதத்தில் மற்றும் பசு ஆயுர்வேதத்தில் மிக பிரசித்தி பெற்ற விர்ப்பன்னராக திகழ்ந்த இருவர் - நகுல ,சகாதேவன் , இவர்கள் ஒரு வருடம் இந்த வேடத்தில் தான் விராட மன்னனின் கீழ் பனி புரிந்தனர் .

மானுட ஆயுர்வேதத்தை பொறுத்த மட்டில் இதை எட்டு அங்கமாக பிரிக்கின்றனர் .
1.காய சிகிச்சை -பொது மருத்துவம் என்று கொள்ளலாம்
2.பால சிகிச்சை -பெண்கள் ,மகப்பேறு ,குழந்தைகளுக்கான பிரிவு
3.கிரக சிகிச்சை - மன நோய்கள் ( உண்மையில் பேய் பிசாசுகள் பீடித்தல் மற்றும் அதனை விரட்டுவதற்கு உண்டான வழி முறைகள் பற்றி இங்கு விவரிக்க படுகின்றன )
4.ஷாலாகிய தந்திரம் - தோளுக்கு மேல் உள்ள பாகங்களுக்கான சிகிச்சை -கண் ,காது ,மூக்கு ,தொண்டை ,பல் ,தலைமுடி ,தலை ,கழுத்து எல்லாம் இதில் அடக்கம் .
5.சல்ய தந்திரம் - அறுவை சிகிச்சை
6.ரசாயன சிகிச்சை - வருமுன் காப்போம் , நோய் தடுப்பு முறைகள் மற்றும் உடலை பேணுதல் ,இளமை மாறாமல் காத்தல்
7.விஷ சிகிச்சை - விஷ முறிவு , ஒவ்வாமை .
8.வ்ருஷ்ய கர்மா - பிள்ளை பேரு பெற , கலவி சார்ந்த பிரச்சனைகளும் அதன் தீர்வும் .

இத்தனை அங்கங்கள் இருந்தும் நாளடைவில் இது மருவி இரு பெரும் நீட்சியாக மாறியது .
தன்வந்தரி சம்ப்ரதாயம் -அறுவை சிகிச்சை பிரதானமாக கொண்டது
ஆத்ரேயா சம்ப்ரதாயம் -மருத்துவத்தை அடிப்படையாக கொண்டது .
சுஸ்ருதர் தன்வந்தரி வழி வந்தவர் ,வாக் பட்டர், சரகர் ஆத்ரேயர் வழி வந்தவர்கள் .
பௌத்த ஜைன மதங்கள் வேரூன்றிய பின் ரச சாஸ்திரம் எனும் புதிய உட் பிரிவு மருத்துவ சம்பிரதாயத்தில் வந்தது .
ரச சாஸ்த்திரம் -கனிமங்களை மருத்துவத்திற்கு பயன் படுத்த தொடங்கினர் .ரச சாஸ்திரம் இன்றைய நவீன வேதியல் ,மருந்தியலின் தந்தை எனலாம் .பல்வேறு தாதுக்களை அதன் மூலத்திலிருந்து பிரிப்பது ,அதை சுத்தி செய்வது , உருக்குவது ,வார்ப்பது என்று என்னனென்னமோ அதில் சாதித்து உள்ளார்கள் .
ரச சாஸ்திரத்தின் அடிப்படை அற்புதமானது ,இவ்வுலகத்தின் பொருட்கள் எல்லாம் ஒரே மூல கூறால் ஆனது ,ஆகையால் எதையும் எதுவாகவும் மாற்றலாம் என்பது தான் அடிப்படை நம்பிக்கை .பிற்காலத்தில் டால்டன் கூறினாரே atom is indestructible , அதற்க்கு எல்லாம் பல நூறு வருடங்களுக்கு முன் இந்த சிந்தனை நீட்சி நம் நாட்டில் இருந்து உள்ளது .

திட பொருளை சக்தி வடிவமாக மாற்றலாம் அதே போல் சக்தி வடிவை கொண்டு திட பொருளை உருவாக்கலாம் என்று அது நம்புகிறது .இது கிட்ட தட்ட நமது ஐன்ஸ்டீன் கோட்பாடு என்பது ஆச்சர்யம் தான் .அப்படி அவர்கள் பல்வேறு தாதுக்களை பாதரசமாக மாற்றி பின்னர் அதை தங்கமாக மாற்ற முயன்றனர் .இந்த தேடலில் பல உபரி கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தது .கந்தகத்தின் கிருமி நாசினி குணத்தை இந்தியா எப்பொழுதோ அறிந்து இருந்தது .மனோசிலை , கந்தகம் , தங்கம், வெள்ளி என்று எதையும் அவர்கள் விட்டு வைக்க வில்லை .

மேலும் ............

2 comments:

  1. இத்தனை விஷயங்கள் இருக்குங்களா,மேலும் எழுதுங்க, நல்லா எழுதி இருக்கீங்க

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி இரவு வானம் .இன்னும் நெறைய விசேஷங்கள் உண்டு

    ReplyDelete