Friday, April 14, 2017

வெள்ளிகிழமை ராமசாமி வாராண்டி

திருவாளர் வெள்ளிக்கிழமை ராமசாமி திங்கள்கிழமையே வந்துவிட்டார்.
இப்பொழுது தான், இதோ இரண்டொரு நாட்களுக்கு முன் வந்திருந்தார். 
சனிக்கிழமை சந்திரசேகரன் வரும்வரை இரவெல்லாம் தங்கியிருந்தார். 
காலையிலேயே வந்திருந்தாலும் கூட அவர் பாட்டுக்கும் ஏதுமறியா சினைபூனை போல மூலையில் சுருண்டு படுத்திருப்பார். 
வியாழக்கிழமை வெங்கடாசலம் செல்வதற்கு முன்பா பின்பா? எப்போது வந்தார் என்று கூட தெரியாது. 
அரிதினும் அரிதாக சனிக்கிழமையும் தங்கி சந்திரசேகருடன் சண்டைபிடிப்பதும் கூட உண்டு. 
ஆனால் ஒருபோதும் ஞாயிற்றுக்கிழமை ஞானபிரகாசத்தை கண்டதே இல்லை.
கொஞ்சம் பொறுங்கள், நீங்கள் வர இன்னும் நாளிருக்கிறது
சொன்னாலும் கேட்காமல் நாற்காலியை இழுத்துபோட்டு 
நடுக்கூடத்தில் அமர்ந்திருக்கிறார்.
'வெள்ளிகிழம வர்ற வர இங்கயே இருக்குறேன்.'
என்றார் வெற்றிலை குதப்பியபடி
அப்போதாவது ஒருபோதும் இங்கிருந்து செல்லும் உத்தேசமில்லை
 என்பதை சொல்லி தொலைந்திருக்கலாம்.  



No comments:

Post a Comment