Friday, December 24, 2010

பெற்றால் மட்டும் போதுமா-3

நாம் ஏன் ஒரு குழந்தையை பெற்று கொள்ள வேண்டும் ? இந்த வினாவிற்கு நாம் நேர்மையாக யோசித்து ஒரு பதிலை அடைய வேண்டும் .பல நேரங்களில் என்ன நடக்கிறது என்றால் ,பிள்ளை பேறு ஒரு விபத்தாக இருக்கிறது ,அல்லது சமூகத்தின் கட்டாயத்திற்கு அடிபணியும் வண்ணம் அமைகிறது .இன விருத்தி என்று ஒரு காரணம் மட்டுமா ? இன விருத்தி தான் காரணம் என்றால் ஏற்கனவே உலகம் மனித கூட்டத்தால் நிரம்பி வழிகிறது .குழந்தை பெற்றுக்கொள்ள பல காரணங்கள் உண்டு .
பெற்றோர்கள் பிள்ளைகள் பிறந்த பின்பு ,பிள்ளைகளை பற்றி எண்ணும் பொழுது மூன்று விதமான எண்ணம் வரும் ,பிள்ளைகளின் பேரில் ஒரு வாஞ்சை,பெருமை ,பிள்ளைகள் மேல் வரும் கோவம்,இயலாமை ,தன எதிர்பார்ப்புக்கு விரோதமான நிலைப்பாடு என்று வரும் பொழுது வரும் எண்ணம்- நாம் பிள்ளையை சமூகத்தின் பார்வைக்கு ஏற்றார் போல் வளர்க்கவில்லை என்று தாழ்வுமனப்பான்மை ,அல்லது ஏன் தான் இப்படி ஒரு பிள்ளையை பெற்றோம் என்று ஒரு வெறுமை கோவம் .பொதுவாக ஒரு சராசரியான பெற்றோர் இந்த மூன்று நிலைகளையும் ஏதோ ஒரு இடத்தில் சந்திப்பார் .
"பட்டர் பேபி சிண்ட்ரோம்." (battered baby syndrome ) என்று ஒரு நோய் உள்ளது .குழந்தைகளை மிக வன்மையாக தண்டிப்பது ,சிறு சிறு தவறுகளுக்கு கூட பயங்கர தண்டனைகள் ,சூடு வைப்பது ,ரத்தம் வர அடிப்பது என்று இது நீளும் .இவ்வகை குழந்தைகள் தங்களை பற்றிய ஒரு மோசமான மன நிலையை எட்டி விடுகிறது .இவர்கள் இரண்டு வகையில் வெளி வருவார்கள் ஒன்று -என்னையா அடித்தாய் ,நான் மிகவும் சக்தி வாய்ந்தவனாக வந்து உன் கையை முறிக்கிறேன் என்று முடிவு செய்து ,பாதை மாறி அடாவடி -அட்டகாசங்கள் புரியும் ,பிறரை துன்புறுத்தி இன்புறும் ஒரு மனிதனாக அல்லது என்னை வெறுக்கிறார்கள் நான் வாழ தகுதி அற்றவன் ,எதுக்குமே லாயாக்கிலாதவன் , என்று எண்ணி இறுதி வரை லச்சியங்கள் ஏதும் இல்லாமல் ,தோல்வி முகம் கொண்ட ஒரு வாழ்க்கை .குழந்தைகளை துன்புறுத்தும் பெற்றோர் -அவரது இளமை கால நினைவுகளின் வாயிலாக அதை செய்கிறார் ,ஒரு தவறான முன்மாதிரியை தனது முன்மாதிரியாக ஏற்று கொண்டதன் விளைவு .தொண்ணூறு சத விகிதம் இத்தகைய பெற்றோர்கள் அவர்களது இளமை வாழ்வில் கடுமையாக புண்பட்டிருப்பார்கள்.அந்த குழந்தையை போட்டு உலுக்கி எடுப்பதால் என்ன என்ன விளைவுகள் வரும் எப்படி இறந்து போகும் என்று விரிவாக மருத்துவம் கூறுகிறது (மேலும் தெரிந்து கொள்ள -shaken baby syndrome)
ஒரு அமெரிக்க ஆய்வு சொல்லும் தகவல் இது -அமெரிக்காவில் ஒரு வருடத்திற்கு சராசரியாக அறுபதாயிரம் குழந்தைகள் இவ்வகை பிரச்சனையால் பாதிப்பு அடைகிறார்கள் .சுமார் இரண்டாயிரம் குழந்தைகள் பெற்றோர்களின் கடுமையான நடத்தையால் இறக்கிறார்கள் .இதில் ஐம்பந்தைந்து சதம் ஒரு வயதினருக்கு கீழ் !!நமது நாட்டு நிலைமை ?!
ஒரு கேஸ் ஸ்டடி-ஒரு இளம் அமெரிக்க பெண் அவரது நாற்பது நாட்களே ஆன குழந்தையை அடித்து கொன்றுள்ளார் -காரணம் கேட்ட பொழுது யாரும் ஏன் மீது அன்பாக இல்லை ,எனக்கு பிறக்கும் குழந்தை ஏன் மீது அன்பாக இருக்கும் என்று எண்ணினேன் ,அது தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால் அதற்க்கும் என் மீது வெறுப்பு என்று எண்ணினேன் என்னை என் குழந்தை கூட ஏமாற்றிவிட்டது ,அதான் கொன்றேன் .!! இது மிகை அல்ல ,உண்மை .

