Tuesday, October 5, 2010

ஆயுர்வேதம் ஒரு அறிமுகம் - 5 ஆயுர்வேதம் FAQ

1. ஆயுர்வேதம் என்பது கேரளத்தை சேர்ந்த மருத்துவமா ?

ஆயுர்வேதம் இன்று அதிகம் புழக்கத்தில் உள்ள மாநிலம் கேரளம் .மேலும் சுற்றுலா துரையின் அபார வளர்ச்சியின் காரணமாக கேரளத்தில் இதற்க்கு பெரும் வரவேற்ப்பு உள்ளது .அங்கு மக்களுக்கு இயல்பாகவே பல ஆயுர்வேத சிகிச்சை முறைகள் , மருந்துகள் பரிச்சயம் .எண்ணெய் குளியல் பிழிசில் போன்ற சிகிச்சை முறைகள் அங்கு பிரபலம் .இன்றும் பல வைத்திய பரம்பரைகள் ஆயுர்வேதத்தின் சாரத்தை மாற்றாமல் நல்ல முறையில் சிகிச்சை அளிக்கின்றனர் .இவை எல்லாம் கூறினாலும் , ஆயுர்வேதம் கேரளா மருத்துவம் என்று கூற இயலாது , இமயம் முதல் குமரி வரை எல்லா இடத்திலும் இது புழக்கத்தில் உள்ளது , வரலாற்று ரீதியாகவும் அதுவே உண்மை , ஆகவே இது இந்திய மருத்துவ முறை என்பதே சரி .

2. ஆயுர்வேதத்தில் அனைத்து நோய்களுக்கும் தீர்வு உண்டா ?

இன்றைய விளம்பர உலகத்தில் எல்லா ஊடகங்களின் வாயிலாகவும் தங்களது தனிப்பட்ட லாபத்துக்காக இவ்வாறு சில போலி மருத்துவர்கள் இந்திய மருத்துவத்தை சித்தரிக்கிறார்கள் .இது உண்மை இல்லை .ஆயுர்வேதத்தால் சில நோய்களை குணப்படுத்த முடியாது என்பதை ஆயுர்வேத மூல புத்தகங்களே அறிவிக்கிறது . எய்ட்ஸ் , புற்று நோய் இவைகளுக்கெல்லாம் இன்னும் முழுமையாக மருத்துவங்கள் எந்த முறையிலும் இல்லை .

3.ஆயுர்வேத மருந்துகளுக்கு பக்க விளைவு கிடையாது என்கிறார்களே ?

இது முழு உண்மை இல்லை .சில நேரங்களில் சிலருக்கு தேவை இல்லாத விளைவுகள் ஏற்படுவது உண்டு .ஒரே நோய்க்கு பல மருந்துகளை ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது , ஒவ்வொரு மனிதருக்கும் அவரது உடல் ,நோயின் தன்மைக்கேற்ப மருந்து வழங்கினால் எந்த பிரச்சனயும் இராது , மாறாக முறையாக தயாரித்த மருந்தை சரியான நோயாளிக்கு கொடுக்கவில்லை என்றால் நிச்சயம் விளைவுகள் இருக்கும் .ஆனால் அவை தற்காலிகமே , மருந்தை நிறுத்தினால் போதும் .மேலும் சில மருந்துகளில் உலோகங்கள் , தாது பொருட்கள் மூலமாக கொண்டு செய்யப்படுகின்றன , அதை உட்கொள்ளும் போது சற்று கவனம் தேவை .

4. ஆயுர்வேதத்திற்கு பட்ட படிப்பு உள்ளதா ? அல்லது எல்லாம் வெறும் அனுபவ ஞானம் தானா ?

நவீன மருத்துவம் போலவே ஆயுர்வேதம் , சித்த மருத்துவங்களுக்கு பட்ட படிப்பு , பட்ட மேற் படிப்பு , பட்டய படிப்பு எல்லாம் உண்டு .நவீன மருத்துவம் போலவே இதற்கும் 41/2+1 ,நாலரை வருட கல்லூரி படிப்பு மற்றும் ஒரு வருட பயிற்சி உண்டு .இதற்க்கு என்று தனி மருத்துவ கவுன்சில் உண்டு . மத்திய அரசாங்கத்தின் கீழ ஒரு துறை உண்டு , பதிவு பெற வேண்டும் .தமிழ்நாட்டில் இந்த படிப்புகள் டாக்டர் எம். ஜி .ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் கீழ அங்கீகரிக்கப்பட்டுள்ளது .தமிழக அரசு சென்ற ஆண்டு முதல் அரசு ஆயுர்வேத கல்லூரியை நாகர்கோவிலில் தொடங்கி உள்ளது .அதை தவிர சென்னையில் நான்கு தனியார் கல்லூரி உள்ளது .

5. எந்த நோய்களுக்கு ஆயுர்வேதத்தில் நல்ல பலன் கிடைக்கும் ?

அறுவை சிகிச்சை அவசிய படும் நோய்களை தவிர அனைத்து நோய்களுக்குமே ஓரளவு ஆயுர்வேதம் பயன்படும் .
சில நோய்களுக்கு நவீன மருத்துவத்திற்கு துணையாக செயல்படும் .( சர்க்கரை , ரத்த அழுத்தம் ).
நெரம்பு மண்டல நோய்கள் , மூட்டு நோய்கள் , தோல் நோய்கள் , குழந்தை பேரு , சில மன நோய்கள், ஜீரண உறுப்பு கோளாறுகள் ( வயிற்று புண் , மூலம் ) இது போன்ற நோய்களில் நல்ல பலன் கிடைக்கும்

5 comments:

  1. நல்ல தகவல்கள்...நன்றி மருத்துவரே!

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி சுந்தரா அவர்களே :)

    ReplyDelete
  3. lungs disorder க்கு மருந்து உண்டா?

    ReplyDelete
  4. என்ன பிரச்சனை என்று சொல்லுங்கள் மேடம் ,முயல்வோம்

    ReplyDelete
  5. mail me your query at nalanda.aho@gmail.com.

    ReplyDelete