Showing posts with label பிரார்த்தனை. Show all posts
Showing posts with label பிரார்த்தனை. Show all posts

Friday, June 24, 2011

கடவுளுக்கு ஒரு விண்ணப்பம்


பலர் பல பெயரால் பணிபரம் பொருளே
உலகில் ஓர் அணுவும் உனையலாது அசையாது
என்னும் உரை நினைந்து உன்னை வேண்டுவல் இது
முன்னை நாள் இளமையும் முடிவிலா வாழ்வும்
உதவினை சிலர்க்கு என ஓதுவார் ஒரு கதை
இதமுற அவ்வரன் எனக்கு நீ உதவினும்
கொள்ளேன் தள்ளோணாச் சள்ளையே கொடுக்குமால்
செல்வமும் இன்பமும் செல் சினச் செருக்கும்
நல்கு என நயவேன் நன்மைதீர் வறுமையும்
பலப்பல இன்னலும் விலக்கு எனப் பணிகிலேன்
நன்றே வருகினும் தீதே விளைகினும்
ஒன்றே என மதித்து ஏற்கும் என் உள்ளம்
வேண்டிலேன் கீர்த்தி ஈண்டு அது நிகர்க்கும்
வறிய பேய்த் தேர் எனறிவேன் மற்று யான்
உன்னை இன்று இரப்பது என்ன வெனில் கேள்
என்னின் எளியவர்க்கு என்னால் இயன்றதை
மன்னும் என் அகஒளி காட்டும் வழியினில்
உன்னி யுழைக்க உகந்தருள் அதன் பொருட்டு
இந்த என் உடல் இருக்கு நாள் மட்டும்
நொந்து நோவாதருள் நோய் வருமாயினும்
மனமும் அறிவும் மயங்கி விடாது அருள்
தினமும் இதுவே செய்யும் அவா அருள்
உடல்வலியோயுமேல் மனோவலி நிலைபெராவிடில்
உடனே உயோர் ஒழிந்து உலக
நடனசாலையை நான் நழுவிட அருள்கவே
.
(தனி பாடல் திரட்டு - கடவுளிடம் விண்ணப்பம் -குருவென நான் கருதும் -டாக்டர் .மகாதேவன் எழுதிய திரிதோஷ மெய்ஞான தத்துவ விளக்கம் எனில் நூலிலிருந்து இங்கு பதிக்க பட்டுள்ளது )
முதல் வாசிப்பிலயே என்னை கரைய செய்த வரிகள் ,இறைவன் எனும் கட்டமைப்போ /சக்தியோ /உருவமோ /அருவமோ /பிரபஞ்ச நியதியோ -அது எதுவாக இருந்தாலும் மனமார ,உளமார என் உள்ளம் வேண்டுவது இதுவே .