Monday, January 3, 2011

உலகளந்தான்

புதிய ஊர்கள் ,புதிய மனிதர்கள் ,அந்த மண் அதன் மனம் ,அந்த ஊரின் ஆன்மா ஆகியவை அற்புதமானவை .பயணிக்கும் பொழுது வழியில் என் விழிகளில் பிம்பமாக படியும் ஒவ்வொரு பனை மரமும், தென்னை மரமும் ,உடன் வரும் சூரியனும் சந்திரனும், நான் எங்கு சென்றாலும் ,ஒளிந்து கொண்டாலும் முகத்தை பொத்தி விளையாடும் தாய் தன் குழந்தையை கண்டு கொள்வது போல் நான் பயணங்களில் எங்கு ஒளிந்து கொண்டாலும் என்னை கண்டு பிடிக்கும் ,எனக்கும் சூரிய சந்திரனுக்கும் இடையே நடந்தேறும் தொன்மையான விளையாட்டு, எப்பொழுதும் தொடரும் ஒரு விந்தை .எங்காவது செல்ல வேண்டும் ,அது தாஜ் மஹால் ,தஞ்சாவூர் பெரிய கோவில் என்று இல்லை ,ஒத்தை அடி பாதையில் ஊரில் நூறு வீடுகள் கொண்ட குட்டைகள் சூழ்ந்த சிறு கிரமாமாக இருக்கலாம் ,பொட்டல் காட்டில் , வழுக்கை தலையில் ஆங்காங்கு வளைந்து சுருண்டு இருக்கும் தலை மயிர்களை போல் ஆங்காங்கு தென்படும் கருவேலங்களுக்கு ஊடே செம்மண் தரையில் பாதை இல்லாத வழியில் பயணிக்கலாம் .பயணங்கள் மனிதனை அவனுக்கு நெருக்கமாக ஆக்குகின்றன ,அவன அறியாத சூழலில் அவனது எண்ணங்களின் நேர்மையை சோதிக்கின்றன .


உயர்ந்த சிகரங்களும் ,தேங்கிய குட்டைகள்,பாசி படர்ந்த குளங்களும்,தாமரை தடாகங்களும் ,சம தரையாய் விரியும் கடலும் ,பெரும் வெறுமையால் நிரப்ப பட்ட புழுதி பொட்டல்களும் ,பேரிரைச்சலோடு பாரத வெள்ளை நிற நீர் விழிச்சிகள்,அதோடு இனைந்து வரும் ஒரு வித மூலிகை வாசனை.
குருவிகளும் காக்கைகளும்,கூடுகளும் நிரம்பிய உயிர்ப்புடன் கூடிய பிரம்மாண்ட விருட்சங்களும் ,வறண்டு போன கிழவியின் தோலை போல் முதிர்ந்து நிமிர்ந்து உயர்ந்தும் படர்ந்தும் நிற்கும் மகா விருட்சங்கள்.உலகின் கால மாற்றங்களுக்கு வெறும் மௌனியாக ,சாட்சியாக நிற்கும் மரங்கள்
வசந்தங்களில் தனது ஆடைகளை உரித்து நிர்வனாமாக நிற்கும் மொட்டை மரங்களும் ,பாசி பூசிய சுவர்களும் ,வானம் தான் எத்தனை வகை ?சூரியன் உதிக்கும் செவ்வானம், விண்ணில் ஏதும் ரத்த களரி
நடக்கிரதோ என்று நாம் ஐய படும் ரத்த சிவப்பு உடலெங்கும் பூசிய ருத்ர வானம் ,களங்கம் இல்ல குழந்தை போல் மேகம் இல்லா தூய வானம் ,இரவின் நட்ச்சத்திர வானம்,நிலவில்லாத இருண்ட வானம் ,ஹர்ரி பாட்டர் படத்தில் வரும் டம்பல்டோர் தாத்தாவின் தாடி போல் வெண்மை நிற மேகங்கள் நிறைந்த வானம் ,தேர்களாக,முதலைகளாக ,வாய் பிளந்த சிங்கமாக என்று ஒவ்வொரு மேகமும் ஒரு ரகசிய குறியீட்டுடன் வானில் அலைந்து திரிகின்றன .


