Showing posts with label பைரப்பா. Show all posts
Showing posts with label பைரப்பா. Show all posts

Sunday, May 21, 2017

ஒரு குடும்பம் சிதைகிறது - பைரப்பா

(சொல்வனம் இதழில் வெளியான கட்டுரை)

சாதி, மத, இன பகுப்புக்களுக்கு அப்பால் மானுட வரலாற்றில் பெரிதும் சுரண்டப்பட்ட ஓரினம் உண்டெனில் அது பெண்ணினமாகத்தான் இருக்கும். இனம் என்று வரையறுக்கலாமா என்று தெரியவில்லை! நானொரு பெண்ணியவாதி அல்லன். நவீன பெண்ணியத்தின் அடிப்படைகளை, இயங்குதளங்களை அறிந்தவனும் அல்லன். ஆனால் கன்னட நாவலாசிரியர் பைரப்பாவின் ‘ஒரு குடும்பம் சிதைகிறது’ நாவலை வாசித்து முடிக்கையில் ஏற்பட்ட முதலுணர்வு என இதைத்தான் சொல்லவேண்டும். நஞ்சம்மாவின் கதை என் பாட்டியின், முப்பாட்டியின் சொல்லப்படாத துயரங்களின் கதை.