புத்தகங்கள்

Pages

Monday, January 1, 2024

பார்ன்ஸ்- எட்மண்டோ பாஸ் சோல்டன் (Edmundo Paz Soldan)

(பொலிவிய எழுத்தாளர்- ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர் Kirk Nessat)

https://press.uchicago.edu/ucp/books/author/P/E/au19415705.html


இவை எல்லாமே ஏதோ ஒரு பிழை, தனது சிறையில் அடைபட்டிருந்த பார்ன்ஸ் புரிந்துகொண்டார், அவர் உண்மையை சொல்வதே சரியானதாக இருக்கும். எனினும், பின்னர் மங்கலான அறையில், வெளிச்சத்தால் கண்களில் பார்வையற்று போன சமயத்தில், அதிபரை கொன்ற குற்றச்சாட்டு குறித்து விசாரணை தொடங்கியபோது,, தனது வாழ்வின் சாதாரணத்தன்மை குறித்தும், தனது வாழ்க்கையின் மாபெரும் முக்கியத்துவமின்மை குறித்தும் அவர் சிந்தித்ததன் விளைவாக, முதன்முறையாக எவ்வித பயனும் அற்ற முக்கியத்துவத்தின் எடையை உணர்ந்தவராக, ஆமாம், அதிபரை அவரே கொன்றதாக சொன்னார். அதன்பின்னர் தரபாகா படையில் இருந்த இருநூற்றி எண்பத்தியேழு படைவீரர்களை கொன்ற வெடிகுண்டை புதைத்ததாக குற்றம் சாட்டப்பட்டார். வெறுப்புடன் சிரித்தபடி, பழியை தழுவிக்கொள்வதை மட்டுமே அவரால் செய்ய முடிந்தது. பின்னர் இடைவெளியே இல்லாமல், பொலிவியாவின் பொருளாதாரம் வீழ காரணமாயிருந்த எரிவாயு குழாயை சிதைத்ததையம்,, கோச்சா பாம்பா வனப்பகுதியின் தொண்ணூற்றி இரண்டு சதவிகிதத்தை கபளீகரம் செய்த நெருப்பை பற்றவைத்ததையும், பாதிவழியில் பறந்துகொண்டிருந்த நான்கு LAB ஜெட் விமானங்களை வெடிக்க வைத்ததையும், லா பாஸின் வட அமெரிக்க தூதுவரின் மகளை வன்புணர்வு செய்ததையும் ஒப்புக்கொண்டார். மறுநாள் சூரியோதயத்தின்போது அவரை அவர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொள்வார்கள் என அறிவித்தார்கள். ஆம், அவரைப்போன்ற வாழ உரிமையற்ற ஒரு மனிதரை அவர்கள் அப்படித்தான் செய்ய வேண்டும் என அவரும் ஒப்புக்கொண்டார். 


No comments:

Post a Comment