நான் யார் என்று அவர்களுக்கு தெரியவில்லை ,அவமானம் ,ஆக பெரிய அவமானம் ,எனது வெற்றிகள் ,சாதனைகள் ,தோல்விகள் .ரணம் ,எதுவும் தெரியவில்லை .நான் இருப்பதை கூட பொருள் படுத்தவில்லை ,ஏளன சிரிப்பு ,மனிதனின் அகந்தையை எட்டி உதைக்கும் எக்காளம். ஒரு பிரமாண்டம் ,மிகை ஒழுங்கு ,மிகை அறிவு ,மகோன்னதம் ,பூரிப்பு ,பெருமை ,பேரமைதி என்று உணர்வு கலவைகளில் நான் சிக்கி கொள்வேன் .உலகை அளக்க வேண்டும் ,என் வெறும் கால்களால் உலகம் முழுவதையும் அளக்க வேண்டும் ,நான் வாமணன் அல்ல ,என் காலடி படாத இடமே இல்லாமல் இருக்க வேண்டும். ஒவ்வொரு ஊரின் ஒவ்வொரு மலையின் ,ஒவ்வொரு மலரின் வாசத்தை நுகர வேண்டும் ,ஒவ்வொரு மரத்தையும் ஆற தழுவி உச்சி முகர வேண்டும் இதெல்லாம் சாத்தியமா என்று தெரியாது ,கனவுகள் காண்கிறேன் .


எங்கெங்கோ பயணிக்கிறேன் ,என் பயணங்களில் நான் கண்டதை கேட்டதை பகிர விரும்புகிறேன் ,நான் உலகை அளக்க முடியுமா என்று தெரியவில்லை ஆனால் நான் முயல்கிறேன் ,என்னை நான் வாரம் ஒரு முறை தொலைக்க விரும்புகிறேன் , எனது மொட்டை மாடியில் தெரியும் வானம் எவரெஸ்ட் உச்சியிலிருந்து பார்த்தால் எப்படி தெரியும் என்று உணர விரும்புகிறேன் .

சமீபத்தில் நண்பர்களுடன் சதுரகிரி மலைக்கு பிரயானப்பட்டேன் .மதுரை வந்து அங்கிருந்து கிருஷ்ணன் கோவில் சென்று (ஸ்ரீ வில்லி புத்தூர் செல்லும் வழி ) அங்கிருந்து வத்திரா இருப்பு சென்று அங்கிருந்து தாணிப்பாறை வர வேண்டும் .தாணிப்பாறை -சதுர கிரி மலைகளின் அடிவாரம் .மலை பாதை மிகவும் சவாலானது வழுக்கு பாறைகள் ,நீர் நிலைகள் ,செங்குத்து பாறைகள் ,உருண்டை கற்கள் என்று வழி நெடுகிலும் காண படும் .அமைதியான இயற்க்கை சூழல் ,நம்மை தொலைக்க சரியான இடம் .வழிகள் ஆங்காங்கு பிரியும் சற்று கவனம் தேவை .ஏற இறங்க மொத்தம் 22 கி .மீ ,அதிகம் பாரங்கள் சுமக்காமல் ,சாப்பிட ஏதேனும் ரொட்டிகள் மற்றும் தண்ணீர் குப்பிகள் எடுத்து கொண்டு ஏறினாள் போதும் .என் அளவில் இது ஒரு உன்னதமான அனுபவம் ,அமைதியாக இயற்கையின் பிரமாண்டத்தின் முன் நடப்பது நம்மை உணரும் தருணம் .பயம் ,உற்ச்சாகம் என்று கலவையான மனோ நிலை .இத்தகு மலைகளை ஏறி சாதிப்பது என்ன ? நம் தகுதியை குறிப்பாக உடல் மற்றும் மன தகுதியை சோதிக்க நல்ல களமாகும்.மலை உச்சிக்கு சென்று திரும்பும் பொழுது நாம் நம் பலம் கூடியிருப்பதை உணரலாம் .நம் உடல் மற்றும் மன வலு கூடுவது திண்ணம் .
அங்கு நான் எனது காமெர கொண்டு எடுத்த சில புகை படங்கள் இங்கு அளிக்கிறேன் .

