ஆயுர்வேத மூல நூல்களில் ஒன்றான சரக சம்ஹிதையில் மருத்துவர்களை ‘உயிரை வளர்ப்பவர்’ (பிராணாபிசார) ‘நோயை வளர்ப்பவர்’ (ரோகாபிசார) என இரண்டாக பிரிக்கிறார். இன்று நாம் பயன்படுத்தும் போலி மருத்துவர் எனும் சொல் அன்று புழக்கத்தில் இல்லை. ‘போலி’ என்பது தகுதியை குறிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. மையமான அதிகாரம் அங்கீகாரம் வழங்கும் நிறுவனமாக இன்று செயல்படுகிறது. கல்விநிலையத்தில் கற்றவர் அசலான மருத்துவர். கற்காதவர் போலி மருத்துவர். கற்ற அசல் மருத்துவர் திறனற்றவரா இல்லையா என்பது ஒரு பொருட்டே அல்ல. இந்த கோணத்திலிருந்து அசல் - போலி எனும் இருமை சார்ந்த உரையாடலை காட்டிலும் சரகரின் பகுப்பு பொருளுடையதாக இருக்கிறது. இதை யோகத்திற்கும் பொருத்திப் பார்க்கலாம். பரந்தபார்வையோ திறமையோ அற்ற யோகாசிரியர்களுக்கும் தேர்ந்த பயிற்சியும் ஞானமும் கொண்ட ஆசிரியர்கள் மிகக்குறைவு. எங்களது குடும்ப நண்பரும் தேர்ந்த இலக்கிய வாசகருமான சவுந்தர் அருகிவரும் பிந்தைய பிரிவைச் சேர்ந்தவர். புற்றீசலாக யோகாசிரியர்கள் தோன்றுவதை எப்படிப் புரிந்துகொள்வது?