ஒரு தாய் அவரின் இரண்டு வயது மகனை ஆஸ்பத்திரிக்கு அழைத்து வருகிறார் ,உடல் சுடுகிறது ஜுரம் என்கிறார் .மருத்துவர் காண்கிறார் ,மருந்து கொடுக்க படுகிறது ,மீண்டும் இரண்டு நாளில் தூக்கி வருகிறார் ,மருந்து- வீடு, மீண்டும் மருத்துவர் ஆனால் ஜுரம் இல்லை .ஆனாலும் மீண்டும் மீண்டும் மருத்துவரை காண வருகிறார் ,அவனுக்கு அது சரி இல்லை இது சரி இல்லை எப்பொழுதும் அழுகிறான், ஏதாவது மருந்து மாத்திரை கொடுத்து கொண்டே இருப்பார் .இன்னொரு தாய் தனது ஒன்றரை வயது மகளுக்கு கையில் சிறு வெட்டு என்று அழைத்து வருகிறார் , மருந்து போட பட்டு அழைத்து செல்ல படுகிறாள் ,மீண்டும் இரண்டொரு நாளில் வேறு விரலில் கட்டு .இப்படி தொடர்கதையாக தொடர்கிறது .இது என்ன தெரியுமா ? "முஞ்ஹாசன் பேபி சிண்ட்ரோம் " (munchaussen baby syndrome or munchaussen syndrome by proxy)
இந்த நோய் பொதுவாக செவிலி தாய்களுக்கும் ,தாய்மார்களுக்கும் ஏற்படுவது ஆகும் ,இது ஒரு விளாயாட்டு -தன் குழந்தையை ஆரோகியமாக இருக்க விட மாட்டார்கள் ,அவர்களின் வாழ்வின் பொருளே குழந்தைக்கு சேவை செய்வது தான் என்று எண்ணுவார்கள்,குழந்தை சரியானால் தங்களது வாழ்வின் நோக்கம் சரிகிறது என்பதால் ,குழந்தையை தொடர்ந்து படுக்கையில் ஆழ்த்தி ,அவர்களை நோய்வாய்ப்பட செய்து தொடர்ந்து தங்கள் கண்காணிப்பில் வைப்பார்கள் .தொடர்ந்து பொய்கள் மூலம் புதிய புதிய வியாதிகளை உருவாக்கலாம் .இது ஒரு மிக ஆபத்தான போக்கு .குழந்தையின் சுகவீனம் இவர்களுக்கு நிம்மதியை அளிக்கும் .பாசமாக உணவு ஊட்டுவார்கள் ,பக்கத்திலே அமர்ந்து கண்விழிப்பார்கள் ஆனால் உடல் நிலை மட்டும் சரியாகாது .(இதை கருவாக கொண்டு ஆங்கிலத்தில் ஒரு நல்ல திரைப்படம் வந்தது பெயர் நினைவில்லை) எனினும் இது சமூகத்தில் அவளவு பரவலாக இல்லை ,ஆகினும் கூட நாம் தெரிந்து கொள்ள வேண்டும் .

பிள்ளைகள் பெரும் முன் நாம் மனதளவில் இன்னொரு உயிரை பேணி காக்க தயாரா என்று கேட்டுக்கொள்ள வேண்டும் .வேண்டா வெறுப்பாக பிள்ளையை பெற்று கொண்டு சனியனே,ஏன் நேரம் என்று அவர்கள் மீது நம் இயலாமையை திணிக்க கூடாது.

ஏன் ஒரு பிள்ளை பாதை மாறுகிறது ? தொடுகையின் முக்கியத்துவம் என்ன ?
வரும் பதிவுகளில் ..
மேலும் அறியலாம் ....
பயனுள்ள சுட்டிகள்..

5 comments:

  1. நல்ல பயனுள்ள பதிவு, இப்படி கூட நடக்குமா என யோசிக்க வைக்கிறது, பகிர்வுக்கு நன்றி சார்

    ReplyDelete
  2. ஸாரி, அந்த முதல் பின்னூட்டம் பழைய ஒன்று. நீக்கி விடுங்கள்./////

    குழந்தைகளை வதைப்பவர்கள் வாழவே தகுதியற்றவர்கள் தான். அதிர்ச்சியாக உள்ளது படிக்க, படிக்க.

    ReplyDelete
  3. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இரவு வானம் ,டி வீ ஆர் சார் ,தமிழ் ரமேஷ் .

    ReplyDelete