1.ஆதவனின் பார்வையில் சிதறி ஓடும் மேக
கூட்டங்கள்
.








7.இது தான் இளநீர் (இலை நீர் )





எனக்கு படங்கள் எடுக்கவும் பார்க்கவும் பிடிக்கும் அந்த உரையும் தருணங்கள் நினைவலைகளாக என்றும் மகிழ்ச்சி அளிக்கும் .எனக்கு இத்துறையில் ஆர்வம் மட்டும் உண்டு ,எந்த தொழில்நுட்பமும் தெரியாது .இப்புகைப்படங்கள் நிக்கான் எல் 11 எனும் 6 மெகா பிக்சல் காமெர கொண்டு எடுத்தது
பல அறிய மூலிகைகளும் ,வன விலங்குகளும் நிறைந்த காடு என்று சொல்ல படுகிறது .நான் கூட ஒரு அறிய வகை சாம்பல் நிற அணிலை கண்டேன் அதை படம் எடுப்பதற்குள் தவ்வி மறைந்துவிட்டது .
அங்கும் வழி எங்கும் கொட்டி ஆங்காங்கு கிடக்கும் பாண் பராக் பாக்கேட்டுகளை ,பிளாஸ்டிக் பைகளை பாரத உடன் மனம் சஞ்சல பட்டது .மிருகங்கள் கடந்து போனதை அதன் கால் தடம் கொண்டோ ,சாணத்தின் வாடையை கொண்டோ அறிய முடியும் என்பர் ,மனிதன் வந்து போனதற்கு சிறந்த அறிகுறி பிளாஸ்டிக் பைகள், சிகரட் பொட்டிகள்,கிழிந்த உள்ளாடைகள் ,அருந்த செருப்புகள் .இவைகளை நமது அடையாளங்களாக நாம் விட்டு செல்லுகிறோம் .இன்னும் ரொட்டி பாக்கெட்டுகள் ,தண்ணீர் குப்பிகள் ,பீர் குப்பிகள் .மனம் மிகவும் வருந்தியது .கடைசி வரை நம் சுயநலம் மட்டும் தான் முக்கியமா ? ..
இது ஒரு அளப்பறியா அனுபவம் ,நல்ல நண்பர்களோடு நிச்சயம் போய் வாருங்கள்.
குறிப்பு -படங்களில் உள்ள தேதி தவறானவை ,எனக்கு அதை மாற்ற தெரியவில்லை அதனால் அது பாட்டுக்கும் ஒரு நேரத்தை காண்பிக்கிறது

குறிப்பு - எனது தமிழ் மன பரிந்துரைகள் மூன்றும் இரண்டாம் சுற்றிற்கு தேர்வாகி உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன்

பிரிவு - சமூக அரசியல் விமர்சனம்

5 comments:

  1. முதல் பத்தியிலேயே, மனதை கொள்ளை கொண்டு போக செய்து விட்டீர்கள். கண் முன் காட்சிகள் விரிய, ரசித்து வாசித்தேன். படங்கள் மேலும் அழகு சேர்த்தன.
    இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. நன்றி டி வீ ஆர் சார் ..
    சித்ரா மேடம் -அப்பா நீங்கள் பின்னூட்டம் இட்ட பின்பு தான் கொஞ்சமாவது நிம்மதியா இருக்கு :) இல்லேன யாருமே இல்லாத கடைக்கு யாருக்கு டீ ஆத்துரோம்னு தோணும்,உண்மையிலயே உங்கள பாராட்டனும் ,உங்க அளவுக்கு பொறுமையா வேற யாரும் எல்லாரோட பதிவையும் படிச்சு பின்னூட்டம் இடுகிறார்களா என்று தெரியவில்லை :)

    ReplyDelete
  3. இன்னிக்குத்தான் உங்கபக்கம் வந்தேன்.கண்முன்னாடியே பார்த்து ரசிப்பதுபோன்ற எழுத்து. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி கோமு

    ReplyDelete