Sunday, December 5, 2010

பெற்றால் மட்டும் போதுமா-2


ஒரு குழந்தை தன்னை பற்றிய ஒரு நிலைப்பாடை எட்டு வயதிலிருந்து பத்து வயதிற்குள் எடுத்து விடுகிறது என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள் .தன்னை பற்றிய ஒரு நிலை பாடும் அதன் புற சூழல்,உலகம் பற்றிய ஒரு நிலைப்பாடும் அது இந்த வயதில் அடைந்து விடுகிறது .அப்பொழுது எடுக்கும் அந்த முடிவு,அதன் குணாதிசயங்களை முடிவு செய்து அதற்கேற்ற ஒரு பாத்திரத்தை ஏற்று கொண்டு வாழ்க்கையை நடத்தும் .இதை 'ஸ்கிரிப்ட் ' என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள் .நாம் எல்லோரும் ஒரு பாத்திரத்தை உருவாக்கி அதற்கேற்ற வாறு நடித்து கொண்டு இருக்கிறோம்,அதையே நாம் திரும்ப திரும்ப செய்கிறோம்.
குழந்தைகள் எடுக்கும் நிலைபாடை நான்காக வகுக்கலாம்
நான் சரி ,உலகமும் சரியானதே -(i'm ok.you are ok-positive)- இது ஒரு ஆரோக்கியமான மன நிலையாக வளர்ச்சி பெரும் ,வாழ்க்கையின் பால் நம்பிக்கை இருக்கும்,மனிதர்கள் மீது நம்பிக்கை ,அன்பு இருக்கும்,வாழ்க்கை வாழ்வதற்கே எனும் மனப்பான்மை இருக்கும் .
நான் சரி ஆனால் உலகம் சரி இல்லை -(i am ok,you are not ok-projective) -இது குற்றம் சுமத்தும் மனம் ,நான் மட்டுமே சரி ஆனவன் ,வாழும் தகுதி உள்ளவன் ,நீ தகுதி அற்றவன்,மதிப்பில்லாதவன் ,தனது செயல்களின் விளைவிற்கு இன்னொருவன் மேல் பழி போடுவது .அடக்கி ஆள முயல்வது,அதிகார மையமாக செயல் படுவது

நான் சரி இல்லை, உலகம் சரியானது -(i am not ok,you are ok-introjective)- இத்தகைய மனப்பான்மை கொண்டவர்கள் ,தன்னம்பிக்கை இன்றி தவிப்பர் ,தளர்ச்சி அடைவர் ,மன அழுத்தத்தால் பாதிப்பு ஏற்படும் .உற்சாகமின்மை ,மன சோர்வு .நான் இந்த உலகத்தில் வாழ தகுதி அற்றவன் என்று நம்புவர் ,உச்சகட்டமாக தற்கொலை நடக்கலாம் .

நானும் சரி இல்லை உலகமும் சரி இல்லை -(ii am not ok you are also not ok-futile)-வாழ்கை இவர்களுக்கு ருசிப்பதில்லை ,வாழ்க்கை ஒரு திக்கற்ற,நோக்கமற்ற ஒரு பயணம் ,எந்த சுவாரசியங்களும் இதில் இல்லை ,வாழ்க்கைக்கு மதிப்பே இல்லை ,வாழ்வதில் ஒரு பிடிமானம் இல்லாமல் தற்கொலைக்கு செல்லலாம் .

இந்த நிலைபாடுகளால் அரங்கேறுவது தான் வாழ்க்கை எனும் நாடகம் ,எட்டு வயதிலே நாம் நம் கதாப்பாத்திரத்தை தேர்வு செய்து விடுவோம்,இந்த பாத்திரங்களை குழந்தைகள் தனதாக்கிகொள்ள முக்கிய காரணம் பெற்றோர்கள் என்பது சொல்லி தெரிய வேண்டியது இல்லை
இனி என்ன ? அந்த பாத்திரமாக வாழ்வது தான் பாக்கி .
உலகில் வசிக்கும் அனைத்து மனிதர்களுக்கும் பொதுவான ஒரு எதிர்பார்ப்பு எது தெரியுமா ? நமது இருப்பின் மீதான கவனம் , நமது இருப்பை நாம் ஆழ படுத்துகிறோம் ,அதை பிறர் அங்கீகரிக்க வேண்டும் என்று எண்ணுகிறோம் .இது மிகவும் அடிப்படையான உணர்வு .இந்த அங்கீகாரம் ஒரு மென் சிரிப்பாகவும் இருக்கலாம், இல்லை கண் அசைவாகவும் இருக்கலாம் இல்லை முதுகில் விழும் அடியாகவும் இருக்கலாம், இல்லை கன்னத்தில் விழும் அறையாகவும் இருக்கலாம் .

ஒரு மனிதனுக்கு நாம் கொடுக்கும் மிக பெரிய வலி,அவமானம் அவனது இருப்பை நாம் புறக்கணிப்பதே ஆகும், நாம் நம் குழந்தைகளை புறக்கணித்தால் என்ன ஆகும் ?


தொடரும் ...

1 comment: